முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்




உங்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த மகத்தான நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இது எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் மறக்க முடியாத தருணம். இது அடிக்கடி நிகழாது. நூற்றாண்டு பட்டமளிப்பு விழா என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் அரிதாகவே வரக்கூடும்.

நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவின் இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பார்ந்த மாணவர்களே, ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதை நீங்கள் மறந்துவிட்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே தடையாக இருப்பீர்கள். உங்கள் வெற்றிக்கு, உங்களது விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை காரணமாக இருந்தாலும், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்.




2022-ம் ஆண்டில் பத்ம விருதைப் பெற்ற துணைவேந்தர் பேராசிரியர் நஸ்மா அக்தர், ஜாமியா பல்கலைக்கழத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் பெண்களுக்கு என்றும் முன்னுதாரணமாக இருப்பார்.

நாட்டின் மூன்று சிறந்த பல்கலைக்கழகங்களில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. இது ஒரு தொடர்ச்சியான பணி. இந்தப் பல்கலைக்கழகம் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வளர்ச்சிப் பாதையில் செல்வதில், முன்னாள் மாணவர் சங்கங்கள் பெரும் பலமாக உள்ளன. சொல்லப்போனால், ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசத்தின் வளர்ச்சியில் பல்வேறு நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களை விட அதிக ஈடுபாடு கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. கல்வி முக்கியம். ஆனால் கல்வியை சமூக வளர்ச்சியுடன் இணைப்பது  அதைவிட முக்கியமானது.



தேசிய கல்விக் கொள்கை 2020 நமது இளைஞர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. கற்றலில் மகிழ்ச்சியைத் தருகிறது, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து கல்வியை உருவாக்குகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் சில பகுதிகளில் இக்கொள்கையைப் பின்பற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

நண்பர்களே, மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் மாற வேண்டியது அவசியம். எனவே இந்த அமிர்த காலத்தில், திறமை மிகுந்த நமது  மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வழங்குபவர்களாக வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரை பின்பற்ற வலியுறுத்துகிறேன்.

பட்டம் பெற்ற என் இளம் நண்பர்களே, நீங்கள் உங்கள் விருப்பமான தொழில்களில் அடியெடுத்து வைக்க வேண்டும். நமது தேசம் மற்றும் சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. நாட்டின்  வளர்ச்சி தடுக்க முடியாதது. மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழும் பாரதத்தின் வளர்ச்சிப் பாதை, இளைஞர்களின் பங்களிப்புகளால் எப்போதும் எழுச்சிப் பாதையில் இருக்கும்.

நண்பர்களே, பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. நண்பர்களே, உள்கட்டமைப்புத் துறையாக இருந்தாலும், தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும், செயலாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது.

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் என்பது உரையாடல் மட்டுமே. இடையூறுகள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுதான் நமது ஜனநாயகம் செழிக்க ஒரே வழி.

நண்பர்களே, பட்டம் பெறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்,  வரும் ஆண்டுகளில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் தொடர்ந்து அதிக உயரங்களை அடையட்டும்.

ஜெய் ஹிந்த்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.