முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னரின் சகோதரர் மனைவி காலமானார்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான இராஜா ஶ்ரீராஜகோபாலத் தொண்டைமானின்  சகோதரர் ராதாகிருஷ்ணத் தொண்டைமானின் மனைவியும்,


ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியவர்களின்  தாயாருமான  ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.இதை தற்போது அவர்கள் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி முன்னாள் மேயர் சாருபாலாவின் மாமியாராவார்

அவரது மறைவிற்கு திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை சமஸ்தானத்தைச்ச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்,   இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின்,  9 வது மன்னராக 6 வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டவர்  ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சுதந்திர நாளில் 1948 ல் கடைசி மன்னரும் இவர் தான். 1922 - ஆம் ஆண்டு பிறந்தவர் 1928 - ஆம் ஆண்டில் இளம் வயதில் மன்னராக்கப்பட்டார். அவருக்குத் துணையாக நிர்வாகத்தைக் கவனிக்க மூவர் கொண்ட நிர்வாகக் குழு  அமைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகம் செய்தனர்.


 1944 - ஆம் ஆண்டில் 22 வது வயதில் சம்ஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ராஜகோபாலத் தொண்டைமான் ஏற்றுக்கொண்டார். மன்னர் மற்றும் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களால் மக்களுக்குப் பல நன்மைகள் நடந்தன. 1946 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா சுதந்திரமடைவது உறுதியாகிவிட்ட நிலையில், சுதேசி சமஸ்தானங்கள் தனித்து இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், 1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர்கள் ஆளும் சமஸ்தானப் பகுதிகள் மக்களாட்சிக்கு மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் தனித்தே இயங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததற்கிடையேதான், சமஸ்தான நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு விரும்பிய நிலையில், அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு அழைப்பிற்கு இணங்க, ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லிக்குச் சென்றார். அங்கு, இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்கள் பலரும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதனைப் புரிந்துகொண்ட  மன்னர்,ராணுவ நடவடிக்கை வந்துவிடும் நிலை இருந்த காரணமாக தேவை காரணமாக  சமஸ்தான திவான் மற்றும் உயர் அதிகாரிகள் எவரையும் கலந்துகொள்ளாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களிலும் கையெழுத்திட்டுத் திரும்பியினார். அதோடு நகை, பணங்களையும் வழங்கியிருக்கிறார்.1948 மார்ச் 3 - ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேல் விஜயரகுநாதனய துவங்கி புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் ஆட்சி முடிவுற்றது. 1974 - ஆம் ஆணடில் புதுக்கோட்டை தனி நாடாக உருவானபோது, 99.99 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பழமையான கட்டடக் கலையின் கீழ் கட்டப்பட்ட புதிய அரண்மனையைக் குறைந்த தொகைக்கு அரசிடம் வழங்கியிருக்கிறார். அந்த அரண்மனையில், தான் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...