செய்தியாளர் :- R.சரத்பவார். நாய்கள் வந்தருளும் செங்காநத்தம் மலையின் காலபைரவர்
வேலூர் மாவட்டம் இரங்காபுரம் அருகிலுள்ள செங்காநத்தம் மலையில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்த காலபைரவர் கோயிலுள்ளது.
500 ஆண்டுகள் கடந்த பழமையான கோவில்.
அக் காலத்தில் நிலத்தை தேண்டிச் செம்மைப். படுத்திய நிகழ்வின் போது சுயம்புவாக வாய்த்த சிலையாகும். அப்போதய நாயக்க மன்னர் விஜயநகரப் பேரரசின் சந்திரகிரி மண்டலத்தின் ஒரு பகுதி இது அதன் பின்பு வட ஆற்காடு மாவட்டம் பிண்னர் வேலூா். அதன் வடகிழக்கில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை நோக்கிய வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை நிறுவினர் விஜய நகர நாயக்க மன்னர்களான ஆட்சியாளா்கள்.
காலபைரவரை செங்காநத்தத்தைச் சோ்ந்த வழிவழி தர்மகர்த்தாக்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து பராமரித்து பாதுகாத்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாவார்.
காலபைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலும், மழையும் உள்ளதை அறிவோம் அதில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் உள்ள படி கம்பீரத்துடன் காட்சிதருகிறார்.பைரவா் சிலைக்குப் பின்னால் ஏறழிஞ்சில் மரம் ஒன்று தானாகவே உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளது.
மரத்தினடியில் பத்துக் கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றார். அவரது வாகனம் நாய்களுடன் பக்தா்களுக்கு அருட் காட்சி தருகிறார்.
இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது. பைரவரை தரிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.
சனிக்கிழமையன்று காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா்தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும். இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 இராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.
கருத்துகள்