திருவாடுதுறை ஆதீனத்தால் கொடுக்கப்பட்ட சோழ செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் உள்துறை அமைச்சர் தகவல்
வரலாற்று சிறப்புமிக்க நீதியை நிலைநாட்டும் பழம்பெரும் சைவ மடமான திருவாடுதுறை ஆதீனத்தால் கொடுக்கப்பட்ட சோழ செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்
என்று மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அறிவிப்பு சோழ தேசத்தின் பெருமைகளை பறைசாற்றுகிறது.
தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நிலைநாட்டும் கலாச்சார காவலன் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் 28 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மிக உயர்ந்த சட்ட மன்றத்தின் இருக்கையாகும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம், தற்போதைய காலனித்துவக் காலக் கட்டிடத்தை விட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சட்டமன்ற நடவடிக்கைகளின் மையமாக இருக்கவே விரும்புகிற நிலையில் புதிய கட்டிடத் திறப்பு விழா தேதி நெருங்கும் நிலை
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஏற்கனவே உள்ள கட்டிடத்திற்கு அடுத்ததாக உள்ளது, கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது. இது ஹெரிடேஜ் கிரேடு-1 கட்டிடம். மத்திய விஸ்டா திட்டத்தில் இந்திய அரசின் இணையதளம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
"பல ஆண்டுகளாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் அங்கு பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது... புதிய கட்டுமானங்களும் மாற்றங்களும் தற்காலிகமான முறையில் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, வெளிப்புறத்தில் 1956 ஆம் ஆண்டில் இரண்டு புதிய மாடிகள் கட்டப்பட்டன. கட்டிடத்தின் வட்டப் பகுதியானது மத்திய மண்டபத்தின் குவிமாடத்தை மறைத்து, அசல் கட்டிடத்தின் முகப்பை மாற்றியது. மேலும், ஜல்லி ஜன்னல்களின் உறைகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அரங்குகளில் இயற்கை வெளிச்சம் குறைந்து விட்டது. இடர்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு மற்றும் இடம், வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை" என இணையதளத்தில் கூறப்படுகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தற்போது வட்ட வடிவில் உள்ள கட்டிடத்திற்கு மாறாக முக்கோண வடிவில் உள்ளது. இது, 'உகந்த இடத்தைப் பயன்படுத்துவதை' உறுதி செய்கிறது என்று இந்திய அரசு கூறுகிறது. "தற்போதைய கட்டிடம் ஒரு முழு அளவிலான ஜனநாயகத்திற்காக இரு அவைகளின் சட்டமன்றத்திற்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை" என்று அரசின் இணையதளம் கூறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 லிருந்து மாறாமல் உள்ளது,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே 28 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார், ஆனால் விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடும்.
அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026 வரை மட்டுமே.
நாட்டில் வேறு சில முக்கிய விஷயங்கள் இருக்கும் போது அவசர அவசரமாக லட்சக்கணக்கில் செலவழித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான செலவு 9.7 பில்லியன் ரூபாய் ($117.1 மில்லியன், £94.2 மில்லியன்) எனத் சில செய்திகளில் தெரிவித்துள்ளது.
பிரதமர் இந்தத் திட்டத்தை பலமுறை பாராட்டியுள்ளார், மேலும் இது இந்தியர்களால் கட்டப்பட்ட முதல் நாடாளுமன்ற க்கட்டிடம் என்றும் கூறினார். எதிர்கட்சியினர் வாதிடுவது புதிய கட்டமைப்பை முழுவதுமாக நிர்மாணிப்பதற்கு பதிலாக, எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய கட்டிடத்தை மேம்படுத்துவது இன்னும் சாத்தியமாகும்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கட்டிடத்தின் அடையாளத்தை குறைக்கும் முயற்சி தான் புதிய கட்டிடம் என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் பெரும்பாலும் அரசியல் வட்டாரங்களில் பலரால் மத நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது, மதமும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சியும் மறுக்கிறது. மேலும் 1947 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15 அன்று நல்லிரவில் நாடு விடுதலை அடைந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை இந்தியத் தலைவர்களிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்வு.
அதற்கு முன்னதாக அதற்கான எந்த மரபு முறைகளைப் பற்றியும் அப்போதய காங்கிரஸ் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் என ஒருபுறம் இருப்பினும் நமது முறைப்படியான மங்கலத் தொடக்கம் எப்படி என்று வட மாநிலத் தலைவர்கள் பாரம்பரிய வழி முறையில் ஏதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியில் அன்று பிராமணிய ஆதிக்கம் அதிகம் என்று திராவிடக் கட்சிகள் தொடர்ந்து கூறியது போல அன்றிருந்த காங்கிரஸ் கட்சி பிராமணர்கள் கூட இதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படவில்லை.
தமிழ் மரபில் சைவப்பெரும் தலைமையிடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தின் தவத்திரு அம்பலவாண சுவாமிகள் சார்பில் பொன்னால் ஒரு செங்கோல் செய்யப்பட்டு உச்சியில் நந்தி தேவரின் சிலை வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பபட்டது.
சிறப்பு விமானத்தில் செங்கோலுடன் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தவில், நாகஸ்வர வித்வான்கள். தமிழ் ஓதுவார் ஆகியோரும் டெல்லிக்குச் அழைத்துச் சென்றனர்.
திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் ஓதுவாரால் பாடப்பெற்றது. கோளறு பதிகத்தின் இறுதி வரிகள் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்று முடியும்.
ஒன்பது கோள்களைப் போற்றிப் பாடி சிவபெருமானை வணங்கிப் பாடும் சிறந்த பதிகங்கள் அவை.
தவில், நாகஸ்வர மங்கல இசை இசைக்க செங்கோல் இந்தியப் பிரதமர் நேருவிடம் திருமிகு குமாரசாமி தம்பிரானால் ஆகஸ்ட் 14 நள்ளிரவு 11.59 க்கு பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி வைஸ்ராய் மௌன்ட்பேட்டன் பிரபு முன்பு அளிக்கப்பட்டது.
நாடு விடுதலையடைந்தது. தென்னாடுடைய சிவபெருமானை வணங்கி நாட்டின் சுதந்திரச் செங்கோல் புதிதாகப் பெறப்பட்டது. மன்னர் ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்தது
இந்த செங்கோலைத்தான் நாடாளுமன்றப் புதிய கட்டடத்தில் வைக்கிறார்கள்.புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவர் தான்.
அவரது பெயர் கூட அழைப்பில் இல்லை என்பது தான் ,
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றன
கருத்துகள்