முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறை உயர் அலுவலருக்கு அரசு மருத்துவ அலுவலர் லஞ்சம் கொடுத்து வாங்கிய வழக்கில் இனி என்ன நடக்கும்

சட்டம் விதிகள், அரசானைகள் எல்லாம்  சொல்வது யாதெனில் ,

இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் கொடுத்தவன் குற்றவாளி,

இலஞ்சம் வாங்குவதும் குற்றம் வாங்கியவன் குற்றவாளி 

இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுபவர் மத்திய அரசின்  பணியாளர் உயர் அலுவலர், அவர்

இலஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுபடும் நபர் மாநில அரசின் ஊழியர் அரசு மருத்துவ அலுவலர். 

இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் மத்திய அரசு பணியாளரைக் கைது செய்த  தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை,  



ஏற்கனவே 31 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுத்ததாகக் கூறும் தமிழ்நாடு  அரசு மருத்துவ அலுவலரைக் கைது செய்யாமல் தான் பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டு எழாமலில்லை 

செலவு கணக்கில் காட்டாமல் 31 லட்சம் ரூபாய்  இலஞ்சம் கொடுக்க மட்டும் அரசு மருத்துவ அலுவலருக்கு பணம் எங்கிருந்து வந்தது? என்ற வினா எழாமல் இல்லை,

நேற்றுக் கொடுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் மட்டுமே இலஞ்ச ஒழிப்புத்துறையால் மருத்துவர் கொண்டுவந்து அவரால் கொடுக்கப்பட்ட பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களாகும்

அரசு மருத்துவ அலுவலர் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அவர் ஏன் 51 இலட்சம் ரூபாய்  லஞ்சம் கொடுக்க முன்வர வேண்டும்?  என்ற வினாவும் பொது வெளியில் சட்டம் நீதி அறிந்தவர்கள் மத்தியில் பேசப்படுகிறது 



இலஞ்சம் கொடுத்த மாநில அரசு மருத்துவ அலுவலரை தமிழ் நாட்டின்  முக்கிய ஊடகங்கள் ஏன் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வரவில்லை? என்ற வினா மட்டுமே ஊழலாகத் தொக்கி நிற்கிறது என்பது மட்டும் உண்மை, ஏற்கனவே இந்த அரசு மருத்துவ அலுவலர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தார் என்பது தான் இவர் மீது உள்ள பழைய வழக்கு. அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளதென்றும் பார்க்க வேண்டியதே நடுநிலை நாளேடுகளின் கடமை, அது அவர்களுக்குத்  தெரியவில்லை. அல்லது அறிய முற்பட வில்லை, இந்த வழக்குத் தொடர்பாகத்தான் தற்போது இலஞ்சம் கொடுக்கப்பட்டதும் வாங்கப்பட்டதும். அப்போது பதிவான முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியான நிலையில் மத்திய அரசு அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் சம்பந்தமாக தமிழ் நாட்டில் சாஸ்திரி பவனில் செயல்படும் CBl மட்டுமே விசாரணை நடவடிக்கைகளை எடுக்க முடியும். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இதில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. என்பது சட்டம் அறிந்தவர் கருத்து, அமலாக்கத் துறை அலுவலகத்தை CBl தான் சோதனையிட முடியும்.இது மத்திய அரசின் மீதுள்ள மோதலாகவே தெரிகிறது.


