முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தராகண்ட் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய உரை

உத்தராகண்ட் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய உரை

நமஸ்காரம்


தேவபூமியான உத்தராகண்டில் நடைபெறும் மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளம் நண்பர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுக்கள். இன்று பணி நியமன உத்தரவுகளை பெற்றவர்களுக்கு இந்த நாள் ஒரு புதிய  தொடக்கமாகும். இது நிச்சயமாக உங்கள் மற்றும் உங்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றும்.


இந்த நாளில் நீங்கள் பணிக்கு சேரவிருப்பது உங்களுடைய வாழ்க்கை மறுவடிவமைப்பு பெறுவதோடு மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தளமாக அமையும்.  உங்களுடைய சேவைகளின் மூலம் இந்த மாநிலம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும். இதில் பலர் கல்வித்துறையில் பணியாற்றப்போகிறீர்கள். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய நூற்றாண்டின் இளைஞர்களை தயார்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளீர்கள். இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பு உத்தராகண்டில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.  

நண்பர்களே!

மத்திய அரசாகட்டும், உத்தராகண்ட் பிஜேபி அரசாகட்டும் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பம் மற்றும் ஆற்றல் அடிப்படையில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அனைவரும் இந்த சரியான தளத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த நடவடிக்கையின் ஒரு வழியாகும். கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. நாடுமுழுவதிலும் உள்ள பிஜேபி ஆளும் மாநில அரசுகள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்  பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.  இன்று உத்தராகண்டும் இதில் இணைவதில் நான் பெருமை கொள்கிறேன்.

நண்பர்களே!

பழைய நம்பிக்கையான “மலைப்பிரதேசங்களில் தண்ணீர் மற்றும் இளைஞர் சக்தி மேன்மையடையாமலேயே போகும்” என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசு உத்தராகண்டைச் சேர்ந்த இளையசமுதாயத்தினருக்கு தங்கள் கிராமங்களுக்கு திரும்பி வரவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக மலைப்பிரதேசங்களில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  இன்று பல்வேறு சாலைகள் மற்றும் ரயில்வே இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது உத்தராகண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.  இதன் விளைவாக தொலைதூர கிராமங்களுக்குக் கூட எளிதாக செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.  மேலும், பல்வேறு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.  கட்டுமானத் தொழில், பொறியியல், தொழில்துறைக்கான மூலப்பொருட்கள், அங்காடிகள், வேலைவாய்ப்புகள் போன்றவைகள் எங்கும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்துத் துறையின் தேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய வாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  முந்தைய காலகட்டத்தில் இது போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உத்தராகண்டைச் சேர்ந்த  எனது ஊரக இளைஞர்கள் தங்களது நகரங்களை விட்டுச் செல்லும் நிலை இருந்தது. இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்ட பொது சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

நண்பர்களே!

உத்தராகண்டின் தொலைதூர பகுதிகளை சாலை, ரயில்வே மற்றும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு வருவதன் விளைவாக சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்து வருகிறது.  புதிய சுற்றுலா தலங்கள் பிரபலமடைந்து வருகிறது. இதன் விளைவாக உத்தராகண்ட் இளைஞர்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலேயே வேலைவாய்ப்புகளைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்பு அவர்கள் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தங்களது நகரங்களை விட்டு வெளியே நகரும் நிலை இருந்தது. பிரதமரின் சிறு குறு தொழில்முனைவோர் கடனுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவித்து சுயதொழில் தொடங்குவதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், விற்பனை அங்காடிகள்,  உணவுக்கூடங்கள், விருந்தினர் விடுதிகள் மற்றும் தங்குமிடம் போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் உத்தரவாதம் இல்லாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. இதுவரையில் நாடு முழுவதிலும் ரூ.38 கோடி மதிப்பிலான முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களின் மூலம் 8 கோடி இளைஞர்கள் முதல்முறையாக தொழில்முனைவோர்  ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர்/ பழங்குடியினர்/ இதரப்பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும். உத்தராகண்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நண்பர்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தியுள்ளனர்.

நண்பர்களே!

இந்த சுதந்திரத்தின் விடுதலைப் பெருவிழாக் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள இளையசமுதாயத்தினருக்கு சிறந்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு உங்களது சேவைகள் மூலம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு, உத்தராகண்ட் மக்களுக்கு சேவையாற்றுவீர்கள் என்றும் அந்த மாநிலத்தின் மேம்பாட்டிற்காக சேவை புரிவீர்கள் என்று நம்பிக்கை கொள்கின்றேன். இந்த நடவடிக்கைகள் மூலம் நமது நாடு வலிமையான திறமையான செழிப்பான நாடாக உருவாகும். மிகவும் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,