முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னரின் சகோதரர் மனைவி காலமானார்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான இராஜா ஶ்ரீராஜகோபாலத் தொண்டைமானின்  சகோதரர் ராதாகிருஷ்ணத் தொண்டைமானின் மனைவியும்,


ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியவர்களின்  தாயாருமான  ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.இதை தற்போது அவர்கள் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி முன்னாள் மேயர் சாருபாலாவின் மாமியாராவார்

அவரது மறைவிற்கு திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை சமஸ்தானத்தைச்ச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்,   இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின்,  9 வது மன்னராக 6 வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டவர்  ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சுதந்திர நாளில் 1948 ல் கடைசி மன்னரும் இவர் தான். 1922 - ஆம் ஆண்டு பிறந்தவர் 1928 - ஆம் ஆண்டில் இளம் வயதில் மன்னராக்கப்பட்டார். அவருக்குத் துணையாக நிர்வாகத்தைக் கவனிக்க மூவர் கொண்ட நிர்வாகக் குழு  அமைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகம் செய்தனர்.


 1944 - ஆம் ஆண்டில் 22 வது வயதில் சம்ஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ராஜகோபாலத் தொண்டைமான் ஏற்றுக்கொண்டார். மன்னர் மற்றும் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களால் மக்களுக்குப் பல நன்மைகள் நடந்தன. 1946 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா சுதந்திரமடைவது உறுதியாகிவிட்ட நிலையில், சுதேசி சமஸ்தானங்கள் தனித்து இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், 1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர்கள் ஆளும் சமஸ்தானப் பகுதிகள் மக்களாட்சிக்கு மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் தனித்தே இயங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததற்கிடையேதான், சமஸ்தான நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு விரும்பிய நிலையில், அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு அழைப்பிற்கு இணங்க, ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லிக்குச் சென்றார். அங்கு, இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்கள் பலரும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதனைப் புரிந்துகொண்ட  மன்னர்,ராணுவ நடவடிக்கை வந்துவிடும் நிலை இருந்த காரணமாக தேவை காரணமாக  சமஸ்தான திவான் மற்றும் உயர் அதிகாரிகள் எவரையும் கலந்துகொள்ளாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களிலும் கையெழுத்திட்டுத் திரும்பியினார். அதோடு நகை, பணங்களையும் வழங்கியிருக்கிறார்.1948 மார்ச் 3 - ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேல் விஜயரகுநாதனய துவங்கி புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் ஆட்சி முடிவுற்றது. 1974 - ஆம் ஆணடில் புதுக்கோட்டை தனி நாடாக உருவானபோது, 99.99 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பழமையான கட்டடக் கலையின் கீழ் கட்டப்பட்ட புதிய அரண்மனையைக் குறைந்த தொகைக்கு அரசிடம் வழங்கியிருக்கிறார். அந்த அரண்மனையில், தான் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.