குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத்தொடர்ந்து, ஆபா முரளிதரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ''இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3) ன்படி குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பது தவறானது.
எனவே, அவ்வாறு தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பதை சட்டவிரோதமானதென நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். தானாகவே பதவி பறிபோய் விடும் என்பது அரசியல் சாசனத்திற்குள் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக நுழைந்துள்ள வைரஸ் கிருமியைப் போன்றதென அறிவிக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ள இந்த மனு வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவில், ''அவதூறு வழக்கில் அதிகபட்சம் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட மாட்டாது என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 ன் படி உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனெனில், அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையைப் பாதிக்கிறது'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும். இதில் பொதுநீதி யாதெனில் இராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது
பூர்னேஷ் மோடி குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கல்ல.இது
நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமி சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக் கடனாகப் பெற்றுவிட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். கர்நாடக மாநிலம் கோலார் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு
மோடி, பட்டேல், சோலங்கி தாகூர் ,யாதவ், ரெட்டி ,ராவ், நாயுடு,கௌடா, நாயர், இவை எல்லாம் குஜராத்தில் மாத்திரமல்ல வட தென் இந்தியாவில் ஜாதிகள் இணைப்பில் இல்லாத பலரது பெயர்கள் இல்லை பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்களில் தான் மக்கள் இன்று வரை அறியப்படுகிறார்கள் மாதவ் சிங் சோலங்கி, கேசுபாய் பட்டேல் இப்படித் தான் தலைவர்களைக் கூட அழைக்கும் நிலை
ஒரு கிராமத்தில் பல மோடிகள் இருப்பார்கள், பல பட்டேல்கள் இருப்பார்கள்...
ராகுல் காந்தி- பிரதமர் நரேந்திர மோடியை விமரிசிப்பதாக எண்ணி - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசியரால்
"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் ராகுல் மீது வழக்குப் போட்டுவிட்டார். இதுதான் இனிமேல் இந்தியாவில் அணைத்து சமூக ஜாதிய மக்களுக்கும் பொருந்தும் உதாரணம் காட்டும் தீர்ப்பாகும்,
"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம்.
இனி பலரும் இதே முறையில் சிக்குவார்கள்,
சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி இரண்டாண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது.
அதே நீதிமன்றத் தீர்ப்பை ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி உண்டு 30 நாள் ஜாமீனும் உண்டு.
இது DUE PROCESS OF LAW.
"கருத்துரிமை" பறிப்பா இல்லையா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் தான் முடிவு செய்யும்
ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் மோசடி - என்று பேசினாரா அல்லது ஒருவரை மட்டுமே குறிப்பிட்டாரா இது "கருத்துரிமை"யா? இல்லையா என்பதே தற்போது எழுவினா
தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் மோசடி"- என்றால் இனி வழக்குகள் பேசியவர் மீது வரலாம் அதற்கு முன் உதாரணம் ராகுல்காந்தி மீதான தீர்ப்பு,
தமிழ்நாட்டில் கும்மிடிப் பூண்டி தாண்டி வேறு எதுவும் தெரியாத கிணற்றுத் தவளைகள் - லால் பகதூர் சாஸ்திரியை - பிராமணர் அல்லாதவர் என்பதை அறியாமல் - வி.பி.சிங்தான் முதல் "பார்ப்பனர் அல்லாத இந்தியப் பிரதமர்"- என்று பலர் பேசிவந்ததை நாமரிவோம் (1989 ஆம் ஆண்டில்).
இவர்களுடைய வரலாற்று அறியாமையும் பல்லிளித்தது. இவர்கள் சொல்படியே பார்த்தாலும் சரண்சிங் அதற்கு முன்பே (1979 ஆம் ஆண்டில்) சில நாட்களேனும் "பார்ப்பனரல்லாத" பிரதமர் ஆகிவிட்டார்.
இதில் சிலர் லால் பகதூர் சாஸ்திரியை பிராமணர் என்று கருதி - உண்மையில் பிராமணர் அல்லாத அவரை விட்டு விட்டு - வி.பி.சிங்தான் "பார்ப்பனரல்லாத" முதல் பிரதமர் என்று கொண்டாடினார்கள்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார்.
பிரிட்டிஷ் அரசிடமும் பின் சுதந்திர பாரதம் அமைந்தால் அந்த சுதந்திர பாரத அரசிடமும் பைசா கூட மானியம் (GRANT) வாங்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி வித்யா பீடத்தை நிறுவினார்.
அது முழுக்க முழுக்க சுதேசி கல்வி நிறுவனம் - அதில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு "சாஸ்திரி" என்று பட்டம்! (சாஸ்திரம் - படிப்பு/ பாடம்)
பீகாரின் பட்டியலினத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான போலோ பஸ்வான் சாஸ்திரி கூட இதில் பயின்றவர்தான்.
ஆனால் பஞ்சாபகேச சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் மட்டுமே தெரியுமாதலால் லால்பகதூர் சாஸ்திரியை "பார்ப்பனர்" கணக்கில் சேர்த்துவிட்டனர்.
முதலில் வட மாநிலங்களின் சமூக அமைப்பு - பெயர் சூட்டும் முறை இதை எல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால் - மோடியை எதிர்த்தால் அதை அரசியல் நிகழ்வாக விட்டுவிடுவார்கள்!
ஆனால் "மோடி எனும் சாதி" யை விமர்சித்தால் வழக்கு இருவே இனி இந்தியா முழுவது ஜாதி விமர்சனம் வழக்காக மாறும்
கருத்துகள்