முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் குவாரிகளில் கொள்ளையடித்த ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் க்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மணல் குவாரிகளில்  கொள்ளையடித்த  ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் எனும் இராமச்சந்திரனுக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது  நாளாகச் சோதனை !


புதுக்கோட்டையில் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் நேற்று முன்தினம் முதல்  இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.



தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கணிம வளக் கொள்ளை நடந்ததில் கடந்த காலங்களில் மதுரை மாவட்டம்   மேலூர்  பகுதியில் பிஆர்பி என்ற பிராதுக்காரன்பட்டி ஆர். பழனிச்சாமியால் நடந்த கொள்ளை அந்த மலை முழுங்கி மஹாதேவன் செய்த செயல் அரசு அதிகாரி சகாயத்ததால் ஒரு முடிவுக்கு வந்தது, அவருக்கு ஜாமீன் வழங்கிய இலஞ்சப் பெருச்சாளி  நீதித்துறை நடுவராக இருந்த மகேந்திர பூபதியையும் உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்தது, அது இன்றும் பலரால் பாராட்டப் படுகிறது அதுபோல் தமிழகதில் ஆட்சி செய்யும் யாருக்கும் கப்பம் கட்டிவிட்டு தொடர்ந்து மணல் கொள்ளை அடித்த மாஃபியா எஸ். ஆர் உள்ளிட்ட பலர் தாங்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கால் இவர்கள் தங்களை பெரிய மனிதர்களாகக் காட்டி பல திகிடுதத்தங்களை நிகழ்த்தியவர்கள் அவர்களது குவாரிகளில் அமலாக்கத்துறையினர் தற்போது  சோதனையை நடத்தி வருகின்றனர்  இவர்கள் தான் நன்றாக நேர்மையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை இலஞ்ச ஊழல் நிறைந்த மாவட்டமாக மாற்றியவர்கள் ஆவர்,  இதில் சாமானிய மக்கள் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் கொடுத்து மாளவில்லை அந்த அளவு ஊழல் பெருக இவர்களும் காரணம்,  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், அவரது நண்பர்கள், பினாமிகள், உறவினர்களின்   வீடுகளில் நேற்று முன்தினம் (செப்டம்பர்.12 ஆம் தேதி ) அதிகாலையில் தொடங்கிய அமலாக்கத்துறையின்  சோதனை ஒரு நாள் கடந்தும் விடிய விடிய நடைபெற்று வருகிறது,




தொடர்ந்து நடைபெற்று வருவதால் எங்கே கைதுசெய்யப்பட்டுவிடுவோம் எனப்பயந்து தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் 

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து பலகோடிகளை மணல்  மூலம் சுருட்டியவர்  இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.மேலும் அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அவரது சம்பந்தி பழனி மாணிக்கம் முன்னால் மத்திய அமைச்சர் என்ற தைரியத்தில் பல மோசடி மணல் கொள்ளை நிகழ்த்தி பல கோடிகளை சுருட்டி வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்க வாய்ப்புள்ளதால்  தான் இந்த சோதனை எனக் கூறப்படுகிறது, சரி மணல் குவாரிகள் தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளையும்  மேற்கொண்டு வருகிறார்.



இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அவர் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளையும் பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து வருகிறார். 2016 மற்றும்  2017  ஆகிய ஆண்டுகளில் சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து, கடந்து 2016 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக தற்போது புதுக்கோட்டையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம்  காலை முதல் புதுக்கோட்டையிலுள்ள நிஜாம் காலனி, சமுத்திரா அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொணடனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்து இடங்களில் தற்போது சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி சாலையிலுள்ள முத்துப்பட்டினம் கிராமத்திலுள்ள அவரது வீடு, கந்தர்வகோட்டை அருகிலுள்ள கல்குவாரியிலும், இராமச்சந்திரன் உறவினரான சண்முகம் எனபவரது கிராவல் மண் குவாரியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


 2018ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறதா அல்லது வேறு ஏதேனும் புது வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறதா என்று சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.ராமச்சந்திரனுடைய நண்பரும், புதிய தொழிலதிபருமான மணிவண்ணன் வீட்டிலும்  அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மணல் ஒப்பந்தக்காரருமான கரிகாலன் வீடுகளில் தற்பொழுது மூன்று வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.எஸ்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின்  சோதனை உள்ளதால் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல  கந்தர்வகோட்டை அருகிலுள்ள அரியானிப்பட்டியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செம்மண் குவாரிகளிளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்