காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ 20,500 அபராதத்தையும் உறுதி செய்த நீதிமன்றம்.
பெண் ஐபிஎஸ் ஸுக்கு 2021-ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்
முன்னாள் சிறப்பு காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூபாய் 20,500 அபராதத்தையும் உறுதி செய்தது விழுப்புரம் நீதிமன்றம்.
ராஜேஷ்தாஸின் மேல் முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி பூர்ணிமா, தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய நிலையில்,
முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணனின் மனுவும் தள்ளுபடியாகி. ரூபாய்.500 அபராதம் விதித்து அளித்த தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டது.
மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தது நீதிமன்றம்,. வீட்டுக்கு வெளியில தொங்குன முருங்கைக்காயை தினக்கூலி யாரோ ஒருவண் கையால் பறிச்சிருக்காங்க. தகவல் காதுக்குப் போனதுமே டுமீல்ன்னு ஒரு ஃபயரு. ஆள் சாகவில்லை. விஷயம் தான் இப்போது அப்டியே செத்துப்போச்சு. அதிகார பவரு. ஆள் அம்பு திமிரு.
முல்லைப் பெரியார் இஷ்யூ. சுப்பீரியர் ஐபிஎஸ் ஜார்ஜ் பின்னாலயும் ஜூனியர் ஐபிஎஸ் ராஜேஷ்தாஸ் முன்னாலயும்னு பார்டர்ல நின்னு லத்தியைச் சுழட்னதுல எலும்புகள் உடைஞ்ச மக்களின் லிஸ்ட் ரொம்பவே பெருசு. டூட்டின்னா அப்டியொரு சின்சியர் டூட்டி. தெறிச்சு ஓடுன ஜனங்க முதுகு பிளந்து மண்டை நொறுங்கி சாய்ஞ்சதை இப்போது நினைச்சாலும் வயிறு எரியுது.
சக ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை - துன்புறுத்தல் செய்த வழக்கில் மூணு வருஷ தண்டனை தற்போது உறுதி செய்து ராஜேஷ்தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செஞ்சிருக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்,
மேலதிகாரி சொன்னாரு அய்யா சொன்னாருன்னு கடிவாளம் இல்லாம பின்னால ஓடுற அத்தனை காவல்துறை காக்கிகள் அத்தனை பேருக்கும் மாஜி காவல்துறை கண்காணிப்பாளர். கண்ணனுக்கும் சேர்த்துக் கிடைத்த இந்தத் தீர்ப்பு ஒரு சரியான எச்சரிக்கை.
இந்தியக் குடிமைப்பணிகளில பாஸ் பண்ணவங்க, டிஎன்பிஎஸ்சில ஜெயிச்சவங்க மேல எப்பமே எனக்கு மரியாதை உண்டு. புக்கைத் தொறந்து நாலு பக்கம் படிச்சால குறட்ட விடுறவங்க மத்தியில் தினமும் எட்டுமணி நேரத்துக்கு மேல் படிச்சு ஒவ்வொரு அட்டெம்ப்டா போயி வந்து போயி வந்துன்னு கடைசியா உப்புக் கோட்டை தொடற அந்த நொடிப் பொழுது சந்தோஷத்தை ஸ்கேல் வெச்சு அளந்தா எவரெஸ்ட்டு சிகரமும் சின்னதாவே தெரியும். அப்படிப்பட்ட பதவியை எட்டிப்புடிச்சு அதுல சர்வீசும் சீனியர் லெவல்ல முடிச்ச பின்னால பாலியல் வன்புறுத்தல் வழக்கில் சிக்கிக் கொள்வதும் அதற்கு வாதாட வக்கீலுங்களே வர மாட்டோம்னு சொல்றளவுக்கு நிலைமை இருக்கறதும் முன்வினை தொடர்ச்சிக்
குற்றங்களின்றி வேறென்ன? வாக இருக்க முடியும் இதுவும் கர்மாதான்.
கருத்துகள்