முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தானாக பதவி பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு


காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத்தொடர்ந்து,  ஆபா முரளிதரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்,  ''இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3) ன்படி குறைந்தபட்சம்  இரண்டாண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பது தவறானது.



எனவே, அவ்வாறு தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பதை சட்டவிரோதமானதென நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். தானாகவே பதவி பறிபோய் விடும் என்பது அரசியல் சாசனத்திற்குள் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக நுழைந்துள்ள வைரஸ் கிருமியைப் போன்றதென அறிவிக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ள இந்த மனு வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவில், ''அவதூறு வழக்கில் அதிகபட்சம் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட மாட்டாது என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 ன் படி உறுதிப்படுத்த வேண்டும்.


ஏனெனில், அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையைப் பாதிக்கிறது'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும். இதில் பொதுநீதி  யாதெனில்   இராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது 
 பூர்னேஷ் மோடி  குஜராத் சட்டமன்ற உறுப்பினர் 

நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கல்ல.இது 


நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமி சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக்  கடனாகப் பெற்றுவிட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார்.  கர்நாடக மாநிலம் கோலார் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு 
மோடி, பட்டேல், சோலங்கி தாகூர் ,யாதவ்,  ரெட்டி ,ராவ், நாயுடு,கௌடா, நாயர், இவை எல்லாம் குஜராத்தில் மாத்திரமல்ல வட தென் இந்தியாவில் ஜாதிகள் இணைப்பில் இல்லாத பலரது பெயர்கள் இல்லை பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்களில் தான் மக்கள் இன்று வரை அறியப்படுகிறார்கள் மாதவ் சிங் சோலங்கி, கேசுபாய் பட்டேல் இப்படித் தான் தலைவர்களைக் கூட அழைக்கும் நிலை 


ஒரு கிராமத்தில் பல மோடிகள் இருப்பார்கள், பல பட்டேல்கள் இருப்பார்கள்... 

ராகுல் காந்தி- பிரதமர் நரேந்திர மோடியை  விமரிசிப்பதாக எண்ணி - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசியரால்

"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் ராகுல் மீது வழக்குப் போட்டுவிட்டார். இதுதான் இனிமேல் இந்தியாவில் அணைத்து சமூக ஜாதிய மக்களுக்கும் பொருந்தும் உதாரணம் காட்டும் தீர்ப்பாகும்,

"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம். 
இனி பலரும் இதே முறையில் சிக்குவார்கள்,
சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி இரண்டாண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது. 

அதே நீதிமன்றத் தீர்ப்பை  ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றம்  வரை கொண்டு முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி உண்டு 30 நாள் ஜாமீனும் உண்டு.  
இது DUE PROCESS OF LAW.
"கருத்துரிமை" பறிப்பா இல்லையா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் தான் முடிவு செய்யும் 

ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் மோசடி - என்று பேசினாரா அல்லது  ஒருவரை மட்டுமே குறிப்பிட்டாரா இது "கருத்துரிமை"யா? இல்லையா என்பதே தற்போது எழுவினா 

தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் மோசடி"- என்றால் இனி வழக்குகள் பேசியவர் மீது வரலாம் அதற்கு முன் உதாரணம் ராகுல்காந்தி மீதான தீர்ப்பு,   

தமிழ்நாட்டில் கும்மிடிப் பூண்டி தாண்டி வேறு எதுவும் தெரியாத கிணற்றுத் தவளைகள் - லால் பகதூர் சாஸ்திரியை - பிராமணர் அல்லாதவர் என்பதை அறியாமல் - வி.பி.சிங்தான் முதல் "பார்ப்பனர் அல்லாத இந்தியப் பிரதமர்"- என்று பலர் பேசிவந்ததை நாமரிவோம்  (1989 ஆம் ஆண்டில்).

இவர்களுடைய வரலாற்று அறியாமையும் பல்லிளித்தது. இவர்கள் சொல்படியே பார்த்தாலும் சரண்சிங் அதற்கு முன்பே (1979 ஆம் ஆண்டில்) சில நாட்களேனும் "பார்ப்பனரல்லாத" பிரதமர் ஆகிவிட்டார். 
இதில் சிலர் லால் பகதூர் சாஸ்திரியை பிராமணர் என்று கருதி - உண்மையில் பிராமணர் அல்லாத அவரை விட்டு விட்டு - வி.பி.சிங்தான் "பார்ப்பனரல்லாத" முதல் பிரதமர் என்று கொண்டாடினார்கள்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார். 

பிரிட்டிஷ் அரசிடமும் பின் சுதந்திர பாரதம் அமைந்தால் அந்த சுதந்திர பாரத அரசிடமும் பைசா கூட மானியம் (GRANT) வாங்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார். 

அது முழுக்க முழுக்க சுதேசி கல்வி நிறுவனம் - அதில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு "சாஸ்திரி" என்று பட்டம்! (சாஸ்திரம் - படிப்பு/ பாடம்) 

பீகாரின் பட்டியலினத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான போலோ பஸ்வான் சாஸ்திரி கூட இதில் பயின்றவர்தான். 

ஆனால் பஞ்சாபகேச சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் மட்டுமே தெரியுமாதலால் லால்பகதூர் சாஸ்திரியை "பார்ப்பனர்" கணக்கில் சேர்த்துவிட்டனர்.

முதலில் வட மாநிலங்களின் சமூக அமைப்பு - பெயர் சூட்டும் முறை இதை எல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால் - மோடியை எதிர்த்தால் அதை அரசியல் நிகழ்வாக விட்டுவிடுவார்கள்! 

ஆனால் "மோடி எனும் சாதி" யை விமர்சித்தால் வழக்கு இருவே இனி இந்தியா முழுவது ஜாதி விமர்சனம் வழக்காக மாறும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.