முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவர் காவலர்கள் பதக்கங்கள் 30 சிபிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெறுகின்றனர்

 30 சிபிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் காவலர்கள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றது .


30 சிபிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களது சீரிய சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் காவலர்கள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டுக்கான  குடியரசு தினவிழாவில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.   

இதில் புகழ்பெற்ற சேவை புரிந்த 6 அதிகாரிகள் / பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் காவலர் பதக்கங்களும் (Distinguished Service), 24 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் காவலர் பதக்கங்கள் (Meritorious Service) வழங்கப்படுகின்றன.


இந்த 30 பேரில்  புதுதில்லி, சென்னை, காஸியாபாத், பெங்களுரு ஆகிய நகரங்களின் சிபிஐ அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 


 நாட்டின் 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு மேதகு பாரதக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டுமக்களுக்கு விடுக்கும் செய்தி

எனதருமை நாட்டு மக்களே,

வணக்கம்!

1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் தொடங்கி தற்போது வரை, பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்திருக்கும் ஒரு ஆச்சரியமான பயணமாகவே இது இருந்திருக்கிறது. இந்த இந்தியக் கதை ஒவ்வொரு இந்தியரின் பெருமைக்கும் காரணமாக அமைகிறது. குடியரசுத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு நாடு என்ற வகையில் நாம் சாதித்திருப்பவற்றை நாம் கொண்டாடுகிறோம்.

2. இந்தியா மிகத் தொன்மையான, வாழும் நாகரீகங்களின் இருப்பிடமாக இருக்கிறது. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். ஒரு நவீனக் குடியரசு என்ற முறையில், நாம் இளமைத்தன்மை கொண்டவர்கள் தாம். சுதந்திரத்தின் தொடக்கக்காலத்தில் நாம் கணக்கற்ற சவால்களையும், இடர்களையும் சந்தித்தோம். நீண்டகால அந்நிய ஆட்சியின் பல தீய விளைவுகளில், உச்சபட்ச ஏழ்மையும், கல்வியறிவின்மையும் இரண்டு விளைவுகள் மாத்திரமே. இருந்த போதிலும் இந்தியா என்ற உணர்வு கலங்கவில்லை. நம்பிக்கையும், உறுதிப்பாடும் துணைக்கொண்டு, நாம் மனிதகுல வரலாற்றின் மிகத் தனித்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையில் ஈடுபட்டோம். இத்தனை பெரிய, பல்வகைப்பட்ட பேரெண்ணிக்கை கொண்ட மக்கள், ஓரு நாடாக இருப்பது என்பது வரலாறு காணாதது. இதை நாம் செய்தமைக்கு, நாம் அனைவரும் ஒன்று, நாமனைவரும் இந்தியரே என்ற நம்பிக்கை மட்டுமே காரணம். பல்வேறு மொழிகளும், பிரிவுகளும் நம்மை பிரிக்கவில்லை, நம்மை ஒன்றிணைக்கவே செய்திருக்கின்றன என்பதன் காரணமாகவே நம்மால் ஒரு ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது தான் இந்தியாவின் சாராம்ஸம்.

