முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ 20,500 அபராதத்தையும் உறுதி செய்த நீதிமன்றம்.

பெண் ஐபிஎஸ் ஸுக்கு 2021-ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்

முன்னாள் சிறப்பு காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூபாய் 20,500 அபராதத்தையும் உறுதி செய்தது விழுப்புரம் நீதிமன்றம்.

ராஜேஷ்தாஸின் மேல் முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி பூர்ணிமா, தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய நிலையில்,

முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணனின் மனுவும் தள்ளுபடியாகி. ரூபாய்.500 அபராதம் விதித்து அளித்த தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டது.

மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தது நீதிமன்றம்,.   வீட்டுக்கு வெளியில தொங்குன முருங்கைக்காயை தினக்கூலி யாரோ ஒருவண் கையால்  பறிச்சிருக்காங்க. தகவல் காதுக்குப் போனதுமே டுமீல்ன்னு ஒரு ஃபயரு.  ஆள் சாகவில்லை.  விஷயம் தான் இப்போது அப்டியே செத்துப்போச்சு. அதிகார பவரு. ஆள் அம்பு திமிரு.


முல்லைப் பெரியார் இஷ்யூ. சுப்பீரியர் ஐபிஎஸ் ஜார்ஜ் பின்னாலயும் ஜூனியர் ஐபிஎஸ் ராஜேஷ்தாஸ் முன்னாலயும்னு பார்டர்ல நின்னு லத்தியைச் சுழட்னதுல எலும்புகள் உடைஞ்ச மக்களின் லிஸ்ட் ரொம்பவே பெருசு.  டூட்டின்னா அப்டியொரு  சின்சியர் டூட்டி.  தெறிச்சு ஓடுன ஜனங்க முதுகு பிளந்து மண்டை  நொறுங்கி சாய்ஞ்சதை இப்போது நினைச்சாலும் வயிறு எரியுது.

சக ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை - துன்புறுத்தல் செய்த வழக்கில் மூணு வருஷ தண்டனை தற்போது  உறுதி செய்து ராஜேஷ்தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செஞ்சிருக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்,

மேலதிகாரி சொன்னாரு அய்யா சொன்னாருன்னு கடிவாளம் இல்லாம பின்னால ஓடுற அத்தனை காவல்துறை காக்கிகள் அத்தனை பேருக்கும் மாஜி காவல்துறை கண்காணிப்பாளர். கண்ணனுக்கும் சேர்த்துக் கிடைத்த இந்தத் தீர்ப்பு ஒரு சரியான எச்சரிக்கை. 

இந்தியக் குடிமைப்பணிகளில பாஸ் பண்ணவங்க, டிஎன்பிஎஸ்சில ஜெயிச்சவங்க மேல எப்பமே எனக்கு  மரியாதை உண்டு. புக்கைத் தொறந்து நாலு பக்கம் படிச்சால குறட்ட விடுறவங்க மத்தியில் தினமும் எட்டுமணி நேரத்துக்கு மேல் படிச்சு ஒவ்வொரு அட்டெம்ப்டா போயி வந்து போயி வந்துன்னு கடைசியா உப்புக் கோட்டை தொடற அந்த நொடிப் பொழுது சந்தோஷத்தை ஸ்கேல் வெச்சு அளந்தா எவரெஸ்ட்டு சிகரமும் சின்னதாவே தெரியும். அப்படிப்பட்ட பதவியை எட்டிப்புடிச்சு அதுல சர்வீசும் சீனியர் லெவல்ல முடிச்ச பின்னால பாலியல் வன்புறுத்தல் வழக்கில் சிக்கிக் கொள்வதும் அதற்கு வாதாட வக்கீலுங்களே வர மாட்டோம்னு சொல்றளவுக்கு நிலைமை இருக்கறதும் முன்வினை தொடர்ச்சிக்

 குற்றங்களின்றி வேறென்ன? வாக இருக்க முடியும் இதுவும் கர்மாதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...