நீலகிரி மாவட்டம் முதுமலைக்காட்டில் உள்ள புலிகள் சரணாலயத்துக் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகளின் முகாமுக்கு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகைதரவுள்ளார்
அங்கு யானைகளைப் பராமரிக்கும் முறைகளும், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகளைக் குறித்தும் உரியவர்களிடம் கேட்கிறார். பின்னர் யானைப் பாகன்களிடம் கலந்துரையாடுவதைத்
தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த யானைப் பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியைச் சந்தித்துப் பாராட்டி கௌரவிக்கிறார். மற்றும் ரகு, பொம்மி குட்டி என்ற யானைகளையும் பார்வையிடுகிறார். பின் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர் மசினகுடி இறங்கு தரைத்தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்
ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார் பிரதமர் வருகை காரணமாக முதுமலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்படடுள்ளது,பிரதமர் மோடி 9-ந் தேதி தெப்பக்காடு வருவதன் காரணமாக பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கருத்துகள்