3. இந்த மையக்கரு தான் அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமாக இருந்து, காலத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடித்திருக்கிறது. குடியரசின் வாழ்க்கையை இயக்கத் தொடங்கிய அரசியலமைப்புச் சட்டம் தான் விடுதலைப் போராட்டத்தின் வெளிப்பாடு. காந்தியடிகள் வழிநடத்திய தேசிய இயக்கத்தின் நோக்கம் சுதந்திரத்தை வென்றெடுப்பது என்றாலும், நமக்கான ஆதர்சங்களை மீள்கண்டுபிடிப்பு செய்வதும் கூட இதன் நோக்கங்களில் ஒன்று. காலனியாதிக்கத்திலிருந்தும் சரி, திணிக்கப்பட்ட விழுமியங்கள், குறுகிய உலகப் பார்வைகள் போன்றவற்றிலிருந்தும் சரி, விடுதலை பெற்றுத் தருவதில், பல தசாப்தப் போராட்டமும் தியாகமும் நமக்கு உதவியிருக்கின்றன. புரட்சியாளர்களும், சீர்திருத்தவாதிகளும், தொலைநோக்குச் சிந்தனையாளர்களோடும், ஆதர்சவாதிகளோடும் கைகோர்த்து, நமது பண்டைய நற்பண்புகளான அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றைக் கற்க நமக்கு உதவியிருக்கிறார்கள். நவீன இந்திய மனதை உருவாக்கியவர்கள், ஆனோ பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வத:, Let noble thoughts come to us from all directions என்ற வேதக்கூற்றுப்படி, அயல்நாடுகளிலிருந்தும் முற்போக்குக் கருத்துக்களை வரவேற்றார்கள். ஒரு நீண்ட, ஆழமான எண்ணச் செயல்பாடு, நமது அரசியலமைப்புச் சட்டமாக வடிவம் பெற்றது.

4. உலகின் மிகத் தொன்மையான, வாழும் நாகரீகத்தின் மனிதநேய தத்துவத்தாலும், அண்மைக்கால சரித்திரத்தில் உருவான புதிய கருத்துக்களாலும் கருத்தூக்கம் பெற்றது தான் நமது அடிப்படை ஆவணம். அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்தபடியால், இறுதி வடிவம் கொடுக்கும் முக்கியமான பங்கு வகித்த டா. பி. ஆர். அம்பேட்கருக்கு தேசம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். இந்த நாளன்று, தொடக்கக்கட்ட வரைவை உருவாக்கிய சட்டவல்லுனர் பி.என். ராவ் அவர்களின் பங்களிப்பையும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் உதவிய பிற வல்லுனர்களையும், அதிகாரிகளையும் நாம் நினைவுகூர வேண்டும். அந்தச் சபையின் உறுப்பினர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகள், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதில் 15 பெண் உறுப்பினர்களும் இருந்தார்கள் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.

5. அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய தொலைநோக்கு நமது குடியரசைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. இந்தக் காலகட்டத்தில், பெரும்பாலும் ஒரு ஏழை-கல்வியறிவில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி, உலக அரங்கிலே தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஒரு தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கூட்டு ஞானம் நம்மை வழிநடத்தாமல் இதை நம்மால் சாதித்திருக்க முடியாது.

6. பாபாசாஹேப் அம்பேட்கரும் பிறரும், நமக்கு ஒரு வரைபடத்தையும், தார்மீகக் கட்டமைப்பையும் அளித்தாலும், அந்தப் பாதையில் பயணிப்பது என்பது நமது பொறுப்பாக இருந்தது. நாம் பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மெய்யானவர்களாகவே நடந்திருக்கும் அதே வேளையில், காந்தியடிகளின் ஆதர்சமான சர்வோதயம் என்ற அனைவரின் நிலையையும் உயர்த்தல் என்பது நிறைவேற்றப்படாமல் இன்னும் எஞ்சி இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும், அனைத்து முனைகளிலும் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

7. சர்வோதயம் என்ற நமது இலக்கு நோக்கிய பயணத்தில், பொருளாதாரப் புறத்தில் நாம் கண்டுள்ள முன்னேற்றம் அதிகபட்ச ஊக்கமளிப்பதாக இருக்கிறது. கடந்த ஆண்டு, இந்தியா உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியது. உலகின் மிக அதிகமான பொருளாதார நிலையற்ற தன்மைகள் நிலவும் காலகட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று. பெருந்தொற்று 4ஆவது ஆண்டினை எட்டியிருக்கிறது, உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை இது பாதித்திருக்கிறது. இதன் தொடக்க கட்டத்தில், கோவிட் 19 இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. ஆனால் திறமையான நமது தலைமையின் வழிகாட்டுதல், நமது தாங்கும் திறன் காரணமாக, நாம் விரைவிலேயே இந்தச் சறுக்கலை விட்டு வெளியேறினோம், நமது வளர்ச்சிப் பயணத்தை மீண்டும் தொடங்கினோம். மிக விரைவாக வளரும் பெரும் பொருளாதாரங்களில் ஒன்று இந்தியா. அரசின் தரப்பிலிருந்து குறித்த காலத்தில் புரியப்பட்ட முனைப்பான இடையீடுகள் காரணமாகவே இது சாத்தியமாகியிருக்கின்றது. குறிப்பாக தற்சார்பு பாரதம் முன்னெடுப்பானது, பெரும்பாலான மக்களிடத்திலே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் துறை குறித்த ஊக்கத்தொகைத் திட்டங்களும் உண்டு.

