முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் குவாரிகளில் கொள்ளையடித்த ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் க்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மணல் குவாரிகளில்  கொள்ளையடித்த  ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் எனும் இராமச்சந்திரனுக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது  நாளாகச் சோதனை !


புதுக்கோட்டையில் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் நேற்று முன்தினம் முதல்  இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.



தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கணிம வளக் கொள்ளை நடந்ததில் கடந்த காலங்களில் மதுரை மாவட்டம்   மேலூர்  பகுதியில் பிஆர்பி என்ற பிராதுக்காரன்பட்டி ஆர். பழனிச்சாமியால் நடந்த கொள்ளை அந்த மலை முழுங்கி மஹாதேவன் செய்த செயல் அரசு அதிகாரி சகாயத்ததால் ஒரு முடிவுக்கு வந்தது, அவருக்கு ஜாமீன் வழங்கிய இலஞ்சப் பெருச்சாளி  நீதித்துறை நடுவராக இருந்த மகேந்திர பூபதியையும் உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்தது, அது இன்றும் பலரால் பாராட்டப் படுகிறது அதுபோல் தமிழகதில் ஆட்சி செய்யும் யாருக்கும் கப்பம் கட்டிவிட்டு தொடர்ந்து மணல் கொள்ளை அடித்த மாஃபியா எஸ். ஆர் உள்ளிட்ட பலர் தாங்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கால் இவர்கள் தங்களை பெரிய மனிதர்களாகக் காட்டி பல திகிடுதத்தங்களை நிகழ்த்தியவர்கள் அவர்களது குவாரிகளில் அமலாக்கத்துறையினர் தற்போது  சோதனையை நடத்தி வருகின்றனர்  இவர்கள் தான் நன்றாக நேர்மையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை இலஞ்ச ஊழல் நிறைந்த மாவட்டமாக மாற்றியவர்கள் ஆவர்,  இதில் சாமானிய மக்கள் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் கொடுத்து மாளவில்லை அந்த அளவு ஊழல் பெருக இவர்களும் காரணம்,  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், அவரது நண்பர்கள், பினாமிகள், உறவினர்களின்   வீடுகளில் நேற்று முன்தினம் (செப்டம்பர்.12 ஆம் தேதி ) அதிகாலையில் தொடங்கிய அமலாக்கத்துறையின்  சோதனை ஒரு நாள் கடந்தும் விடிய விடிய நடைபெற்று வருகிறது,




தொடர்ந்து நடைபெற்று வருவதால் எங்கே கைதுசெய்யப்பட்டுவிடுவோம் எனப்பயந்து தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் 

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து பலகோடிகளை மணல்  மூலம் சுருட்டியவர்  இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.மேலும் அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அவரது சம்பந்தி பழனி மாணிக்கம் முன்னால் மத்திய அமைச்சர் என்ற தைரியத்தில் பல மோசடி மணல் கொள்ளை நிகழ்த்தி பல கோடிகளை சுருட்டி வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்க வாய்ப்புள்ளதால்  தான் இந்த சோதனை எனக் கூறப்படுகிறது, சரி மணல் குவாரிகள் தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளையும்  மேற்கொண்டு வருகிறார்.



இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அவர் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளையும் பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து வருகிறார். 2016 மற்றும்  2017  ஆகிய ஆண்டுகளில் சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து, கடந்து 2016 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக தற்போது புதுக்கோட்டையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம்  காலை முதல் புதுக்கோட்டையிலுள்ள நிஜாம் காலனி, சமுத்திரா அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொணடனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்து இடங்களில் தற்போது சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி சாலையிலுள்ள முத்துப்பட்டினம் கிராமத்திலுள்ள அவரது வீடு, கந்தர்வகோட்டை அருகிலுள்ள கல்குவாரியிலும், இராமச்சந்திரன் உறவினரான சண்முகம் எனபவரது கிராவல் மண் குவாரியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


 2018ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறதா அல்லது வேறு ஏதேனும் புது வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறதா என்று சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.ராமச்சந்திரனுடைய நண்பரும், புதிய தொழிலதிபருமான மணிவண்ணன் வீட்டிலும்  அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மணல் ஒப்பந்தக்காரருமான கரிகாலன் வீடுகளில் தற்பொழுது மூன்று வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.எஸ்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின்  சோதனை உள்ளதால் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல  கந்தர்வகோட்டை அருகிலுள்ள அரியானிப்பட்டியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செம்மண் குவாரிகளிளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...