முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரையில் தனியார் வளர்ப்பு யானை மீட்பு

மதுரையில் தனியார்  வளர்ப்பு யானை மீட்பு,


யானையை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி மீட்டு திருச்சிராப்பள்ளிக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர் . யானை அரசின் அனுமதியுடன் மதுரை மாநகர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த விமலன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார். உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அதற்கு சுமதி எனப் பெயரிட்டார்  தற்போது 58 வயதாகும்  யானை நடிகர் சூர்யா நடித்த 7ஆம் அறிவு, தாஜ்மஹால், நேருக்கு நேர், 'கடைசி விவசாயி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் சம்பளம் பெற்று  நடிக்கவும் வைத்துள்ளதுடன் ன்  அந்த வளர்ப்பு யானையை நடைப்பயிற்சி என்று தெருவில் பிச்சை எடுப்பது உள்ளிட்ட   பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக பல  புகார் எழுந்தது.    இந்த நிலையில்  மதுரை நிவாஸ், என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஏற்கனவே   தாக்கல் செய்த மனுவில்:-

மதுரை மாநகரில் தனியாரிடம் பெண் யானை ஒன்று பராமரிக்கப்படுகிறது. அதற்கு சுமதி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானையை பராமரிப்பதற்காக வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட உரிமம் கடந்த ஆண்டே காலாவதியாகி விட்டது. அதன்பின் அந்த உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் எந்த விதமான கேள்வியும் எழுப்பவில்லை. இந்த யானையை, பொதுமக்களிடம் பிச்சை எடுக்க வைத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அதை வளர்ப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். திருமணம், இறப்பு, திரைப்படம் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களுக்கும் இந்த பெண் யானையை கூலி வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இது யானைகள் பராமரிப்பு சட்டத்தின் படி தவறான நடவடிக்கையாகும்.

எனவே தனியாரிடமிருந்து யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு  தலைமை வனப் பாதுகாவலர், மற்றும் மதுரை மாவட்ட வனப் பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

என மனுவில் கூறியிருந்த மனு.

வழக்கு  பட்டியலிடப்பட்டு  நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது.

வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் வனத்துறை அலுவலர்கள் இலஞ்சம் பெறுவதும், உரிமம் புதுப்பிப்பதும் தடுக்கப்பட்டது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாதென்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக சுமதி யானைக்கான கால உரிமம் புதுப்பித்தலுக்காக வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வனத்துறை அலுவலர்கள் அதை புதுப்பிக்க மறுத்த நிலையில் உரிமம் தாமதமான நிலையில் வனத்துறைணஉரிமம் வழங்கக் கோரி அந்த  யானை வளர்ப்பவர்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  வழக்குத் தொடரப்பட்டதையடுத்து வழக்கில் ஏதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்ட  வனத்துறை அலுவலர் சார்பில் அரசு வழக்கறிஞர் அளித்த பதிலின் அடிப்படையில் யானையை முறையாக பராமரிப்பதற்கான வசதிகள் இல்லை என கூறி யானையை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.  அதனடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் உத்தங்குடி சென்று வளர்ப்பு யானை சுமதியை மீட்டு லாரி மூலமாக திருச்சிராப்பள்ளி  எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை சட்ட விதிகளை மீறி தனிநபர் வளர்ப்பு யானை பறிமுதலானது . வனத்துறை சட்டத்தின் படி கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கும் நிலையே தவறு எனும் நிலையில் யானை வளர்த்து அதை பயன் படுத்தி வருவாய் பெறுவது குற்றம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...