முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உலக தர நிர்ணய தின நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உலக தர நிர்ணய தின நிகழ்ச்சி "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை


இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

சர்வதேச தர நிர்ணய அமைவனம் (ISO) , சர்வதேச மின்னணு தொழில் நுட்ப கூட்டமைப்பு (IEC), சர்வதேச தகவல் தொடர்பு கூட்டமைப்பு (ITU) இவற்றின் வல்லுநர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 14-ம் தேதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும், சர்வதேச நிலையை மனதில் கொண்டு ஒரு தலைப்பில் / பொருளில் கொண்டாடப்படுகின்றது. உலக தர நிர்ணய தினத்தின் ஒரு பகுதியாக BIS தென்மண்டல அலுவலகம், சென்னை மூவர்ணக் கொடியால் பிரகாசிக்கப்பட்டது மற்றும் உலக தரநிலைகள் தின THEME  குறித்த செய்திகள் மற்றும் ISI  முத்திரை கட்டாயமாக்கப்பட்ட  பொருட்கள் பற்றி பொதுமக்களுக்கான டிஜிட்டல் திரைகள் மூலம்  காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வருடத்திற்கான தலைப்பு / பொருள் "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை ". இந்திய தர நிர்ணய அமைவனம் - தென் பிராந்திய அலுவலகம், சென்னை, இந்த உலக தர நிர்ணய தினத்தை (மானக் மஹோத்ஸவ்) அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, சென்னையில் இன்று கொண்டாடியது.

ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி எஃப் & துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு பிராந்தியம்), பிஐஎஸ், தனது வரவேற்பு உரையின் போது தர நிர்ணயங்களின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அது வகிக்கும் பங்கை வலியுறுத்தினார். சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து  சமகால நவீன உலகம் வரையிலான தரநிலைகளின்  பரிணாம வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்கானகண்டுபிடிப்புகளை  கொண்டு வருவதிலும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தரப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பார்வையாளர்களுக்கு விளக்கினார். ஒரு சிறந்த உலகத்திற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகளின் பங்கை அவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.ஆர்.வேல்ராஜ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவரது உரையின் போது அவர் நுணுக்கமான செய்திகள் மூலம்  நிலைத்தன்மை மற்றும் ஆண்டுகாலமாக இருக்கும் நடை முறைகள் பற்றி  பார்வையாளர்களை அறிவூட்டினார். அவர் என்ட்ரோபி, சிஸ்டம் மற்றும் சுற்றுப்புறங்கள் பற்றிய  கருத்துகளை வெப்ப இயக்கவியலில் (thermo  dynamics ) இருந்து தற்கால உலகிற்கு தொடர்புபடுத்தினார். ஒருவர் சிட்டத்தை சிறப்பாக  மாற்றும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள பிரச்சனைகள்  அதிகரிக்கின்ற நிலையும் அதை குறைந்தபட்சமாக வைத்திருப்பதே சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர், தற்போதைய சென்னை மெட்ரோ வெள்ள மேலாண்மைக் குழுவின் தலைவருமான Dr.V.திருப்புகழ், IAS (ஓய்வு)  தொழில்நுட்ப அமர்வின் தலைவராக கலந்து கொண்டு நிகழ்வை நடத்திக்கொடுத்தார். Dr.V.திருப்புகழ் அவர்கள் Sendai Framework ( பேரழிவு அபாயத்தின் முப்பரிமாணங்களை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறது),  நிலையான வளர்ச்சி இலக்குககளின் ஒன்றோடொன்றான  தொடர்பைக் குறிப்பிட்டார். அனைத்து 17 நிலையான வளர்ச்சி இலக்குகளும்  ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமை அடைய வேண்டும் என்றும் , இதுவே பொருளாதார மற்றும் உயிர் இழப்பை தடுக்கும் என்றார்.

சிறப்புப் பேச்சாளர்கள் குழு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களைக் கொண்டிருந்தது.  அவர்கள் " மேம்பட்ட வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை "என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து கொண்டனர்

நுட்ப அமர்வில், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட  டாக்டர் எஸ்.ஜனகராஜன், முன்னாள் பேராசிரியர், MIDS & தலைவர் SaciWATERS ஹைதராபாத் சுத்தமான நீர் மற்றும் சுத்திகரிப்பு பற்றி பேசினார். அவரது  அதிகரித்து வரும் நீர் தேவை  மற்றும் குறைந்து வரும் நீர் வளம்  பற்றி அவர் குறிப்பாக இந்தியாவின் தண்ணீர் சூழ்நிலையைப் பற்றி பேசினார், உலகின் தனிநபர் நீர் கிடைப்பதில் இந்தியா 50 வது இடத்தில் உள்ளது. உலகின் புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தில் 4% இந்தியாவிடம் உள்ளது. விவசாய நீருக்கான கிடைக்கும் நீர் தொடர்பான பிரச்சனைகளையும் அவர் விளக்கியதோடு , நீர் பயன்பாடு மற்றும் இருப்பு நிலைத்தன்மையின் நிலைத்தன்மையின் அதிகரிப்புக்கான காரணங்களை மேற்கோள் காட்டினார்.

ஐஐடி-மெட்ராஸின் பேராசிரியர் ஸ்ரீ ரமேஷ் கர்தாஸ், நிலையான இரசாயன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தீங்கற்ற கரைப்பான்கள் பற்றி உரையாற்றினார். நிலையான தீர்வுகளை உருவாக்க அடிப்படை அறிவியலை,  பொறியியல் துறையுடன்  ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

ஸ்ரீ எஸ்.குமாரசாமி, முன்னாள் நிர்வாக இயக்குனர், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தொழில், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு & காலநிலை நடவடிக்கை பற்றி பேசினார். சுரங்கத் தொழிலில் நல்ல நடைமுறைகள் மற்றும் சுரங்கத் தொழிலில் SDG கள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பதை விளக்கினார். பசுமை சுரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறையின் கருத்தையும் அவர் விளக்கினார்

முன்னதாக, திருமதி.ஜி.பவானி, விஞ்ஞானி-E , இயக்குநர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்-,BIS)  உலக தர நிர்ணய தின செய்தியை தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தேசிய தரநிலை அமைப்புகளில் BIS இன் தனித்துவத்தை அவர் விளக்கினார்.

WSD Theme மற்றும்  முக்கியத்துவத்தை விஞ்ஞானி-F  & தெற்கு மண்டல ஆய்வக  தலைவர் திருமதி மீனாட்சி கணேசன் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் WSD இன் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.  இந்திய சூழ்நிலையை மையமாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சட்டங்களை மேற்கோள் காட்டி ஒவ்வொரு நிலையான வளர்ச்சி இலக்கையும் அவர் விளக்கினார்.

விஞ்ஞானி-பி ஸ்ரீ துர்கா பிரசாத் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...