முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரோடு கிழக்கில் அதிமுக இரு அணிகளின் வேட்பாளர்கள் யார் அவர்களுக்கு எந்தச் சின்னம் தலைவர்கள் முடிவால் தொண்டர்கள் கவலை

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக இரு அணிகளின் சார்பில் 


போட்டியிடுவது யார்? கட்சியை கண்ணாடித் துண்டுகள் போல முதலில் ஐந்தாக உடைத்தவர்களே, மீண்டும் ஒட்டவைக்கும் முயற்சியில் இறங்க அது பலன்தராத நிலையில்,


சிதறிப்போன நெல்லிக்காய் மூட்டைகளை அள்ளிக்கட்ட முடியாது என்பதும், இப்போது உடைத்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் இங்கு நிஜம் , தற்போது அரசியல் களம் கூறும் பாடம், அதிமுக பொதுச்செயலாளரான ஒதுங்கியிருக்கும் சசிக்கலா நடராஜன் தற்போது களத்திற்கு வந்தால் தவிர இதைச் சரி செய்ய முடியாது என்பது தான்  அரசியல் அறிந்தவர்கள் கூறும் கருத்து, அதிமுகவை ஒன்று சேர விடாதவறு திமுக செயல்படுவது தான் அவர்கள் கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்ற நிலையில்,


அதிமுக தற்போது பாஜகவைச் சார்ந்து இருப்பது போல ஒரு பிம்பம் மக்களின் மத்தியில் பேசப்படும் நிலை வருவதற்கு ஊழல் செய்துவிட்டு தங்களைக் காப்பாற்ற நினைக்கும் அதன் தலைவர்கள் தான் காரணம், தொண்டர்கள் அமைதியாகவும் ஆனால் கவலையாகவும் உள்ளனர், நந்தவனத்திலோர்லான்டி கதைப்பாடல் பொருந்தும் நிலை  போல உள்ளனர் குழப்பத்தில், எடப்பாடி கே.பழனிசாமி வேட்பாளருக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளரும் களம் காண வரும் நிலையில் முடிவெடுக்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி தங்களின் அரசியல் வளர்ந்து விட்டதாகவே அந்தத் தொண்டர்கள் முதல் மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரை கற்பனையில் உள்ளனர்


அது இல்லை என்பதே களம் உணர்த்தும் உண்மை, ஆகவே தேமுதிக போல பாஜக வேட்பாளர் அறிவிக்காமல் தயங்கும் நிலை, திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளில் கடுமையான குழப்பம் நிலவி வருவதால், தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது வேண்டாமா, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற முடிவை எடுக்க முடியாமல் தலைவர்கள் திணறி வருகின்றனர். இது தமிழக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் 31 ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.


அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியினரும் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களில் எந்தத் தரப்புக்கு, சிறிதளவே வாக்குவங்கி உள்ள பாஜக ஆதரவளிக்கும் என்ற கேள்வியை முன்வைக்கக் காரணம், அதிமுக தொண்டர்கள் எல்லாம் பாஜகவை ஆதரிக்க மாட்டார்களா என்ற ஒரு ஆசை தான் அவர்களுக்கு , அது நடக்கவேண்டும் என உடைத்து, பின் நடக்காததால் ஒட்ட வைக்கும் இணைப்பு அதிமுக குறித்துப் பேசும் நிலையில்.





அரசியல் தெரிந்த அதன் பொதுச் செயலாளர் சசிக்கலா நடராஜன் தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க காரணம் கட்சியை உடைத்தவர்களால் ஒட்டவைக்க முடியாத காரணத்தால்  உடைத்த இயக்கம் ஒன்று பட வேண்டும் என அவர்கள் விரும்பும் நிலை வருவதற்கு காரணம் இந்த பொது வெளியில் சில உண்மைகளைக் கூற முடியாத நிலை பத்திரிகைகளுக்கு உள்ளன, அது நமக்கும் பொருந்தும். தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் நமக்கான எதிர்காலத் தலைவர் யார் என்பதே.  பெரிதாக எழுந்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரா அல்லது இணை ஒருங்கிணைப்பாளரா  என்ற அடிப்படையில் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு வேட்பாளரையும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு வேட்பாளரையும் நிறுத்தும் பட்சத்தில்,

தேர்தல் ஆணையம் இருவரும் இரட்டை இலை சின்னத்தை A,B படிவம் கொடுத்துக் கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகினால், இரட்டை இலைச் சின்னம்  முடங்கும்.

இருவர் அணியும்  சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டு பயில்வான்களாக தங்கள் சுயபலத்தை நிரூபிக்க வேண்டும். இது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம்.   அதேநேரம், அதிமுகவின் இணைப்பு முடிவு பாஜக கையில் இருப்பதால் எந்த மாதிரியான முடிவை அவர்கள் கட்சி சார்ந்து எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்  ஏற்பட்டுள்ளது. அப்படி இணைந்தால் கூட அதே வாக்குவங்கி இருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை, தற்போதைய நிலையில், அதிமுக இரு அணிகளாக போட்டியிடும் சூழ்நிலையில் தான் உள்ளது.



