முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னரின் சகோதரர் மனைவி காலமானார்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான இராஜா ஶ்ரீராஜகோபாலத் தொண்டைமானின்  சகோதரர் ராதாகிருஷ்ணத் தொண்டைமானின் மனைவியும்,


ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியவர்களின்  தாயாருமான  ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.இதை தற்போது அவர்கள் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி முன்னாள் மேயர் சாருபாலாவின் மாமியாராவார்

அவரது மறைவிற்கு திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை சமஸ்தானத்தைச்ச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்,   இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின்,  9 வது மன்னராக 6 வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டவர்  ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சுதந்திர நாளில் 1948 ல் கடைசி மன்னரும் இவர் தான். 1922 - ஆம் ஆண்டு பிறந்தவர் 1928 - ஆம் ஆண்டில் இளம் வயதில் மன்னராக்கப்பட்டார். அவருக்குத் துணையாக நிர்வாகத்தைக் கவனிக்க மூவர் கொண்ட நிர்வாகக் குழு  அமைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகம் செய்தனர்.


 1944 - ஆம் ஆண்டில் 22 வது வயதில் சம்ஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ராஜகோபாலத் தொண்டைமான் ஏற்றுக்கொண்டார். மன்னர் மற்றும் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களால் மக்களுக்குப் பல நன்மைகள் நடந்தன. 1946 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா சுதந்திரமடைவது உறுதியாகிவிட்ட நிலையில், சுதேசி சமஸ்தானங்கள் தனித்து இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், 1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர்கள் ஆளும் சமஸ்தானப் பகுதிகள் மக்களாட்சிக்கு மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் தனித்தே இயங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததற்கிடையேதான், சமஸ்தான நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு விரும்பிய நிலையில், அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு அழைப்பிற்கு இணங்க, ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லிக்குச் சென்றார். அங்கு, இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்கள் பலரும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதனைப் புரிந்துகொண்ட  மன்னர்,ராணுவ நடவடிக்கை வந்துவிடும் நிலை இருந்த காரணமாக தேவை காரணமாக  சமஸ்தான திவான் மற்றும் உயர் அதிகாரிகள் எவரையும் கலந்துகொள்ளாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களிலும் கையெழுத்திட்டுத் திரும்பியினார். அதோடு நகை, பணங்களையும் வழங்கியிருக்கிறார்.1948 மார்ச் 3 - ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேல் விஜயரகுநாதனய துவங்கி புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் ஆட்சி முடிவுற்றது. 1974 - ஆம் ஆணடில் புதுக்கோட்டை தனி நாடாக உருவானபோது, 99.99 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பழமையான கட்டடக் கலையின் கீழ் கட்டப்பட்ட புதிய அரண்மனையைக் குறைந்த தொகைக்கு அரசிடம் வழங்கியிருக்கிறார். அந்த அரண்மனையில், தான் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு