முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத்.மறைவு.

திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்  பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத். மறைவு. காரணமாக சோகத்தில் ஆழ்ந்த டோலிவுட் இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் கே.கே.விஸ்வநாத் அவர்கள்


சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பெருங்கலைஞர்.


சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம், உள்ளிட்ட படங்களால் பிரபலமான தெலுங்கு மொழித் திரை இயக்குநர் கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் காலமானார்

கலாதபஸ்வி கே.விஸ்வநாத் மரணம் அடைந்தார்  எனும் செய்தி கேட்டு சோகத்தில் மூழ்கியது. அவரது மறைவுக்கு ஆந்திரப்பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி   தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்


டோலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் கே. விஸ்வநாத் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 92. சில காலம் முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வியாழன் அன்றும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

தெலுங்குத் திரையுலகிற்கு மிகுந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். இந்தியப் பண்பாட்டின் அடையாளங்களான தொல்வியல் கலைகளைப் பற்றிய கதைகளாகப் பல அற்புதமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன

சங்கராபரணம் திரைப்படம் தெலுங்கு திரையுலகில் நீண்ட வரலாறு படைத்தது. தேசிய விருதும் பெற்றார். சாகரசங்கமம், ஸ்ருதிலயாலு, ஸ்ரீவெண்ணெலா, ஸ்வர்ணகமலம், ஸ்வாதிகிரணம் ஆகிய படங்கள் இவருக்குப் புகழைத் தேடித் தந்தன.

விஸ்வநாத் முழுப்பெயர்.. காசிநாதுனி விஸ்வநாத். 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  19 ஆம் தேதி அன்று குண்டூர்  மாவட்டத்தில் பிறந்தவர். குண்டூர் இந்துக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். அதன் பின் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். வாஹினி ஸ்டுடியோவில் சவுண்ட் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படங்களில் இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட நாகேஸ்வரராவ், அவருக்கு ஆத்மகாரவம் படத்தில் இயக்குனராக வாய்ப்பு வலங்கினார். அதன் பிறகு சிறிசிறி முவ்வா படத்தின் மூலம் இயக்குனராக இவரது திறமை வெளிப்பட்டது. கே.விஸ்வநாத் டோலிவுட்டுக்கு எத்தனையோ அற்புதமான.. நம்ப முடியாத பல படங்களைத் தந்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தெலுங்குத் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்தார். பல படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ஈர்க்கப்பட்டார். சுபாசங்கல்பம், நரசிம்மநாயுடு, காளிசுந்தம் ரா, அடவரி மாதலுக் அர்த்தலே வெருங்களே, தாகூர், ஆவாஹு, ஆந்திராடு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் விஸ்வநாத்.  கடைசியாக தெலுங்கில் ஹைப்பர் படத்தில் நடித்தார். திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2016 ஆம் ஆண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அவரது மறைவுக்கு திரையுலகின் அன்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு கே. விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு.கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“திரு கே. விஸ்வநாத்  அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் திரைப்பட உலகின் ஜாம்பவனாக திகழ்ந்தார். படைப்பாற்றல் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது பல்வேறு வகையான திரைப்படங்கள் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

[

"இந்தக் குறிப்பிட்ட பிரிவு மின்மயமாக்கப்படுவதால் பயனடையப்போகும் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள்.  இதனால்  மேலும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...