காரைக்காலில் எட்டாவது வகுப்பில் படிக்கும் தன் மகளைவிட நன்றாக படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு விஷம் கொடுத்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவைக் கைது செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகரில் சர்வைட் தனியார் நடத்தும் மேல்நிலைப்பள்ளியில் நேரு நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ப் பகுதியில் வசிக்கும் இராஜேந்திரன் - மாலதியின் மகன் பாலமணிகண்டன் எட்டாம் வகுப்பு படிக்கும் நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற பாலமணிகண்டனுக்கு மாலையில் வீடு திரும்பியதும் வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பாலமணிகண்டனிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரின் தாய், பள்ளிப் பாதுகாவலரிடம் தன்னுடைய தாய் தந்ததாக சொல்லி குளிர்பானப் பாட்டில் கொடுத்ததாகவும்,
அதைப் பாதுகாவலர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை அருந்திய பிறகே மயக்கம், வாந்தி உள்ளிட்டவை வந்ததாகவும் மாணவர் தனது பெற்றோரிடம் கூறியிருக்க அதை அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்ல அது வேகமாகப் பரவியது அதனால் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தங்கள் மகன் நன்றாக படிப்பவர். வகுப்பில் முதல் மார்க் எடுப்பவர். அதனால் கூட படிக்கும் மாணவி எப்போதும் இந்த மாணவரிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். அந்த மாணவிக்கு இவர் மீது கோபம் இருந்திருக்கிறது.
அதனால் தான் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் என மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டவே பள்ளியில் பதிவான சிசிடிவியின் காணொளிகீ காட்சிகளைப் பார்வையிட்ட போது மாணவியின் தாய் சகாயமேரி பள்ளி காவலரிடம் குளிர்பானம் கொடுத்த காட்சிகள் பதிவாகியிருந்தது.
குறித்து காரைக்கால் காவல் நிலையம், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநில கல்வித்துறை அமைச்சர், புதுவை தலைமைச் செயலாளர், துணைநிலை ஆளுநர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் மாணவியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்