புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான இராஜா ஶ்ரீராஜகோபாலத் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ணத் தொண்டைமானின் மனைவியும்,
ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் ஆகியவர்களின் தாயாருமான ராணி ரமாதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.இதை தற்போது அவர்கள் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி முன்னாள் மேயர் சாருபாலாவின் மாமியாராவார்
அவரது மறைவிற்கு திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை சமஸ்தானத்தைச்ச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார், இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின், 9 வது மன்னராக 6 வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டவர் ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சுதந்திர நாளில் 1948 ல் கடைசி மன்னரும் இவர் தான். 1922 - ஆம் ஆண்டு பிறந்தவர் 1928 - ஆம் ஆண்டில் இளம் வயதில் மன்னராக்கப்பட்டார். அவருக்குத் துணையாக நிர்வாகத்தைக் கவனிக்க மூவர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகம் செய்தனர்.
1944 - ஆம் ஆண்டில் 22 வது வயதில் சம்ஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ராஜகோபாலத் தொண்டைமான் ஏற்றுக்கொண்டார். மன்னர் மற்றும் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களால் மக்களுக்குப் பல நன்மைகள் நடந்தன. 1946 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா சுதந்திரமடைவது உறுதியாகிவிட்ட நிலையில், சுதேசி சமஸ்தானங்கள் தனித்து இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், 1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர்கள் ஆளும் சமஸ்தானப் பகுதிகள் மக்களாட்சிக்கு மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் தனித்தே இயங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததற்கிடையேதான், சமஸ்தான நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு விரும்பிய நிலையில், அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு அழைப்பிற்கு இணங்க, ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லிக்குச் சென்றார். அங்கு, இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்கள் பலரும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதனைப் புரிந்துகொண்ட மன்னர்,ராணுவ நடவடிக்கை வந்துவிடும் நிலை இருந்த காரணமாக தேவை காரணமாக சமஸ்தான திவான் மற்றும் உயர் அதிகாரிகள் எவரையும் கலந்துகொள்ளாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களிலும் கையெழுத்திட்டுத் திரும்பியினார். அதோடு நகை, பணங்களையும் வழங்கியிருக்கிறார்.1948 மார்ச் 3 - ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேல் விஜயரகுநாதனய துவங்கி புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் ஆட்சி முடிவுற்றது. 1974 - ஆம் ஆணடில் புதுக்கோட்டை தனி நாடாக உருவானபோது, 99.99 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பழமையான கட்டடக் கலையின் கீழ் கட்டப்பட்ட புதிய அரண்மனையைக் குறைந்த தொகைக்கு அரசிடம் வழங்கியிருக்கிறார். அந்த அரண்மனையில், தான் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டுகிறது.
கருத்துகள்