முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறக்கட்டளை நிதியில் அரசியல் நடத்தும் பாமக. நிறுவனர்

அறக்கட்டளை நிதியில் அரசியல் நடத்தும் பாமக நிறுவனர் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற அரசியல் சார்பற்ற அறக்கட்டளை உள்ளது அதன் சார்பில் 


’’தமிழைத் தேடி” என்ற விழிப்புணர்வுப் 

பரப்புரை பயணம் செய்கிறார் பா.ம.க  நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அதற்காக அறக்கட்டளை சார்பில் காவிக் கலரில் புதிய பேருந்து உறுவாக்ப்பட்டுள்ளது அதற்கு தனியாக ஒரு  பாடல் கவிஞர் ஜெயபாஸ்கரன், இசையமைத்து  புஷ்பவனம் குப்புசாமி  & அனிதா குப்புசாமி 




ஆகியோர் பாடியுள்ளார்கள் ,39 நாட்களில்102 மாவட்டங்களைச் சேர்ந்த 6,708 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கிய பா.ம க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்


பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும்  மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்  நியமனக் கடிதங்களை வழங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி திண்டிவனம் அடுத்த மருத்துவரின் தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் தொடங்கியது. அன்று முதல்  பிப்ரவரி மாதம் 09-ஆம் தேதி வரை  39 நாட்கள் நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி நடைபெற்றதில்  மொத்தம் கட்சியின் பிரிக்கப்பட்ட 102 மாவட்டங்கள், 217 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 6,708  புதிய நிர்வாகிகளுக்கு நிறுவனர்  மருத்துவர் ச.ராமதாஸ் நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.  அனைவரும் தங்களுக்கான பணியை மற்ற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் அதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றும்  மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




அந்தப் பாடல் வரிகளை நாம் இங்கே காணலாம். :

"தமிழைத் தேடி தமிழரை நாடி

தமிழினப் போராளி வருகிறார்!

எங்கே நமது தமிழ்?

எதிலே நமது தமிழ்?

என்றே  அய்யா நம்மைக் கேட்கிறார்!

எங்கும் தமிழ் இல்லை எதிலும் தமிழ் இல்லை

தங்கத் தமிழ் எங்கே என்று

தேடுகிறார் - தமிழைத் தேடி தமிழரை நாடி( அடுத்த தேர்தல் காரணமாக அரசியல் செய்ய ) ..?!  

கல்வி மொழியாக தமிழ் இல்லை

கடவுள் மொழியாக தமிழ் இல்லை

வணிக மொழியாக தமிழ் இல்லை

வழக்கு மொழியாக தமிழ் இல்லை!

எங்கும் இல்லை இல்லை என்பதே

இன்னுயிர்த் தமிழின் இழிந்த நிலை

தாய்மொழித் தமிழை தள்ளி வைத்ததால்

தமிழர்கள் வாழ்வில் தாழ்ந்த நிலை     -தமிழைத் தேடி     தமிழரை நாடி

உலக மொழிகளில் உயர்ந்த மொழியென்ற

உண்மையைச் சொல்லியும் பயனில்லை,

தரணியே போற்றும் 

தமிழ் மொழி அன்னைக்கு

தமிழ் நாட்டில்தான் வாழ்வில்லை!

ஒன்பது கோடி தமிழர்கள் யாவருக்கும்

ஒற்றைத் தமிழே அரணாகும்

எல்லா மொழிக்கும் கம்பளம் விரித்தால்

உள்ளவையெல்லாம் பறிபோகும்!        - தமிழைத் தேடி      தமிழரை நாடி

பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை

பலமொழி மோகம் பெருந்தொல்லை

அறியா மொழியில் கற்பதனாலே

அறிவை இழக்கிறான் நம் பிள்ளை!

அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றியும்

அன்னைத் தமிழ் ஏன் ஆளவில்லை

இன்னுயிர் தமிழுக்கு

தன்னுயிர் தந்தவர்

ஈகம் இன்னுமா போதவில்லை? - தமிழைத் தேடி தமிழரை நாடி 

எங்கே எங்கே என்னுயிர்த் தமிழென

எங்கள் அய்யா கேட்கின்றார்

தமிழர் தொலைத்த தமிழைத் தேடி

தமிழினப் போராளி வருகின்றார்!

தமிழின மக்களே வாருங்கள் - நம்

தமிழின் நிலையைப் பாருங்கள்

சொந்த மண்ணிலே எங்கள் தமிழ்த்தாய்

ஏதிலியா எனக் கேளுங்கள்!

தமிழா தமிழின் பெருமையறி-உன்  

தமிழால் முடியும் என்று விழி

தமிழினம் உலகில் தலைநிமிர -நம்

தமிழைத் தவிர ஏது வழி?

தமிழுக்காகத் தளராதுழைக்கும்

தமிழ் இனத்தின் நம் மருத்துவரை

அய்யா வருக! வருக! என்று

அழைக்குது பார் நம் மாமதுரை!

மருத்துவர் அய்யா தலைமையிலே - நம்

தமிழை வளர்த்த மதுரையிலே

ஒன்று கூடுவோம் தமிழர்களே- நாம்

வென்று காட்டுவோம் தோழர்களே   - தமிழைத் தேடி தமிழரை நாடி  எனப் பாடியுள்ள பாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் கடந்த ஐந்து வருடம் தமிழ் மீது வராத அக்கறை தற்போது ஆரம்பமகால தமிழாசிரியர் பின் மருத்துவர் வன்னியர் சங்க அறக்கட்டளைகளின் காவலர் என. பல ரூபங்கள் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு உண்டு தற்போது அறக்கட்டளைகளின் நிதியை அரசியலில் பயன்படுத்த முயலும் செயல் பலரும் யோசிக்க இந்தி திணிப்பை தடுக்காமல் தமிழை அய்யா சார்ந்தவர்கள் எங்கு வளர்ப்பார்கள் என மாற்றுக்கட்சியினர் பேசுவது நம் காதில் விழுகிறதே..இதில் பொது நீதி யாதெனில் அவரை நாம் நெருங்கி நன்கு அறிந்தவர்கள்  என்ற முறையில் இராமம் போட்ட செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைகள் போல பொங்குதமிழ் வளர்ச்சி மற்றும் வன்னியர் கல்வி அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல பல மருத்துவர் அய்யாவின் அரசியலில் கைவந்த கலை வித்தகரே..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த