முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி மாணவன் புதுகையில் பரபரப்பு

செய்தியாளர் ஆர்.சரத்பவார் :               மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி  மாணவன் சிகையைத் திருத்த சொன்ன தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை..


நல்ல ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் தவம் செய்ய வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்களும் தவம் செய்ய வேண்டும், அது கடந்த காலத்தில் ஆசான் சீடர் உறவு மேன்மையானது, உ.வே.சாமிநாத ஐயருக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை போல கிட்டினால்  தான் நிறைவான திறன் படைத்த மாணவர்கள் வரமுடியும் ஆனால் இப்போது 70 ,,சதவீதம் நல்ல ஆசிரியரும் இல்லை  நல்ல மாணவர்களும் இல்லை   

புதுக்கோட்டை நகரில் மசுவாடி பகுதி அரசினர் மாதிரிப் பள்ளியில் படித்த இரண்டு முடியை வளர்த்து புள்ளிங்கோ எனும் குருவி மண்டை போல செய்தவர்கள் மொத்தம்   மாணவர்கள் 800 க்கும் மேல் படிக்கும் பள்ளியில் நேற்றுக்  காலை தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அகியோர் மாணவர்களை தலை முடியை வெட்டிச் சீர்திருத்தம் செய்து ஒழுங்காகப் பள்ளிக்கு வர வேண்டும் எனப்  பலமுறை அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் பள்ளியில்  படிக்கும் மாணவர்களை கோபமாகப் பேசியும் திருத்துவதற்கு முயற்சித்து வந்த தலைமை ஆசிரியர்- மற்றும் துணை ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் அந்த குருவி மண்டை மாணவரை நேற்று காலை முடி வெட்டாமல் பள்ளிக்கு வர வேண்டாமெனக் கூறி  அறிவுரை வழங்கி சில  வார்த்தைகளைக்  கூறியும்  திட்டியதால்  திருந்தாத அந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் அவர்  12.ஆம் வகுப்பில் படிக்கும் மாதேஸ்வரன் என்ற மாணவர்  அதே பள்ளியின்  பின்புறம் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ள நிலையில் பொதுமக்களின்  தகவல் புகாரின் பேரில் காவல்துறை வந்த நிலையில் போராட்டமும் நடந்தது பின் இறந்தவரின் புருக்கோட்டை உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மர்மமான முறையை இறந்தவரின் உடலை பரிசோதனையில் கண்டறிய உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் தரக்கோரித் தான் இந்த  சாலை மறியலில் அப்பகுதி மாணவர் உறவினர்கள்  ஈடுபட்டனர்


இதற்காக காவல்நிலைத்தில் விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையிலும் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது இதற்காக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தலைமறைவான நிலையில் உடனடியாகக் கைது செய்யவும்  கோரி அந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...  நாற்பது  ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் சர்வநாசமாகி தனியார் பள்ளிகள் செழித்துக் கொழிக்கின்றன என்பதற்கான சான்றே இது தான்.

ஆசிரியர்கள் கண்டிக்காமல் அல்லது  திட்டாமல் எப்படி பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க இயலும்? இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புக் கோரி  பெருந்திரள் முறையீடு செய்ய ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது 


மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்களைக் குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவதைக் கைவிட வேண்டும் எனவும்,

  ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கிட வேண்டும் எனவும் 

   பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் உருவாக்க வேண்டும் எனவும் 

 வலியுறுத்தி இன்று  புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது

          என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 அநீதிகளுக்கு எதிராய் அணி திரள்வோம் எனவும் 

ஆசிரியர் பேரினத்தை பாதுகாப்போம் எனவும் 

 உணர்வுகளாய் ஒன்று கூடுவோம் வாரீர் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...