முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறக்கட்டளை நிதியில் அரசியல் நடத்தும் பாமக. நிறுவனர்

அறக்கட்டளை நிதியில் அரசியல் நடத்தும் பாமக நிறுவனர் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற அரசியல் சார்பற்ற அறக்கட்டளை உள்ளது அதன் சார்பில் 


’’தமிழைத் தேடி” என்ற விழிப்புணர்வுப் 

பரப்புரை பயணம் செய்கிறார் பா.ம.க  நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அதற்காக அறக்கட்டளை சார்பில் காவிக் கலரில் புதிய பேருந்து உறுவாக்ப்பட்டுள்ளது அதற்கு தனியாக ஒரு  பாடல் கவிஞர் ஜெயபாஸ்கரன், இசையமைத்து  புஷ்பவனம் குப்புசாமி  & அனிதா குப்புசாமி 




ஆகியோர் பாடியுள்ளார்கள் ,39 நாட்களில்102 மாவட்டங்களைச் சேர்ந்த 6,708 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கிய பா.ம க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்


பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும்  மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்  நியமனக் கடிதங்களை வழங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி திண்டிவனம் அடுத்த மருத்துவரின் தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் தொடங்கியது. அன்று முதல்  பிப்ரவரி மாதம் 09-ஆம் தேதி வரை  39 நாட்கள் நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி நடைபெற்றதில்  மொத்தம் கட்சியின் பிரிக்கப்பட்ட 102 மாவட்டங்கள், 217 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 6,708  புதிய நிர்வாகிகளுக்கு நிறுவனர்  மருத்துவர் ச.ராமதாஸ் நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.  அனைவரும் தங்களுக்கான பணியை மற்ற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் அதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றும்  மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




அந்தப் பாடல் வரிகளை நாம் இங்கே காணலாம். :

"தமிழைத் தேடி தமிழரை நாடி

தமிழினப் போராளி வருகிறார்!

எங்கே நமது தமிழ்?

எதிலே நமது தமிழ்?

என்றே  அய்யா நம்மைக் கேட்கிறார்!

எங்கும் தமிழ் இல்லை எதிலும் தமிழ் இல்லை

தங்கத் தமிழ் எங்கே என்று

தேடுகிறார் - தமிழைத் தேடி தமிழரை நாடி( அடுத்த தேர்தல் காரணமாக அரசியல் செய்ய ) ..?!  

கல்வி மொழியாக தமிழ் இல்லை

கடவுள் மொழியாக தமிழ் இல்லை

வணிக மொழியாக தமிழ் இல்லை

வழக்கு மொழியாக தமிழ் இல்லை!

எங்கும் இல்லை இல்லை என்பதே

இன்னுயிர்த் தமிழின் இழிந்த நிலை

தாய்மொழித் தமிழை தள்ளி வைத்ததால்

தமிழர்கள் வாழ்வில் தாழ்ந்த நிலை     -தமிழைத் தேடி     தமிழரை நாடி

உலக மொழிகளில் உயர்ந்த மொழியென்ற

உண்மையைச் சொல்லியும் பயனில்லை,

தரணியே போற்றும் 

தமிழ் மொழி அன்னைக்கு

தமிழ் நாட்டில்தான் வாழ்வில்லை!

ஒன்பது கோடி தமிழர்கள் யாவருக்கும்

ஒற்றைத் தமிழே அரணாகும்

எல்லா மொழிக்கும் கம்பளம் விரித்தால்

உள்ளவையெல்லாம் பறிபோகும்!        - தமிழைத் தேடி      தமிழரை நாடி

பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை

பலமொழி மோகம் பெருந்தொல்லை

அறியா மொழியில் கற்பதனாலே

அறிவை இழக்கிறான் நம் பிள்ளை!

அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றியும்

அன்னைத் தமிழ் ஏன் ஆளவில்லை

இன்னுயிர் தமிழுக்கு

தன்னுயிர் தந்தவர்

ஈகம் இன்னுமா போதவில்லை? - தமிழைத் தேடி தமிழரை நாடி 

எங்கே எங்கே என்னுயிர்த் தமிழென

எங்கள் அய்யா கேட்கின்றார்

தமிழர் தொலைத்த தமிழைத் தேடி

தமிழினப் போராளி வருகின்றார்!

தமிழின மக்களே வாருங்கள் - நம்

தமிழின் நிலையைப் பாருங்கள்

சொந்த மண்ணிலே எங்கள் தமிழ்த்தாய்

ஏதிலியா எனக் கேளுங்கள்!

தமிழா தமிழின் பெருமையறி-உன்  

தமிழால் முடியும் என்று விழி

தமிழினம் உலகில் தலைநிமிர -நம்

தமிழைத் தவிர ஏது வழி?

தமிழுக்காகத் தளராதுழைக்கும்

தமிழ் இனத்தின் நம் மருத்துவரை

அய்யா வருக! வருக! என்று

அழைக்குது பார் நம் மாமதுரை!

மருத்துவர் அய்யா தலைமையிலே - நம்

தமிழை வளர்த்த மதுரையிலே

ஒன்று கூடுவோம் தமிழர்களே- நாம்

வென்று காட்டுவோம் தோழர்களே   - தமிழைத் தேடி தமிழரை நாடி  எனப் பாடியுள்ள பாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் கடந்த ஐந்து வருடம் தமிழ் மீது வராத அக்கறை தற்போது ஆரம்பமகால தமிழாசிரியர் பின் மருத்துவர் வன்னியர் சங்க அறக்கட்டளைகளின் காவலர் என. பல ரூபங்கள் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு உண்டு தற்போது அறக்கட்டளைகளின் நிதியை அரசியலில் பயன்படுத்த முயலும் செயல் பலரும் யோசிக்க இந்தி திணிப்பை தடுக்காமல் தமிழை அய்யா சார்ந்தவர்கள் எங்கு வளர்ப்பார்கள் என மாற்றுக்கட்சியினர் பேசுவது நம் காதில் விழுகிறதே..இதில் பொது நீதி யாதெனில் அவரை நாம் நெருங்கி நன்கு அறிந்தவர்கள்  என்ற முறையில் இராமம் போட்ட செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைகள் போல பொங்குதமிழ் வளர்ச்சி மற்றும் வன்னியர் கல்வி அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல பல மருத்துவர் அய்யாவின் அரசியலில் கைவந்த கலை வித்தகரே..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...