முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

10 லட்சம் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்

10 லட்சம் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்

"நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசு துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளது"

"கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது"

"முத்ரா யோஜனா என்ற சுயதொழில் திட்டம் இதற்கு முன் செயல்படுத்தப்படவில்லை"

"நாட்டின் இளைஞர்களை நமது மிகப்பெரிய பலமாக நாங்கள் கருதுகிறோம்"

"அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரே நேரத்தில் பல முனைகளில் செயல்படுகிறது"

"21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அரசு சேவை என்பது கால வரம்பிற்குள் சேவை செய்து முடிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பாகும்"

"அலுவலகங்களின் கதவுகள் வழியாக நீங்கள் உள்ளே செல்லும் போதெல்லாம் உங்கள் 'கடமைப் பாதை'யை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்"

10 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு பெற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், தன்தேராஸ்  வாழ்த்துக்களுடன் தொடங்கினார். "கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு பிரச்சாரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு மேளா புதிய வடிவம் அளித்துள்ளது", என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 75,000 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். "ஒரே நேரத்தில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம், இதனால் திட்டப்பணிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கூட்டு மனோபாவம் துறைகளில் உருவாகிறது" என்று அவர் கூறினார். வரும் நாட்களிலும், தேர்வர்கள் அவ்வப்போது அரசிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெறுவார்கள். "தேசிய ஜனநாயகக் கூட்டணி  மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதேபோன்ற மேளாக்களை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக, நாம் தற்சார்பு இந்தியா என்ற பாதையில் முன்னேறி வருகிறோம் என்று புதிதாக நியமிக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கூறினார். இந்தியாவை தன்னம்பிக்கை பாதைக்கு கொண்டு செல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். அனைவரது முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தப் பயணத்தில் அனைவரின் முயற்சிகளும் முக்கியமானவை என்றும், அனைத்து முக்கியமான வசதிகளும் அனைவரையும் சென்றடையும் போதுதான் இந்த உணர்வு சாத்தியமாகும் என்றும் கூறினார்.

லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சில மாதங்களில் முடித்து, பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்றார். "இன்று, வேலை கலாச்சாரம் மாறி வருகிறது," என்று அவர் கூறினார். "நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசுத் துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது சிரமமான செயலாக இருந்த நாட்களை அவர் நினைவு கூர்ந்தார். மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுய சான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற தமது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு உதவியுள்ளன என்றார்.

இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 7-8 ஆண்டுகளில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களின் மகத்தான தன்மையை ஒப்புக்கொண்ட பிரதமர், எதிர்மறையான விளைவுகளை இந்தியாவால் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். "கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய அந்த குறைபாடுகளை நாங்கள் அகற்றியதால் இது சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.

விவசாயம், தனியார் துறை மற்றும் எம்எஸ்எம்இ போன்ற அதிக வேலை வாய்ப்புள்ள துறைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஒளிமயமான எதிர்காலத்திற்காக இந்தியாவின் இளைஞர்களை திறமையாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இன்று நாங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் தொழில்களின் தேவைக்கேற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது”, என்றார். திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கௌசல் விகாஸ் மையங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். ட்ரோன் கொள்கையை தாராளமயமாக்குதல், விண்வெளிக் கொள்கையைத் தனியாருக்கு இடமளிப்பது, முத்ரா திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் போன்ற முன்முயற்சிகள் செயல்முறையை மேலும் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இதற்கு முன் இந்த அளவிலான சுயதொழில் திட்டம் மாவட்டங்களில்  செயல்படுத்தப்படவில்லை, என்றார் அவர்.

சுயஉதவிக் குழுக்களைத் தவிர, கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு காதி மற்றும் கிராமியத் தொழில் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். நாட்டிலேயே முதன்முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களில் 4 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. "நமது ஏராளமான சகோதரிகளுக்கு இதில் பெரும் பங்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்

ஸ்டார்ட்-அப் இந்தியா பிரச்சாரம், உலகம் முழுவதும் உள்ள நாட்டின் இளைஞர்களின் திறனை நிலைநாட்டியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேபோல், தொற்றுநோய்களின் போது எம்எஸ்எம்இ-க்கள் பெரிய அளவில் ஆதரிக்கப்பட்டன, சுமார் 1.5 கோடி வேலைகளைப் பாதுகாத்தன. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் என்பது நாட்டில் உள்ள 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டில் நாட்டிற்கு மிகவும் லட்சியமான திட்டம் 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா ஆகும். இறக்குமதியாளராக இருந்து இன்று நாடு வளர்ந்து வரும் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக பல விஷயங்களில் நகர்கிறது. இன்று உலக மையமாக இந்தியா வேகமாக முன்னேறி வரும் இதுபோன்ற பல துறைகள் உள்ளன. சாதனைகளை முறியடிக்கும் ஏற்றுமதிகளும் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் காட்டுவதாக அவர் கூறினார்.

"உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறைகள் இரண்டிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதால், அரசு அத்துறைகளில் விரிவாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து, தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி, உலகின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான செயல்முறைகளும் எளிமைப்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிஎல்ஐ திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. அதிக உற்பத்தி, அதிக ஊக்கம், அதுதான் இந்தியாவின் கொள்கை. அதன் முடிவுகள் இன்று பல துறைகளில் ஏற்கனவே தெரிகின்றன. வேலை வாய்ப்பு தொடர்பான அரசின்  கொள்கைகள் எந்தளவுக்கு நிலைமையை மேம்படுத்தியுள்ளன என்பதை கடந்த ஆண்டுகளில் வரும் இபிஎஃப்ஓ எனப்படும் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவு காட்டுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுமார் 17 லட்சம் பேர் இபிஎஃப்ஓ-வில் சேர்ந்து, இப்போது நாட்டின் முறையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். சுமார் 8 லட்சம் பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் அம்சத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், ரயில் பாதைகளை மாற்றுதல் மற்றும் மின்மயமாக்குதல் போன்ற பணிகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், புதிய நீர்வழிப் பாதைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன” என்று திரு மோடி  கூறினார்.


நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரே நேரத்தில் பல முனைகளில் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு தொடர்பாக நூறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இலக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.  உள்ளூர் மட்டத்தில் இளைஞர்களுக்கு இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்தும் பணிகளை விளக்கிய பிரதமர், நவீன உள்கட்டமைப்புக்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் சுற்றுலாத் துறைக்கு புதிய ஆற்றலை வழங்குவதுடன், தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.


இந்தியாவின் மிகப்பெரிய பலம் தேசத்தின் இளைஞர்களிடம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். விடுதலையின் அமிர்த காலத்தில்,  வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் உந்து சக்தியாக அவர்கள் உள்ளனர். புதிய பணி நியமனம் பெற்றவர்கள் அலுவலகங்களின் கதவுகள் வழியாக உள்ளே செல்லும்போது அவர்களின் கடமைப் பாதையை எப்போதும் மனதில் கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார். "நாட்டின் குடிமக்களின் சேவைக்காக நீங்கள் நியமிக்கப்படுகிறீர்கள்" என்று பிரதமர் கூறினார். 21 ஆம் நூற்றாண்டில் இந்திய அரசு வேலை என்பது வசதியான வாழ்க்கை என்பதுடன் இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் மக்களுக்குச் சரியான நேரத்தில் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று கூறி  பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்