தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் படி அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூபாய்.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் ஜுலை மாதம் 10 ஆம் தேதி வரை பெறப்பட்டு விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டதில் மாணவிகள் கல்லூரியில் மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் 7-ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட. இந்தத் திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டு 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்களென கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் புதிய நூலகத்தை பார்வையிட்டார்.
பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டது. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இந்த்திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் துவங்கிய திட்டம் மாவட்டம் அளவிலும் துவங்கி வைக்கப்பட்டது.
கருத்துகள்