முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவாடுதுறை ஆதீனத்தால் கொடுக்கப்பட்ட சோழ செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் உள்துறை அமைச்சர் தகவல்

வரலாற்று சிறப்புமிக்க நீதியை நிலைநாட்டும் பழம்பெரும் சைவ மடமான திருவாடுதுறை ஆதீனத்தால் கொடுக்கப்பட்ட சோழ செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்


என்று மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அறிவிப்பு சோழ தேசத்தின் பெருமைகளை பறைசாற்றுகிறது.




தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நிலைநாட்டும் கலாச்சார காவலன் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. Narendra Modi   அவர்களுக்கும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் 28 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மிக உயர்ந்த சட்ட மன்றத்தின் இருக்கையாகும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம், தற்போதைய காலனித்துவக் காலக் கட்டிடத்தை விட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சட்டமன்ற நடவடிக்கைகளின் மையமாக இருக்கவே விரும்புகிற நிலையில் புதிய கட்டிடத் திறப்பு விழா தேதி நெருங்கும் நிலை



புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஏற்கனவே உள்ள கட்டிடத்திற்கு அடுத்ததாக உள்ளது, கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது. இது ஹெரிடேஜ் கிரேடு-1 கட்டிடம்.  மத்திய விஸ்டா திட்டத்தில் இந்திய அரசின் இணையதளம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.




"பல ஆண்டுகளாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் அங்கு பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது... புதிய கட்டுமானங்களும் மாற்றங்களும் தற்காலிகமான முறையில் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, வெளிப்புறத்தில் 1956 ஆம் ஆண்டில் இரண்டு புதிய மாடிகள் கட்டப்பட்டன. கட்டிடத்தின் வட்டப் பகுதியானது மத்திய மண்டபத்தின் குவிமாடத்தை மறைத்து, அசல் கட்டிடத்தின் முகப்பை மாற்றியது. மேலும், ஜல்லி ஜன்னல்களின் உறைகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அரங்குகளில் இயற்கை வெளிச்சம் குறைந்து விட்டது. இடர்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு மற்றும் இடம், வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை" என இணையதளத்தில் கூறப்படுகிறது.


புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தற்போது வட்ட வடிவில் உள்ள கட்டிடத்திற்கு மாறாக முக்கோண வடிவில் உள்ளது. இது, 'உகந்த இடத்தைப் பயன்படுத்துவதை' உறுதி செய்கிறது என்று இந்திய அரசு கூறுகிறது. "தற்போதைய கட்டிடம் ஒரு முழு அளவிலான ஜனநாயகத்திற்காக இரு அவைகளின் சட்டமன்றத்திற்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை" என்று அரசின் இணையதளம் கூறுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 லிருந்து மாறாமல் உள்ளது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே 28 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார், ஆனால் விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடும். 





அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026 வரை மட்டுமே.

நாட்டில் வேறு சில முக்கிய விஷயங்கள் இருக்கும் போது அவசர அவசரமாக லட்சக்கணக்கில் செலவழித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான செலவு 9.7 பில்லியன் ரூபாய் ($117.1 மில்லியன், £94.2 மில்லியன்) எனத் சில செய்திகளில்  தெரிவித்துள்ளது.

பிரதமர் இந்தத் திட்டத்தை பலமுறை பாராட்டியுள்ளார், மேலும் இது இந்தியர்களால் கட்டப்பட்ட முதல் நாடாளுமன்ற க்கட்டிடம் என்றும் கூறினார். எதிர்கட்சியினர் வாதிடுவது புதிய கட்டமைப்பை முழுவதுமாக நிர்மாணிப்பதற்கு பதிலாக, எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய கட்டிடத்தை மேம்படுத்துவது இன்னும் சாத்தியமாகும். 







சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கட்டிடத்தின் அடையாளத்தை குறைக்கும் முயற்சி தான் புதிய கட்டிடம் என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் பெரும்பாலும் அரசியல் வட்டாரங்களில் பலரால் மத நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது, மதமும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சியும்  மறுக்கிறது. மேலும் 1947 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15 அன்று நல்லிரவில்  நாடு விடுதலை அடைந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை இந்தியத் தலைவர்களிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்வு.

அதற்கு முன்னதாக அதற்கான எந்த மரபு முறைகளைப் பற்றியும் அப்போதய  காங்கிரஸ் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை. 

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் என ஒருபுறம் இருப்பினும் நமது முறைப்படியான மங்கலத் தொடக்கம் எப்படி என்று வட மாநிலத் தலைவர்கள் பாரம்பரிய வழி முறையில் ஏதும் இல்லை.



காங்கிரஸ் கட்சியில் அன்று பிராமணிய ஆதிக்கம் அதிகம் என்று திராவிடக் கட்சிகள் தொடர்ந்து கூறியது போல அன்றிருந்த காங்கிரஸ் கட்சி பிராமணர்கள் கூட இதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படவில்லை.

தமிழ் மரபில் சைவப்பெரும் தலைமையிடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தின் தவத்திரு அம்பலவாண சுவாமிகள் சார்பில் பொன்னால் ஒரு செங்கோல் செய்யப்பட்டு உச்சியில் நந்தி தேவரின் சிலை வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பபட்டது.

சிறப்பு விமானத்தில் செங்கோலுடன் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தவில், நாகஸ்வர வித்வான்கள். தமிழ் ஓதுவார் ஆகியோரும் டெல்லிக்குச் அழைத்துச் சென்றனர்.

திருஞானசம்பந்தரின்  கோளறு பதிகம் ஓதுவாரால் பாடப்பெற்றது. கோளறு பதிகத்தின் இறுதி வரிகள் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே  என்று முடியும்.

ஒன்பது கோள்களைப் போற்றிப் பாடி சிவபெருமானை வணங்கிப் பாடும் சிறந்த பதிகங்கள் அவை.

தவில், நாகஸ்வர மங்கல இசை இசைக்க செங்கோல் இந்தியப் பிரதமர் நேருவிடம் திருமிகு குமாரசாமி தம்பிரானால் ஆகஸ்ட் 14 நள்ளிரவு 11.59 க்கு பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி வைஸ்ராய் மௌன்ட்பேட்டன் பிரபு முன்பு  அளிக்கப்பட்டது.

நாடு விடுதலையடைந்தது. தென்னாடுடைய சிவபெருமானை வணங்கி நாட்டின் சுதந்திரச் செங்கோல் புதிதாகப் பெறப்பட்டது. மன்னர் ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்தது



இந்த செங்கோலைத்தான் நாடாளுமன்றப் புதிய கட்டடத்தில் வைக்கிறார்கள்.புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்.

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர்  குடியரசுத் தலைவர் தான்.

அவரது பெயர் கூட அழைப்பில் இல்லை என்பது தான் ,


புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.