நிலைமை சரியில்லை. அரசியல் அமைப்புச் சட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவே பலரும் கருதும் நிலை . அடுத்து எதுவும் நடக்கலாம். மாநில அரசு ஊழியர்கள், அமைச்சர்களை மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய தமிழ் நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை, இங்கே ஒருவர் கூட லஞ்சம் வாங்காததால், அதிகார எல்லை தாண்டி மத்திய அரசு ஊழியர்களை கண்காணிக்கத் துவங்கி விட்டது. கடந்து போன கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில முதலமைச்சர், மாநில தலைமைச்  செயலாளர் மற்றும் இலஞ்ச ஒழிப்பு துறையின்  இயக்குனருக்கு ஒரு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் முக்கியமாக கடந்த  இரண்டாண்டுகளில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த FIR பெரியதாகச் சரிவைச் சந்தித்துள்ளது. 2021 ஆம் அண்டு வரை 350 FIR கள் பதிவு செய்த. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்  துறையினர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் FIR பதிவு 250 ஆகக் குறைந்ததில் இரண்டு வகை வழக்குகளுள்ளன. அதில் இலஞ்சம் வாங்கும் போது பொறி வைத்துப் பிடிக்கும் TRAP வழக்குகள் அதே அளவில் தான் உள்ளது (2023 ஆம் ஆண்டில் அது சற்று அதிகரித்துள்ளது ). ஆனால் ரெகுலர் வழக்கு எனப்படும் பெரிய ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது பாதிக்கு பாதியாகக் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வரை  250 வழக்குகள் ஒரு ஆண்டுக்குப் பதிவு செய்யப்பட்டது . 2022 ஆம் ஆண்டில் 130 வழக்குகளும்  2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 102 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகள் இலஞ்ச ஒழிப்பு துறையில் பலர் கொடுத்த புகார்களில் சில  FIR. மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது . மற்றவை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகளாக நிலுவையில் இழுத்தடிக்கப்படுகிறது. 


இதற்கு ஒரு முக்கிய காரணம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை தன்னிச்சையாகச் செயல்பட முடியாதது. முக்கியமாக விசாரணை மேற்கொள்ள அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதால் அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல் , ஸ்மார்ட் சிட்டி ஊழல், ஏன் பல ஆவண மோசடி குறித்த லோக் ஆயுக்தா வழக்குகள்  போன்ற பல ஊழல்களில் விசாரணைக்கு அரசு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக அதற்கான அதிகாரம் கொண்ட அதிகாரி நியமனமின்றி இழுத்தடித்து வருகிறது. கார்த்திகேயன் IAS, கோபால் IAS போன்றவர்களுக்கு அவர்கள் செய்த ஊழல்களை அவர்களே காப்பாற்றும் இடத்தில் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஸ்மார்ட் சிட்டி, ரேஷன் போன்ற ஊழல்களில் FIR பதிவு செய்வது தாமதமாகிறது.  மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கிய ஊழல் வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மூன்று  மாதங்களாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பு 




திமுகவின்  2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையை தன்னிச்சையாகச் செயல்பட விடுவோம் என்றும் லோக் ஆயுக்தாவைச் சீரமைப்போம் என்றும், சேவை உரிமைச் சட்டம் கொண்டு வருவோமென வாக்குறுதி அளித்தார்கள். ஒரு தன்னிச்சையான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையை அமைப்பது தான் லோக் ஆயுக்தா. எனவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நிதியில் தன்னிச்சை தன்மை, நியமனத்தில் தன்னிச்சைத் தன்மை , செயல்பாடுகளில்  தன்னிச்சை தன்மை என மூன்று வகையான  தன்மை வழங்கவும் உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கவும் அவர்கள் சார்பில் அந்த அமைப்பினர் மனு அளித்துள்ளனர். ஒரு முக்கியப் பிரமுகராக அதிமுகவிலிருந்து கட்சி மாற மாட்டேன்னு சொன்ன மாவட்டக் கவுன்சிலர் கடையில் 60 கிலோ குட்காவுடன்  கைது செய்து திமுகவுக்கு மாறயது நாடறியும், அரசு நிர்வாகத்தில் அமலாக்கத்துறை அலுவலரின் கார் டிக்கியில் 20 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் தற்போது கைப்பற்றப்பட்டது இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பில்லை வேறுவேறு தான் ஆணால் கடும் அரசியல் நடக்கிறது என்பது மட்டுமே தெரிகிறது.ED அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடத்திய சோதனை குறித்து .பத்திரிகையாளர் வராகி அதிரடியாக ஒரு தகவல் பகிர்ந்ததில் புகார் கொடுத்தவனும். லஞ்சம் வாங்கியவனும் தண்டிக்கபடவேண்டிய குற்றவாளிகள் எனினும் இதில் திட்டமிட்டு ஒரு சதிவலையுள்ளது எனற குற்றச்சாட்டும் கவனத்தில்  கொள்ளப்படவேண்டியதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...