முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத்.மறைவு.

திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்  பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத். மறைவு. காரணமாக சோகத்தில் ஆழ்ந்த டோலிவுட் இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் கே.கே.விஸ்வநாத் அவர்கள்


சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பெருங்கலைஞர்.


சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம், உள்ளிட்ட படங்களால் பிரபலமான தெலுங்கு மொழித் திரை இயக்குநர் கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் காலமானார்

கலாதபஸ்வி கே.விஸ்வநாத் மரணம் அடைந்தார்  எனும் செய்தி கேட்டு சோகத்தில் மூழ்கியது. அவரது மறைவுக்கு ஆந்திரப்பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி   தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்


டோலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் கே. விஸ்வநாத் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 92. சில காலம் முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வியாழன் அன்றும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

தெலுங்குத் திரையுலகிற்கு மிகுந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். இந்தியப் பண்பாட்டின் அடையாளங்களான தொல்வியல் கலைகளைப் பற்றிய கதைகளாகப் பல அற்புதமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன

சங்கராபரணம் திரைப்படம் தெலுங்கு திரையுலகில் நீண்ட வரலாறு படைத்தது. தேசிய விருதும் பெற்றார். சாகரசங்கமம், ஸ்ருதிலயாலு, ஸ்ரீவெண்ணெலா, ஸ்வர்ணகமலம், ஸ்வாதிகிரணம் ஆகிய படங்கள் இவருக்குப் புகழைத் தேடித் தந்தன.

விஸ்வநாத் முழுப்பெயர்.. காசிநாதுனி விஸ்வநாத். 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  19 ஆம் தேதி அன்று குண்டூர்  மாவட்டத்தில் பிறந்தவர். குண்டூர் இந்துக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். அதன் பின் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். வாஹினி ஸ்டுடியோவில் சவுண்ட் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படங்களில் இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட நாகேஸ்வரராவ், அவருக்கு ஆத்மகாரவம் படத்தில் இயக்குனராக வாய்ப்பு வலங்கினார். அதன் பிறகு சிறிசிறி முவ்வா படத்தின் மூலம் இயக்குனராக இவரது திறமை வெளிப்பட்டது. கே.விஸ்வநாத் டோலிவுட்டுக்கு எத்தனையோ அற்புதமான.. நம்ப முடியாத பல படங்களைத் தந்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தெலுங்குத் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்தார். பல படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ஈர்க்கப்பட்டார். சுபாசங்கல்பம், நரசிம்மநாயுடு, காளிசுந்தம் ரா, அடவரி மாதலுக் அர்த்தலே வெருங்களே, தாகூர், ஆவாஹு, ஆந்திராடு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் விஸ்வநாத்.  கடைசியாக தெலுங்கில் ஹைப்பர் படத்தில் நடித்தார். திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2016 ஆம் ஆண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அவரது மறைவுக்கு திரையுலகின் அன்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு கே. விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு.கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“திரு கே. விஸ்வநாத்  அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் திரைப்பட உலகின் ஜாம்பவனாக திகழ்ந்தார். படைப்பாற்றல் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது பல்வேறு வகையான திரைப்படங்கள் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

[

"இந்தக் குறிப்பிட்ட பிரிவு மின்மயமாக்கப்படுவதால் பயனடையப்போகும் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள்.  இதனால்  மேலும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...