8. திட்டங்களிலும், செயல்திட்டங்களிலும் விளிம்புநிலை மக்களும் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், கடினமான காலங்களைக் கடக்க அவர்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் பெரும் நிறைவை அளிக்கவல்ல விஷயங்கள். பிரதம மந்திரி ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு அமல் செய்யப்பட்டதன் வாயிலாக, கோவிட்-19 பெருந்தொற்று என்ற இதுவரை காணா நோய்த்தொற்று காரணமாக, நாடெங்கிலும் பொருளாதாரத் தகர்வு ஏற்பட்டிருந்த வேளையிலும் கூட, நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதி செய்தது. இந்த உதவி காரணமாக, யாருமே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏழைக் குடும்பங்களின் நலன்களை முதன்மையானதாகக் கருதி, தொடர்ந்து இந்தத் திட்டக்காலம் நீட்டிக்கப்பட்டு, சுமார் 81 கோடி சககுடிமக்களுக்கு ஆதாயங்களை அளித்தது. இந்த உதவியை மேலும் நீட்டிக்கும் வகையிலே, 2023ஆம் ஆண்டிலும் கூட, பயனாளிகள் அவர்களின் மாதாந்திர ரேஷன் பொருட்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள இயலும். இந்தச் சரித்திரப்பூர்வமான செயல்பாடு காரணமாக, பலவீனமான பிரிவினர் மீது அக்கறையைச் செலுத்தும் அதே வேளையில், பொருளாதார முன்னேற்றத்தால் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தப்படுவதற்கும் அரசாங்கம் வழிவகை செய்திருக்கிறது.

9. பொருளாதாரம் திடமான நிலையில் இருக்கும் இந்த வேளையில், பாராட்டத்தக்க முன்னெடுப்புக்களின் தொடரை நம்மால் தொடங்கவும், முன்னெடுத்துச் செல்லவும் முடிந்திருக்கிறது. அனைத்துக் குடிமக்களாலும், தனிப்பட்ட முறையிலும் சரி, கூட்டாகவும் சரி, தங்களுடைய மெய்யான ஆற்றல்களை உணர்ந்து வளம் பெறத் உகந்ததொரு சூழலை உருவாக்கித் தருதலே இறுதி இலக்காகும். கல்வியே இதற்கான சரியான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதால், தேசியக் கல்விக் கொள்கையானது பேராவல்மிக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது கல்வியின் இருவகை முக்கிய குறிக்கோள்களை சரியான முறையிலே கவனத்தில் கொள்கிறது: அதாவது சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான கருவி என்பது ஒன்று, சத்தியத்தை ஆய்ந்தறியும் வழி என்பது மற்றது. இந்தக் கொள்கையானது தற்கால வாழ்க்கைக்குப் பொருத்தமான வகையிலே நமது நாகரீகத்தின் படிப்பினைகளை அளிப்பதோடு, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள படிப்போரைத் தயார் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையானது கற்றல் செயல்பாட்டை விரிவாக்குவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பைப் போற்றுகிறது.

