முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவிலிருந்த விநாயகர் சிலையை புதிய ஆட்சியர் இடம் மற்றியது ஏன் பாஜக வினா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வசிக்கும்




பங்களாவிலிருந்த விநாயகர் சிலையை புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அகற்ற உத்தரவிட்டதால், அகற்றும்போது சிலை உடைந்துவிட்டதாக ஹிந்து பக்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பாஜக வைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர் அதற்கு மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவின் நுழைவாயிலில் விநாயகர் சிலை ஒன்று நீண்ட காலமாக அமைந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு அண்மையில் மாற்றப்பட்டு தற்போது மெர்சி ரம்யா புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் இதுவரை கலெக்டர் பங்களாவில் குடியேறவில்லை. பங்களாவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் கலெக்டர் பங்களா வாயிலிலிருந்த பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டுமென்று அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும், நேற்று பிள்ளையார் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும், அகற்றும் போது சிலை உடைந்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவிய நிலையில், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். இதில் 



நடந்த உண்மை வருமாறு:- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வசிக்கும் இல்லத்திலிருந்து பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு பின் தோட்டத்தில் வெளியில் வைக்கப்பட்டது,    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பாக பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர்.

மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வேண்டும் என்றும், உள்ளே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 3 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதித்தனர்.

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை பார்க்க உள்ளே சென்ற புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விநாயகர் சிலை குறித்து விளக்கம் கேட்டனர்.


விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விளக்கம் அளித்தார். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர், விநாயகர் சிலை தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேசியதாகவும் மாநில தலைமையுடன் கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் கூறினார். மாவட்ட ஆட்சியருடைய இல்லத்தின் முகப்பில் அந்த விநாயகர் சிலை முன்பு இருந்தது. அதைப் புதிதாக வந்துள்ள ஆட்சியர் வெளியே எடுத்து தோட்டத்தில் வைத்துள்ளார்.


வெயிலில் இருந்தால் அந்தச் சிலை விரைவில் சிதிலமடையும். இதற்கு முன்னிருந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனது பதவிக் காலத்தின் போது அந்த விநாயகர் சிலை முன்பாகப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை ஏன் இந்த ஆட்சியர் இடமாற்றம் செய்யவேண்டும்,” என்று கேள்வி எழுப்பினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சிலை விவகாரத்தில் போலிச் செய்தியைப் பகிர்ந்த நபர்கள் குறித்து சைபர் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் இருக்கும் அந்த விநாயகர் சிலை பழமையான சிலையா இல்லையா. எப்போது எந்த  ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது  அது மண் சிலையா அல்லது கற்சிலையா. ஆனால் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் திட்டமிட்டு இந்தப் போலிச் செய்தியை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்துள்ளாரா.

அந்த செல்போன் எண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமானது கிடையாது. அதனால் அந்த நபர் குறித்து மாநில சைபர் பிரிவு காவல்துரையிடம் புகார் அளித்திருக்கிறேன்,” என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருக்கும் விநாயகர் சிலை 60 ஆண்டுகள் பழைமையானது என்றும், மன்னர் தொண்டைமான் காலத்தைச் சேர்ந்தது என்றும் சிலர் பரப்பும் தகவல் குறித்துக் கேட்டபோது அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

“அந்த விநாயகர் சிலை பழைய சிலை கிடையாது. அதைப் பரிசோதித்து உறுதி செய்யும்படி மாவட்ட அருங்காட்சியக இயக்குநரிடம் கேட்டிருக்கிறேன். மேலும் சிலை சேதமடைந்து இருக்கிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடுவார்,” என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.





கலெக்டர் பங்களா என்பது  அவரது பணியில் இருக்கும் காலம்வரை வசிக்கும் வீடு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொன்மையான  கட்டிடத்தில் எதையும் மாற்றவோ நீக்கவோ மாவட்ட ஆட்சியருக்கு சட்டப்பூர்வமான அதிகாரமில்லை. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட  விநாயகர் சிலை ஹிந்து அமைப்பினரின் சமூக வலைதளப் பதிவுக்குப் பின் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு நேற்று மதியம் 2 மணி நேரத்தில்  மீன்டும் தோட்டத்தில் வெளியே வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யா பொறுப்பேற்ற பின் ஆற்றிய முதல் காரியம் 

அறுபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் பங்களாவில் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும்  வினாயகர் சிலை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியது தான். 

பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறியதாகவும் ஒரு தகவல் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது  கலெக்டர், தனது அலுவலர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும் படி செய்தார். 

அவ்வாறு அலுவலர்கள் வினாயகர் சிலையை அகற்றும் போது சிலை சிதிலமடைந்ததாகவும் கூறப்பட்ட நிலையில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ ஆட்சியர்கள் பணிபுரிந்துள்ளனர். 

அதில் கிருஸ்துவர்கள், இஸ்லாமியரகள், சீக்கியர்கள், சமனர்கள்   என்று எவருமே பழமையான தொன்மையான கலெக்டர் பங்களாவில் உள்ள பாரம்பரியப் பொருள்கள் எதையும் நீக்கும் செயலைச் செய்யவில்லை. 

"புதுக்கோட்டை கலெக்டர் பங்களாவிலிருந்து விநாயகர் சிலையை அகற்றியது ஆட்சியர்  மெர்ஸி  ரம்யாவின் ஆழமான மதவெறியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது" என பாஜகவினர் கடிதம் மூலம் தெரிவித்தனர்

பிள்ளையார் சிலையை அகற்றியது ஆட்சியர் மெர்ஸி ரம்யாவின் ஆழமான மத உணர்வை காட்டுகிறது என்று கொந்தளித்த ஹிந்து அமைப்பினர், இதற்கு எதிராக தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். ஆனால், விநாயகர் சிலை உடைந்து விட்டதாகப் பரவிய தகவல் பொய்யானது  என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் விளக்கமளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் அதன் பொறுப்பாளர்களுக்கு வந்த தகவல் படி  "அனைவருக்கும் வணக்கம்,


நாளை( அதாவது 05.06.2023) மாலை 4 மணி அளவில்  மாவட்ட பா ஜ க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களுக்கான கூட்டம் மாவட்டத் தலைவர் அ. விஜயகுமார்  தலைமையில் நடைபெற இருக்கிறது... அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். க. குருஸ்ரீராம் மாவட்டப் பொதுச் செயலாளர்'', எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இனி பெரிதாகுமா ? இல்லை! இதோடு முடிந்ததா.' என்பது இனித் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்