முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ மங்கலகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் வருடம் பிறக்கிறது

ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் முதல் தேதி தேதி




(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.."திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து... என்ற நெடுநல்வாடை பாடல் முதல் நூற்றாண்டிலேயே புலவர் நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு கூறும் புது வருடம் துவங்கியது. 

சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து மறுபடியும் பயணத்தைத் தொடங்கும் காலம் தான் தமிழ் புத்தாண்டாகும். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சுபகிருது வருடம் முடிவடைந்து சோபகிருது வருடம் பிறக்கவிருக்கிறது.        சோபகிருது  வடமொழிச் சொல்லிற்கு மங்கலம் அளித்தல் எனப் பொருள். 2023 ஆம் ஆண்டில் சோபகிருது ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் துவங்குகிறது. ஆனால் அன்றைய தினம் அஷ்டமி, நவமி இணைந்த நாளாக உள்ளது.




அஷ்டமி, நவமியில் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலை 02.51 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதி உள்ளது. இதே போல் ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 12.31 தொடங்கி, இரவு 10.02 வரை நவமி திதி உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது என்றாலும், அன்று நவமி திதியில் பிறக்க இருக்கும் சோபகிருது ஆணடு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி பஞ்சாங்கத்தில்  சொல்லப்படும்  நவமி திதியில் பிறக்க போகும் புத்தாண்டில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க இறை வழிபாடு  செய்ய வேண்டும்.

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!! இந்த வருடம் சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடிவு வரை குருபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சாரம் செய்கிறார். வருட ஆரம்ப முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 1மற்றும் 7-ம் இடங்களிலும் ஐப்பசி 13-ம் தேதி முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 6-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதன் மூலம் இவ்வருடம் தெய்வீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள்.பிரபவ முதல் அட்சய வரை வடமொழி கலந்து தான் தமிழ் வருடங்கள்                                    1.பிரபவ -  நற்றோன்றல்

2. விபவ -  உயர் தோன்றல்

3. சுக்கில - வெள்ளோளி

4. பிரமோதூத - பேருவகை

5. பிரஜோத்பதி- மக்கட்செல்வம்

6. ஆங்கிரஷ-  அயல்முனி

7. ஸ்ரீ முக -   திருமுகம்

8. பவ  -  தோற்றம்

9. யுவ -  இளமை

10. தாது -  மாழை

11. ஈஸ்வர  -  ஈச்சுரம்

12. வெகுதானிய -  கூலவனம்

13. பிரமாதி - முன்மை

14. விக்ரம -  நேர் நிரல்

15. விஷு - விளைபயன்

16. சித்ரபானு - ஓவியக்கதிர்

17. சுபானு - நற்கதிர்

18. தாரண -   தாங்கெழில்

19. பார்திப - நிலவரையன்

20. விய -  விரி மாண்பு

21. ஸர்வஜித் - முற்நறிவு

22. ஸர்வதாரி-  முழு நிறைவு

23. விரோதி -  தீர்பகை

24. விக்ருதி -  வளமாற்றம்

25. கர - செய் நேர்த்தி

26. நிந்தன-   நற்குழவி

27. விஜய -   உயர்வாகை

28. ஜய -  வாகை

29. மன்மத- காதன்மை

30. துர்முகி-   வெம்முகம்

31. ஹேவிளம்பி -பொற்றாடை

32. விளம்பி  -  அட்டி

33. விஹாரி - எழில்மாறல்

34. சார்வாரி - வீறியெழல்

35. பிலவ  - கீழறை

36. சுபகிருது,- நற்செய்கை

37. சோபகிருது-மங்கலம்

38. குரோதி-  பகைக் கேடு

39. விஸ்வாவசு - உலக நிறைவு

40. பராபவ -  அருட்டோற்றம்

41. பிலவங்க- நச்சுப்புழை

42. கீலக -  பிணைவிரகு

43. சௌம்ய  -அழகு

44. சாதாரண- பொதுநிலை

45. விரோதிகிருது - இதல்வீறு

46 .பரிதாபி- கழி விரக்கம்

47. பிரமாதீச - நற்றலைமை

48. ஆனந்த- பெருமகிழ்ச்சி

49. ராஷஸ    பெருமறம்

50. நள -  தாமரை

51. பிங்கள - பொன்மை

52. காளயுக்தி - கருமை வீச்சு

53. சித்தார்த்தி  - முன்னிய முடிதல்

54. ரௌத்ரி - அழலி

55. துர்மதி - கொடுமதி

56. துந்துபி  - பேரிகை

57. ருத்ரோத்காரி- ஒடுங்கி

58. ரக்தாக்ஷி - (சரஸ்வதி)

59. குரோதன- எதிரேற்றம்

60. அக்ஷய -  வளங்கலன்

ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் சர்ச்சை, பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர் தமிழா அல்லது வடமொழியா என்பதே அதாவது நாமறிந்த வரை பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி கொண்டு வந்த தமிழ் மாற்றத்திற்கு முன் அழகான உச்சரிப்பு கலந்து தமிழ் அழகாகப் பேசிய மக்கள் வாழ்ந்த பூமி தமிழ் பூமி அதில் ஜாதி சாதி யாகி உச்சரிப்பு பிழை உண்டு இதுபோல பல குறைபாடுகள் நாம் படித்த காலத்தில் தமிழை  வடமொழி கலந்து நல்ல தமிழ் படித்தோம் அது தற்போது மாறிய காரணம் அரசியல் தான் 

சிலர் இராஜராஜ சோழ மன்னர்  பாலமூரி (கர்நாடகா) கல்வெட்டில் பரிதாபி ஆண்டின் பெயர் இடம் பெற்றுள்ளது,  சோழர் காலத்தில் இந்த பெயர்கள் உள்ளதால் இது தமிழ் ஆண்டுகள் தான் என்று கூறலாம்.

இராஜராஜரின் மேற் சொன்ன கன்னடக் கல்வெட்டைத் தவிர இன்னும் நிறைய கன்னட,தெலுங்கு கல்வெட்டுகளில் இந்த 60 ஆண்டுகளின் பெயர்கள் உள்ளது.(இதெல்லாம் சோழர்கள் ,பாண்டியர்கள் கல்வெட்டுகள்)

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் கன்னட,தெலுங்கு கல்வெட்டில் ஆண்டின் பெயரை பொறித்தவர்கள் தமிழ் கல்வெட்டில் ஆண்டுப் பெயர்களை வெட்டவில்லை(மிகவும் அரிதாக மூன்றாம் குலோத்துங்கனது ஒரேஒரு கல்வெட்டில் மட்டுமே இடம் பெறுகிறது).

பல்லவர்கள் காலக் கல்வெட்டில் ஆண்டுகளின் பெயர்கள் இல்லை. ஆனால் பல்லவர்களின் சமகாலத்தவரான வாதாபி சாளுக்கியர்கள், இராஷ்ட்டிரகூடர்களின்  நிறைய கன்னடக் கல்வெட்டில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹெய்சாளர்களின் கல்வெட்டுகளில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெறத் துவங்குகிறது,    அவர்களைத் தொடர்ந்து விஜயநகரப்  பேரரசின் பெரும்பாலான கல்வெட்டுகளில் இந்த ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெறுகிறது.பிற்காலத்தில் தென்காசிப் பாண்டியர்களும் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.

எனவே இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழா இல்லையா என்பதே வாதம் தேவையில்லை அது வடமொழி கலந்தாலும் வாசிப்பும் உச்சரிப்பும் தமிழ் தான் மாற்றமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த