10. தொழில்நுட்பமானது வாழ்க்கையையே மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகளை அளிக்கிறது என்பதை கோவிட் 19இன் தொடக்க நாட்களிலிருந்தே நாம் உணரத் தொடங்கி விட்டோம். டிஜிட்டல் இந்தியா மிஷன் திட்டமானது செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை, ஊரகப்பகுதி-நகர்ப்புறப் பிளவை இணைப்பதன் மூலம் அனைவருக்குமானதாகச் செய்ய முயற்சிக்கிறது. கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் அடையும் போது, தொலைவான இடங்களிலும் இருக்கும் மேலும் அதிகமானோர் இணையம் மற்றும் அரசாங்கம் வழங்கும் பலவகையான சேவைகளால் ஆதாயங்களை அனுபவித்து வருகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமது சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ளக் காரணங்கள் அவசியம் உண்டு. விண்வெளித் தொழில்நுட்பத்தில் வெகுசில முன்னோடிகள் என்ற வகையில் இந்தியாவும் ஒன்று. இந்தத் துறையில் நீண்டகாலம் முன்பேயே செய்திருக்க வேண்டிய சீர்திருத்தங்கள் தற்போது நடைபெற்றுவரும் அதே வேளையில், தனியார் நிறுவனங்களும் இந்தத் தேடலில் இணைய வரவேற்கப்படுகிறார்கள். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிறது. முதன்முதல் மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்தியாவின் விண்வெளிப் பயணமாக இது இருக்கும். நாம் விண்மீன்களை எட்டும் அதே வேளையில், நமது கால்கள் பூமியில் நிலைபெற்றிருக்கின்றன.

11. இந்தியாவின் செவ்வாய் கிரகப் பயணத்திற்கு சக்தி கொடுத்தவர்கள், அசாதாரணமான பெண்கள் அடங்கிய ஒரு குழு எனும் அதே வேளையில், நமது சகோதரிகளும் பெண்களும் மற்ற துறைகளிலும் பின் தங்கியிருக்கவில்லை. பெண்களுக்கு அதிகாரமளிப்பும், பாலின சமத்துவமும் பகட்டான கோஷங்களாக மட்டும் இருக்கவில்லை, நாம் அண்மையாண்டுகளில் இந்த இலக்குகளை அடைவதில் மகத்தான முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். பெண் குழந்தைகளைக் காப்போம், அவர்களுக்குக் கல்வியளிப்போம் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வேளையிலே, பெண்களின் பிரதிநிதித்துவம், அனைத்துத் துறைச் செயல்பாடுகளிலும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களுக்கும், பல கல்வி நிறுவனங்களுக்கும் நான் சென்றிருந்த போது, அங்கே பல்வேறு தொழில்துறை வல்லுனர்களின் குழுக்களையும் சந்திக்க நேர்ந்தது; அங்கே இருக்கும் இளம் பெண்களின் தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாளைய இந்தியாவுக்கு வடிவம் கொடுப்பதில் அவர்களே பெரும்பங்கு வகிப்பார்கள் என்பதில் என் மனதில் எந்த ஐயமும் இல்லை. தங்களின் சிறப்பான திறன்களுக்கு ஏற்ப, நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பு அளிக்க, மக்கள் தொகையின் இந்தப் பாதி ஊக்கப்படுத்தப்பட்டால், என்ன அற்புதங்கள் தான் நிகழாது?

12. பட்டியலின மக்கள் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட விளிம்புநிலையில் வாழும் சமூகங்கள் பற்றியதான இதே அதிகாரப்பங்களிப்பு பற்றிய தொலைநோக்குத் தான் அரசாங்கத்தை வழிநடத்துகிறது. சொல்லப் போனால், தடைகளை அகற்றி மேம்பாட்டில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து கற்பதும் கூட ஒரு குறிக்கோள் தான். பழங்குடியின சமூகங்கள் குறிப்பாக, சூழலைப் பாதுகாப்பது தொடங்கி, சமூகத்தை மேலும் இணக்கமானதாக ஆக்குவது வரை, பல துறைகளில் வளமான படிப்பினைகளை கொண்டிருப்பவை.

