"தமிழ் வரலாற்று ஆய்வாளரான. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணியன் மறைந்த செய்தியால் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்த இரங்கல் கருத்தில் வேதனையடைந்தேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
கடல் சார் ஆய்வாளர் ,கடல் நீரின் போக்கு , கடற்காற்று பற்றிய அறிஞர் .
உலகு எங்கும் தமிழ் ஊர்ப் பெயர்கள் இருப்பதை கண்டறிந்தவர். குமரி கண்டம், லெமூரிய கண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் தொடர்பான ஆய்வுகளில் ஒரிசா பாலு ஈடுபட்டு வந்தார். இவரது இயற்பெயர் சிவஞானம் பாலசுப்பிரமணி.
ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்காலத் தமிழ் மக்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவராவார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழுக்காக உழைத்தவர் சிறு வாடகை வீட்டில் வாசலில் துயில் கொள்கிறார். சாலை கூடப் போடாத அரசு. மக்களே கற்களை நிரப்பி மழைக்கு சாலையாக வைத்திருக்கிறார்கள். அவர் கடந்து வந்த பாதை மட்டுமல்ல கடைசியாகச் செல்லும் பாதையும் அப்படித்தான் இருக்கிறது.
ஒரு சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் கூடத் தமிழுக்காக உண்மையாக உழைத்தவரின் கடைசி ஊர்வலத்திற்கு கூடாமல் இருப்பது சாபக்கேடு.
புதைக்கத் தமிழர் பூமியில் இடமில்லை என்று மின்தகனம் நோக்கிச் செல்கிறார்
முதல் காட்சிக்கு விழுந்து அடித்து ஓடும் கூட்டமே தமிழுக்காக உழைப்பவர்களை நீங்கள் முதல் காட்சியாகப் பார்க்க முடியாது ஆனால் கடைசி காட்சியாவது பார்க்கலாம். ஒரிசா பாலு ஒரு கால வாழ்வியல்
கருத்துகள்