அதிமுகவின் இரண்டு அணியினரும், டெல்லி தலைமை பேசாத நிலையில் தமிழ்நாடு  பாஜக தலைவர் அண்ணாமலையை கமலாலயத்துக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டதைப் பார்த்த தொண்டார்கள் தாயில்லாப் பிள்ளை பொன்ற நிலை என்ன என்பதை உணர்ந்தார்கள். அதே போன்று, அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின்  தலைவர்களையும், அவர்களது வீட்டுக்கே சென்று இரு அணியினரும் ஆதரவு கேட்டனர். அதில் பாமக உள்ளிட்ட பல கட்சிகள் யாருக்கும் ஆதரவில்லை என அறிவிக்கக் காரணம் இது பாஜக நடத்தும் பரிச்சை இதில் தேர்ச்சி விகிதம் கணக்கிட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் பலப்பரிட்சை இது,


அதில் பலிகடா எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்கள் சுயபலத்தில் சுயேச்சையாக வரும் சின்னத்தில் அவர்கள் வாங்கும்  வாக்குகளே அவர்கள் இருவரின் ஏதிர்காலத்தையும் அக் கட்சி எதிர்காலத்தையும் தீர்மாணிக்கும்.


இதுவரை சிறிய கட்சிகளின் தலைவர்கள் தான், பெரிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பார்கள். ஆனால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதே நேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜக வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் மாநிலத் தலைமையான  அண்ணாமலைக்கு உள்ளது அது மேலிடத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய முடிவாகும். ஆனாலும், இதில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைவர்கள் திணறி வருகிறார்கள். டெல்லி மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம்.



அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது. இந்த நிலையில், நேற்று திருச்சிராப்பள்ளியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட, பாஜக போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூறவில்லை. அதிமுக பெரிய கட்சி, அதனால் வெற்றி தோல்வி அறிந்து நாங்கள் முடிவு செய்வோம் என்று  கூறியுள்ளார். அதனால், பாஜ போட்டியிடாது என்று உறுதியாகக் கூற முடியாத நிலையே தற்போதும் உள்ளது. அதேநேரத்தில், அதிமுக ஆதரவு கேட்ட புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்ற கட்சி ஆகியவை எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது. 


பாஜக போட்டியிடாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவு என்று அறிவித்தன. இது தவிர , நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளரை ஆதரிக்குமா அல்லது தனி வேட்பாளரை அறிவிக்குமா என்பது நாளை தெரியும், எதிர்க்கட்சிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் அடைந்துள்ள காரணம் பாஜகவை சார்ந்திருப்தே, மேலும், அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் ஏற்கனவே  முத்துசாமியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி கே.பழனிச்சாமி முயற்சி  செய்தார்.


 அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். முதலில் போட்டியிடத் தயார் என்று கூறியிருந்தவர், ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தான் போட்டியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இது எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் இந்தத் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு அல்லது முன்னாள் துணை மேயர் ஆகியோரில் தனது அணி வேட்பாளராக இருவரில் ஒருவரை நிறுத்த ஆலோசனை நடத்துகிறார். ஆனால், யார் போட்டியிட்டாலும் ஜாமீன் தொகை திரும்பி வருமா என்பதே நிலை . இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் வேட்பாளர்கள் யோசிக்கின்றனர்


நன்கு அறிமுகம் உள்ள பிரமுகர்கள் போட்டியிட மறுத்த நிலையில், போட்டியிட விரும்பும் அதிமுகவின் (எடப்பாடி கே.பழனிச்சாமி அணி) ரூபாய்.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு வாங்கலாம் என்று எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம்  அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுமெனவும் ,

இதற்கான விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000 ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் அதிமுக சார்பில் 23 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்,



முதல் நாளில் ஒன்று, இரண்டு பேர் மட்டுமே விருப்ப மனு பெற்றுச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தெளிவான பதில்கள் கூற மறுத்து விட்டனர். அதன்படி பார்த்தால், விருப்ப மனு வாங்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை .


அதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘பொதுத்தேர்தல் அல்லது பல சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றால் விருப்ப மனு பெறலாம். ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குமா விருப்ப மனு பெற வேண்டுமா’ எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.



நிர்வாகிகள் இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.



அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜ வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் அண்ணாமலைக்கு மட்டுமே உள்ளது. ஆனாலும், இதில் இறுதி  முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைவர்கள் தடுமாறி வருகிறார்கள்.



டெல்லி  மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம். அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது. ஆக அதிமுகவை ஜெயலலிதா மரணமடைந்த பின் உடைத்தவர்கள் அதன் பலனை தற்போது அடையும்  அறுவடைக்காலம் என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த