முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரம்பரியக் கட்டிட. அமைப்பில் உருவான கீழடி அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வையில்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 31 ஆயிரம் சதுரடியில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியக் கட்டிட. அமைப்பில் உருவான கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் தற்போது  பார்வையிடுகின்றனர்.



தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டதண்  மூலமாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் கூறுகளை  உலகப், பொதுமக்கள் அணைவரும் காண்டு களிக்கும் வகையில் தமிழ்நாடு  மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகத்தில் ஆறு பிரிவுகளில் 'மதுரையும் கீழடியும்', 'வேளாண்மையும் நீர் மேலாண்மையும்', 'கலம் செய்கோ', 'ஆடையும் அணிகலன்களும்', 'கடல் வழி வணிகம்', 'வாழ்வியல்' எனும் ஆறு தலைப்புகள் அடிப்படையில் தனித்தனிக் கட்டிடங்களில் தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



தமிழர்களின் வாழ்வியல்  தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, கலாச்சாரம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டிருந்த வணிகத் தொடர்பினைப் பறைசாற்றும் வகையில், வெளிக்கொண்டு வந்த நிலையில்  உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில், கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி ஒலிக் காட்சியுடன் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அறிய மக்களின்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.




18 ஆயிரம் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகப் பண்பாட்டின் பண்டைய கால ஆற்றங்கரை நாகரிக வாழ்வியலைத் தேடி மேற்கொண்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், யானை தந்தத்தாலான பொருட்கள், மற்பாண்டங்கள், விரலளவு பானை, தாயக்கட்டை ஆட்டக்காய்கள், முதுமக்கள் தாழிகள், 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் சிற்பம், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய பொருட்களின் பாதுகாப்பிற்கான நவீன விளக்குகளுடன் கூடிய கண்ணாடிப் பேழைகள் உலகத் தரத்தில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.




அருங்காட்சியகத்தின் வெளியில் நான்கு மாடங்களுடன் கூடிய தெப்பக்குளம், கல் மண்டபமும் , நுழைவு வாயிலில் தமிழகத்தின் முக்கிய அகழாய்வுத் ஸ்தலங்களான சிவகளை, கொடுமணல், அரிட்டாபட்டி, மயிலாடும்பாறை உள்ளிட்ட 21 ஸ்தலங்கள் பற்றிய வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது. பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பொது மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.

க்யூஆர் கோடு மூலம் வெளிநாடுகளிலுள்ள மக்களும் கண்டு ரசிக்கலாம்

கீழடி அருங்காட்சியகம் குறித்து தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம்  கூறுகையில், கீழடி மற்றும் கொந்தகைப் பகுதியில் நடைபெற்ற நான்கு முதல் எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த 18 ஆயிரம் தொல்பொருட்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரித்து காட்சிப்படுத்தியுள்ளோம்.





இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் ஆறு கட்டிடங்களில் கீழடி அருங்காட்சியகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வை நேரடியாக வந்து பார்க்க இயலாத மக்கள் இந்த அருங்காட்சியகத்தின் மூலம், அகழ்வாய்வில் எவ்வாறு தொல்பொருட்கள் கிடைத்ததென்பதைப் பார்க்கும்படி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் தொல்பொருட்களை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் 'கீழடியும் வைகையும்' என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டி அனிமேஷன் உள்ளிட்டவற்றால் காணொளிக் காட்சியும் மற்றும் ஒலி வடிவில் கேட்கும் படியும் தொல்லியல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் இருக்கக்கூடிய தொல்பொருட்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் இங்குள்ள க்யூ ஆர் கோடுகளை பயன்படுத்தி கண்டு ரசிக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.

மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை இணைந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்






அடுத்த கட்ட அகழாய்வில் மாநில தொல்லியல் துறை மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அகழாய்வு செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்குமென்று கூறுகிறார். முன்னாள் மத்திய தொல்லியல் துறை அதிகாரியும் அகழ்வாய்வை முதலில் துவங்கியவருமான  அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடி அருங்காட்சியகம் குறித்து கூறுகையில், "கீழடியில் அருங்காட்சியகம் நல்ல முறையில் சிறப்பாக அமைந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் ஒரு சில இடங்களில் தொல்பொருட்களின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. எனவே அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் காட்சிபடுத்த மாநில தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழடியில் மத்திய தொழில்துறை மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த 5200 பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் படி சென்னையிலுள்ளன. அவற்றைப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை ஒப்படைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டுமென்றார்







கீழடி அருங்காட்சியத்தை பார்க்க வந்திருந்த மாணவர்களில் ஒருவர் கூறியது "பண்டைய தமிழர்கள் வாழ்ந்த முறை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவில் மிக சிறப்பாக கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம் வரும் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் தொல்லியல் பொருட்களை கண்டு ரசிப்பதும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஆறு கட்டிடங்களில் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பண்டைய தமிழர்கள் எவ்வாறு வணிகம் செய்தார்கள் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தும் கடல் வணிகம் குறித்த  கட்டிடம் தான்.





அங்கு பண்டைய தமிழர்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.அவர்கள் வணிகத்திற்காக பயன்படுத்திய பொருட்கள், நாணயம், கடல் வழிப் பயணக் கருவிகள் உள்ளிட்டவை வியப்பூட்டுகின்றது,

பண்டைய காலத்தில் பெண்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்திய யானை தந்தத்தாலான சீப்பு, கண்ணுக்கு பயன்படுத்தப்படும் மை, அணிகலன்கள், முத்துமணி, தங்கம், பாசி, உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு மிகவும் அருமை'' என்றார்.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களில்






பண்டைய தமிழர்கள் விளையாட்டிற்கு  முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்பது அவர்கள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள், விலங்குகளின் எலும்புகள், இரும்பு ஆயுதங்கள், நாணயங்கள், பானை என ஏராளமான பொருட்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டாயம் கீழடி அருங்காட்சியகத்தை அவசியம் பார்வையிட வேண்டும். கீழடியை பார்க்கும் மாணவர்களுக்கு தொல்லியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் மேலோங்கும்.




கீழடி அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித உறவுகளைப் பிரிந்து  விட்டு வருவது போல் உணர்வு ஏற்படுகிறது" என்று பல மணவர்கள் தெரிவித்தார்கள்மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தனது கருத்தாக " "மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன்.

ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடரசு.

ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. 


வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்" என தமிழ்நாட்டின் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, பாரம்பரிய விடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக அரங்கில் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் அதன்  பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்திரளாய் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,