ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் முதல் தேதி தேதி
(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.."திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து... என்ற நெடுநல்வாடை பாடல் முதல் நூற்றாண்டிலேயே புலவர் நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு கூறும் புது வருடம் துவங்கியது.
சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து மறுபடியும் பயணத்தைத் தொடங்கும் காலம் தான் தமிழ் புத்தாண்டாகும். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சுபகிருது வருடம் முடிவடைந்து சோபகிருது வருடம் பிறக்கவிருக்கிறது. சோபகிருது வடமொழிச் சொல்லிற்கு மங்கலம் அளித்தல் எனப் பொருள். 2023 ஆம் ஆண்டில் சோபகிருது ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் துவங்குகிறது. ஆனால் அன்றைய தினம் அஷ்டமி, நவமி இணைந்த நாளாக உள்ளது.
அஷ்டமி, நவமியில் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலை 02.51 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதி உள்ளது. இதே போல் ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.31 தொடங்கி, இரவு 10.02 வரை நவமி திதி உள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது என்றாலும், அன்று நவமி திதியில் பிறக்க இருக்கும் சோபகிருது ஆணடு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி பஞ்சாங்கத்தில் சொல்லப்படும் நவமி திதியில் பிறக்க போகும் புத்தாண்டில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க இறை வழிபாடு செய்ய வேண்டும்.
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!! இந்த வருடம் சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடிவு வரை குருபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சாரம் செய்கிறார். வருட ஆரம்ப முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 1மற்றும் 7-ம் இடங்களிலும் ஐப்பசி 13-ம் தேதி முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 6-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதன் மூலம் இவ்வருடம் தெய்வீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள்.பிரபவ முதல் அட்சய வரை வடமொழி கலந்து தான் தமிழ் வருடங்கள் 1.பிரபவ - நற்றோன்றல்
2. விபவ - உயர் தோன்றல்
3. சுக்கில - வெள்ளோளி
4. பிரமோதூத - பேருவகை
5. பிரஜோத்பதி- மக்கட்செல்வம்
6. ஆங்கிரஷ- அயல்முனி
7. ஸ்ரீ முக - திருமுகம்
8. பவ - தோற்றம்
9. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவனம்
13. பிரமாதி - முன்மை
14. விக்ரம - நேர் நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்ரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்திப - நிலவரையன்
20. விய - விரி மாண்பு
21. ஸர்வஜித் - முற்நறிவு
22. ஸர்வதாரி- முழு நிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய் நேர்த்தி
26. நிந்தன- நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத- காதன்மை
30. துர்முகி- வெம்முகம்
31. ஹேவிளம்பி -பொற்றாடை
32. விளம்பி - அட்டி
33. விஹாரி - எழில்மாறல்
34. சார்வாரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது,- நற்செய்கை
37. சோபகிருது-மங்கலம்
38. குரோதி- பகைக் கேடு
39. விஸ்வாவசு - உலக நிறைவு
40. பராபவ - அருட்டோற்றம்
41. பிலவங்க- நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌம்ய -அழகு
44. சாதாரண- பொதுநிலை
45. விரோதிகிருது - இதல்வீறு
46 .பரிதாபி- கழி விரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த- பெருமகிழ்ச்சி
49. ராஷஸ பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமை வீச்சு
53. சித்தார்த்தி - முன்னிய முடிதல்
54. ரௌத்ரி - அழலி
55. துர்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி- ஒடுங்கி
58. ரக்தாக்ஷி - (சரஸ்வதி)
59. குரோதன- எதிரேற்றம்
60. அக்ஷய - வளங்கலன்
ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் சர்ச்சை, பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர் தமிழா அல்லது வடமொழியா என்பதே அதாவது நாமறிந்த வரை பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி கொண்டு வந்த தமிழ் மாற்றத்திற்கு முன் அழகான உச்சரிப்பு கலந்து தமிழ் அழகாகப் பேசிய மக்கள் வாழ்ந்த பூமி தமிழ் பூமி அதில் ஜாதி சாதி யாகி உச்சரிப்பு பிழை உண்டு இதுபோல பல குறைபாடுகள் நாம் படித்த காலத்தில் தமிழை வடமொழி கலந்து நல்ல தமிழ் படித்தோம் அது தற்போது மாறிய காரணம் அரசியல் தான்
சிலர் இராஜராஜ சோழ மன்னர் பாலமூரி (கர்நாடகா) கல்வெட்டில் பரிதாபி ஆண்டின் பெயர் இடம் பெற்றுள்ளது, சோழர் காலத்தில் இந்த பெயர்கள் உள்ளதால் இது தமிழ் ஆண்டுகள் தான் என்று கூறலாம்.
இராஜராஜரின் மேற் சொன்ன கன்னடக் கல்வெட்டைத் தவிர இன்னும் நிறைய கன்னட,தெலுங்கு கல்வெட்டுகளில் இந்த 60 ஆண்டுகளின் பெயர்கள் உள்ளது.(இதெல்லாம் சோழர்கள் ,பாண்டியர்கள் கல்வெட்டுகள்)
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் கன்னட,தெலுங்கு கல்வெட்டில் ஆண்டின் பெயரை பொறித்தவர்கள் தமிழ் கல்வெட்டில் ஆண்டுப் பெயர்களை வெட்டவில்லை(மிகவும் அரிதாக மூன்றாம் குலோத்துங்கனது ஒரேஒரு கல்வெட்டில் மட்டுமே இடம் பெறுகிறது).
பல்லவர்கள் காலக் கல்வெட்டில் ஆண்டுகளின் பெயர்கள் இல்லை. ஆனால் பல்லவர்களின் சமகாலத்தவரான வாதாபி சாளுக்கியர்கள், இராஷ்ட்டிரகூடர்களின் நிறைய கன்னடக் கல்வெட்டில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹெய்சாளர்களின் கல்வெட்டுகளில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெறத் துவங்குகிறது, அவர்களைத் தொடர்ந்து விஜயநகரப் பேரரசின் பெரும்பாலான கல்வெட்டுகளில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெறுகிறது.பிற்காலத்தில் தென்காசிப் பாண்டியர்களும் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.
எனவே இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழா இல்லையா என்பதே வாதம் தேவையில்லை அது வடமொழி கலந்தாலும் வாசிப்பும் உச்சரிப்பும் தமிழ் தான் மாற்றமில்லை.
கருத்துகள்