பாரம்பரிய விளையாட்டுப் பெருவிழாவை ஏற்பாடு செய்த ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
இந்தியாவின் வளமான விளையாட்டு மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பரம்பரிக் கிரீடா எனும் பாரம்பரிய விளையாட்டுப் பெருவிழாவை முன்னெடுக்கும் ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் ட்வீட்டிற்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் செழுமையான விளையாட்டு மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பாரம்பரிய விளையாட்டுப் பெருவிழாவை முன்னெடுப்பது ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் பாராட்டுக்குரிய முயற்சி."
கருத்துகள்