எனதருமை நாட்டு மக்களே,

13. ஆளுகையின் அனைத்து நிலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் ஆக்கப்பூர்வமான ஆற்றல்களைக் கட்டவிழிக்க அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களின் தொடர்கள் காரணமாக, உலகம் இந்தியாவை ஒரு புதிய மரியாதை கலந்த பார்வையோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு உலக அமைப்புகளில் நமது இடையீடுகள் ஆக்கப்பூர்வமான வித்தியாசத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. உலக மேடையில் இந்தியா ஈட்டியிருக்கும் நன்மதிப்பு, புதிய கடமைகள், புதிய பொறுப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்த ஆண்டு, இந்தியா 20 நாடுகள் அடங்கிய ஜி 20 மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்றிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உலக சகோதரத்துவமே நமது குறிக்கோளாக இருக்கையில், நாம் அனைவருக்குமான அமைதி-வளத்தையே ஆதரிக்கிறோம். அந்த வகையிலே ஜனநாயகத்தையும், பல்தரப்பு பங்கெடுத்தலையும் ஊக்கப்படுத்த ஜி 20 தலைமை ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, மேம்பட்டதொரு உலகையும், எதிர்காலத்தையும் உருவாக்கவும் சரியான மேடையும் ஆகும். இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி20 குழுவானது, மேலும் சமத்துவமும், நீடித்ததன்மையும் உடைய உலகவரிசையை உருவாக்கும் முயற்சிகளை இன்னும் அதிகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

14. உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கும், உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமாக ஜி 20 கூட்டமைப்பு இருப்பதால், உலகத்தை எதிர்நோக்கும் சவால்களுக்கான சரியான தீர்வுகளைக் கலந்தாய்வு செய்ய உகந்த அமைப்பாக இது இருக்கும். உலக வெப்பமயமாதல், சூழல் மாற்றம் ஆகியன இவற்றில் மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியவை. உலக வெப்பநிலை அதிகரித்துவரும் அதே வேளையில், உச்சபட்ச பருவநிலை தொடர்பான நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. நாம் இப்போது எதிர்கொள்ளும் பெருங்குழப்பம் என்னவென்றால், மேலும் மேலும் மனிதர்களை ஏழ்மையிலிருந்து வெளிக் கொண்டு வரவேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி தேவை, ஆனால் அந்த வளர்ச்சி படிம எரிபொருளிலிருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்களை விட அதிகமாக ஏழைகள் தாம் உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாற்று எரிபொருள் ஆதாரங்களை மேம்படுத்துவதும், அவற்றை பிரபலப்படுத்துவதும் தீர்வுகளில் ஒன்று. சூரிய சக்தி மற்றும் மின்வாகனங்கள் கொள்கைக்கு ஒரு உந்துதல் கொடுத்ததன் வாயிலாக, இந்தியா இந்தத் திசையில் பாராட்டத்தக்க ஒரு தலைமையை ஏற்றிருக்கிறது. உலக அளவிலே ஆனால், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நிதியுதவி என்ற வகைகளில், வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு வளர்ந்த நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

15. வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான சீர்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் பண்டைய பாரம்பரியங்களை புதிய கண்ணோட்டத்துடன் காண வேண்டும். நமது அடிப்படை முதன்மைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாரம்பரியமான வாழ்க்கை விழுமியங்களின் அறிவியல் கோணங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயற்கையின்பால் மதிப்பு, பரந்த பிரபஞ்சத்திடம் பணிவு என்ற உணர்வை நாம் மறுபடியும் நம்மில் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். நமது காலங்களின் மெய்யான ஒரு இறைத்தூதர் அண்ணல் காந்தியடிகள். கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை தொலைநோக்கால் கண்டு, உலகம் தன்னுடைய போக்கைச் சரி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

16. நொறுங்கும் நிலையில் இருக்கும் நமது கோளில், நமது குழந்தைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டாக வேண்டும். மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியவற்றுள் ஒன்று தான் உணவு. இந்தியா அளித்த ஆலோசனையை ஏற்று, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்திருப்பதை நான் மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகிறேன். நமது உணவுத்தட்டில் சிறுதானியங்கள் முக்கியமான பங்கு உடையவை, சமூகத்தின் பல பிரிவுகளில் இவை மீண்டும் தங்களுடைய இடத்தைப் மீட்டெடுத்து வருகின்றன. தினை போன்ற சிறுதானியங்களுக்கு நீருக்கான தேவை குறைவாக இருப்பதாலும், அதிக அளவு ஊட்டச்சத்தை அளிப்பதாலும், இவை சூழலுக்கு நேசமானவை. மேலும் அதிகமானோர் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, நமது உடல்நலனும் மேம்படும்.

