முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராம்லாலா விரஜ்மானை தரிசித்து பூஜை செய்த பிரதமர்

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராம்லாலா விரஜ்மானை தரிசித்து பூஜை செய்த பிரதமர்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தளத்தை ஆய்வு செய்கிறார்

தீபாவளியை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு இன்று சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, பகவான் ஸ்ரீ ராம்லாலா விரஜ்மானை தரிசனம் செய்து பூஜை செய்தார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைந்துள்ள  இடத்தை பிரதமர் பார்வையிட்டார். இந்த புனிதத் திட்டத்துடன் தொடர்புடையவர்களுடனும்,


கோவிலை உருவாக்குபவர்களுடனும் குறிப்பாக தொழிலாளர்களுடனும் பிரதமர் உரையாடினார்.மேலும் பிரமாண்டமான தீபோத்சவ் கொண்டாட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
தீபாவளியை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட தீபோத்சவ விழாவைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சரயு நதிக்கரையில் உள்ள ராமர் பாதத்தில்  3-டி (முப்பரிமாண)  வரைபடக்காட்சியையும், பிரமாண்ட இசையுடன் லேசர் காட்சியையும்  பிரதமர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ராமரைப் பாராட்டி, அயோத்தி இன்று தீபங்களின் ஒளியால் தெய்வீகமாகவும், உணர்ச்சிகளால் பிரமாண்டமாகவும் உள்ளது என்றார். "அயோத்தி இன்று இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியின் பொன்னான அத்தியாயத்தின் பிரதிபலிப்பாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக ராஜ்யாபிஷேகத்திற்கு இங்கு வந்தபோது தமக்குள் உணர்ச்சிகளின் வேகத்தை உணர்ந்ததாகப்  பிரதமர் கூறினார். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு பகவான் ஸ்ரீராமர் திரும்பும்போது அயோத்தி எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதைப் பிரதமர் எண்ணிப்பார்த்து வியந்தார்.  "இன்று, இந்த அமிர்த காலத்தில், ராமரின் ஆசீர்வாதத்துடன், அயோத்தியின் தெய்வீகத்தன்மையையும் அழியாத தன்மையையும் நாம் காண்கிறோம்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.


உபநிடதத்தை மேற்கோள் காட்டிய  பிரதமர், வெற்றி வாய்மைக்கு உரியது, பொய்மைக்கு அல்ல என்றார். ராமனின் நன்னடத்தைக்கே எப்போதும் வெற்றி கிடைக்கும், ராவணனின் தவறான நடத்தைக்கு அல்ல என்ற நமது ஞானிகளின் வார்த்தைகளையும் பிரதமர் மேற்கோள் காட்டினார். உடல் எனும் விளக்கில் உள்ள உணர்வு சக்தி பற்றி குறிப்பிட்ட அவர், ஞானிகளை மேற்கோள் காட்டி, விளக்கின் ஒளியே பிரம்மாவின் வடிவம் என்றார். இந்த ஆன்மீக ஒளி இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் என்ற தமது நம்பிக்கையைத்  திரு மோடி வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன் குஜராத்தியில் தாம் எழுதிய  ‘தியா’ எனும் விளக்கைப் பற்றிய கவிதையிலிருந்து சில வரிகளைப்  பிரதமர் கூறினார். விளக்கு நம்பிக்கையையும் வெப்பத்தையும் நெருப்பையும் இளைப்பாறுதலையும் தரும் என்ற கவிதையின் பொருளை விளக்கிக் கூறினார். உதிக்கும் சூரியனை அனைவரும் வழிபட்டாலும், இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் ஆதரவாக இருப்பது விளக்கு( தியா)தான். மக்கள் மனதில் அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டுவரும் அதே வேளையில், இருளைப் போக்க விளக்கு தன்னைத் தானே எரித்துக்கொள்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இடைக்காலத்திலும், நவீன காலத்திலும் இருண்ட காலத்தின் மோசமான விளைவுகளை இந்தியா எதிர்கொண்டாலும், நாட்டு மக்கள் விளக்கு ஏற்றுவதை நிறுத்தவில்லை, நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதை நிறுத்தவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா நெருக்கடியின் போது ஒவ்வொரு இந்தியரும் ஒரே உணர்வில் விளக்கேற்றியதையும், பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உலகமே சாட்சியாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். "கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு இருளிலிருந்தும் இந்தியா வெளிவந்ததுடன்  முன்னேற்றப் பாதையில் அதன் வலிமையின் ஒளியைப் பரப்பியது" என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...