முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தராகண்ட் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய உரை

உத்தராகண்ட் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய உரை

நமஸ்காரம்


தேவபூமியான உத்தராகண்டில் நடைபெறும் மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளம் நண்பர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுக்கள். இன்று பணி நியமன உத்தரவுகளை பெற்றவர்களுக்கு இந்த நாள் ஒரு புதிய  தொடக்கமாகும். இது நிச்சயமாக உங்கள் மற்றும் உங்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றும்.


இந்த நாளில் நீங்கள் பணிக்கு சேரவிருப்பது உங்களுடைய வாழ்க்கை மறுவடிவமைப்பு பெறுவதோடு மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தளமாக அமையும்.  உங்களுடைய சேவைகளின் மூலம் இந்த மாநிலம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும். இதில் பலர் கல்வித்துறையில் பணியாற்றப்போகிறீர்கள். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய நூற்றாண்டின் இளைஞர்களை தயார்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளீர்கள். இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பு உத்தராகண்டில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.  

நண்பர்களே!

மத்திய அரசாகட்டும், உத்தராகண்ட் பிஜேபி அரசாகட்டும் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பம் மற்றும் ஆற்றல் அடிப்படையில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அனைவரும் இந்த சரியான தளத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த நடவடிக்கையின் ஒரு வழியாகும். கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. நாடுமுழுவதிலும் உள்ள பிஜேபி ஆளும் மாநில அரசுகள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்  பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.  இன்று உத்தராகண்டும் இதில் இணைவதில் நான் பெருமை கொள்கிறேன்.

நண்பர்களே!

பழைய நம்பிக்கையான “மலைப்பிரதேசங்களில் தண்ணீர் மற்றும் இளைஞர் சக்தி மேன்மையடையாமலேயே போகும்” என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசு உத்தராகண்டைச் சேர்ந்த இளையசமுதாயத்தினருக்கு தங்கள் கிராமங்களுக்கு திரும்பி வரவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக மலைப்பிரதேசங்களில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  இன்று பல்வேறு சாலைகள் மற்றும் ரயில்வே இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது உத்தராகண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.  இதன் விளைவாக தொலைதூர கிராமங்களுக்குக் கூட எளிதாக செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.  மேலும், பல்வேறு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.  கட்டுமானத் தொழில், பொறியியல், தொழில்துறைக்கான மூலப்பொருட்கள், அங்காடிகள், வேலைவாய்ப்புகள் போன்றவைகள் எங்கும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்துத் துறையின் தேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய வாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  முந்தைய காலகட்டத்தில் இது போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உத்தராகண்டைச் சேர்ந்த  எனது ஊரக இளைஞர்கள் தங்களது நகரங்களை விட்டுச் செல்லும் நிலை இருந்தது. இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்ட பொது சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

நண்பர்களே!

உத்தராகண்டின் தொலைதூர பகுதிகளை சாலை, ரயில்வே மற்றும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு வருவதன் விளைவாக சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்து வருகிறது.  புதிய சுற்றுலா தலங்கள் பிரபலமடைந்து வருகிறது. இதன் விளைவாக உத்தராகண்ட் இளைஞர்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலேயே வேலைவாய்ப்புகளைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்பு அவர்கள் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தங்களது நகரங்களை விட்டு வெளியே நகரும் நிலை இருந்தது. பிரதமரின் சிறு குறு தொழில்முனைவோர் கடனுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவித்து சுயதொழில் தொடங்குவதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், விற்பனை அங்காடிகள்,  உணவுக்கூடங்கள், விருந்தினர் விடுதிகள் மற்றும் தங்குமிடம் போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் உத்தரவாதம் இல்லாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. இதுவரையில் நாடு முழுவதிலும் ரூ.38 கோடி மதிப்பிலான முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களின் மூலம் 8 கோடி இளைஞர்கள் முதல்முறையாக தொழில்முனைவோர்  ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர்/ பழங்குடியினர்/ இதரப்பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும். உத்தராகண்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நண்பர்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தியுள்ளனர்.

நண்பர்களே!

இந்த சுதந்திரத்தின் விடுதலைப் பெருவிழாக் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள இளையசமுதாயத்தினருக்கு சிறந்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு உங்களது சேவைகள் மூலம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு, உத்தராகண்ட் மக்களுக்கு சேவையாற்றுவீர்கள் என்றும் அந்த மாநிலத்தின் மேம்பாட்டிற்காக சேவை புரிவீர்கள் என்று நம்பிக்கை கொள்கின்றேன். இந்த நடவடிக்கைகள் மூலம் நமது நாடு வலிமையான திறமையான செழிப்பான நாடாக உருவாகும். மிகவும் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...