17. நமது குடியரசு மேலும் ஓராண்டைக் கடந்திருக்கிறது, இன்னுமோர் ஆண்டு தொடங்குகிறது. இதுவரை காணாத மாற்றம் நிறைந்த நேரமாக இது இருந்திருக்கிறது. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, வெகு சில நாட்களிலேயே உலகம் மாறிப் போனது. இந்த மூன்று ஆண்டுகளில், வைரஸ் கிருமியை நாம் பின்தங்கச் செய்து விட்டோம் என்று எப்போதெல்லாம் நாம் கருதினோமோ, அப்போதெல்லாம் அது தனது அருவருப்பான முகத்தைக் காட்டத் தவறியதில்லை. ஆனால் பீதியடையத் தேவையில்லை, ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் நமது தலைமை, நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நமது நிர்வாகிகள், கொரோனா போராளிகள் ஆகியோர், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள, எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார்கள் என்பதை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில், நமது முன்னெச்சரிக்கை முஸ்தீபுகளைக் கைவிடாமலும், விழிப்போடும் இருக்க வேண்டும் என்பதையும் நாமனைவரும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

எனதருமை நாட்டு மக்களே,

18. நமது குடியரசின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தங்களுடைய விலைமதிப்பில்லா பங்களிப்பை நல்கியமைக்கு, பல்வேறு துறைகளில் பணியாற்றிய பல தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள். விவசாயிகள், தொழிலாளிகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோரின் பங்குபணிகளை நான் பாராட்டும் அதே வேளையில், ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான் என்ற உணர்வை அடியொற்றி, நமது நாடு பயணிக்கத் தேவையான ஆற்றலை, இவர்களின் ஒருங்கிணைந்த பலம் தான் கொடுக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு அளிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் நான் பாராட்டுகிறேன். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மகத்தான தூதுவர்களாகத் திகழும் நமது அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

19. குடியரசுத் திருநாள் என்ற இந்தத் தருணத்திலே, நமது எல்லைகளைப் பாதுகாத்து, நாட்டின் பொருட்டு எந்தத் தியாகத்தையும் புரியச் சித்தமாக இருக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு நான் எனது சிறப்பான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். சக குடிமக்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பினை வழங்கும் துணை இராணுவப்படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். கடமைப்பாதையில் பயணிக்கும் போது தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த இராணுவம், துணை இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த, நமது நெஞ்சுரம் மிக்க வீரர்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். எனக்குப் பிரியமான குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான நல்லாசிகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் குடியரசுத் திருநாளை முன்னிட்டு உங்களனைவருக்கும் நான் எனது சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நன்றி, ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!!நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

74 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக அமைய நாட்டு மக்கள் அனைவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

நமது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள தொன்மை வாய்ந்த நாகரீக விழுமியங்கள் மீது கொண்டுள்ள நம்முடைய நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை குடியரசு தினம் வழங்கியிருக்கிறது.  நாம் குடியாட்சியை பெறுவதற்கு தங்களது தன்னிகரில்லா தியாகங்கள் மூலம் அடித்தளம் அமைத்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைசிறந்த கொள்கைவாதிகள் மற்றும் அறியப்படாத தலைவர்கள் குறித்து நாம் அறிந்து கொள்ளவும் இந்த குடியரசு தினம் வாய்ப்பு அளித்திருக்கிறது. 

இந்த நன்னாளில் நம்முடைய சாதனைகளைக் கொண்டாடுவதுடன், தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சிக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் உறுதியேற்றுக் கொள்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த