முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் உள் கட்சி பிரச்சினை காரணமாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா

பொது அழுத்தம், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆகிய காரணிகளால் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ய



கட்டாயப்படுத்தியதாக  நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  2 ஆண்டுகளாக பாஜக முதல்வர் பைரன் சிங், மணிப்பூரில் பிரிவினையை தூண்டியதாக கூறிய ராகுல் காந்தி, வன்முறை, உயிரிழப்பு ஏற்பட்ட போதும், அவரை முதல்வராக தொடர பிரதமர் அனுமதித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூருக்குச் சென்று, மக்களின் பேச்சைக் கேட்டு, இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வருவதற்கான திட்டத்தை விளக்க வேண்டும் என தெரிவித்தார். 


நோங்தோம்பம் பிரேன் சிங் என்ற என். பிரேன் சிங்  மணிப்பூரின் முதலமைச்சர். பாரதிய ஜனதா கட்சியின் பிராந்திய தலைவர் ஒரு தேசிய அளவிலான கால்பந்து வீரர் மணிப்பூரின் 12வது முதலமைச்சர்


2022 ஆம் ஆண்டில், மணிப்பூர் சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 32 இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமாக பாஜக சட்டமன்றக் கட்சி என் பிரேன் சிங்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரை மீண்டும் மணிப்பூரின் முதலமைச்சராக்கியது. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரைச் சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார் பிரேன் சிங். பாஜக தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் அபாயம் உள்ள நிலையில் பிரேன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார். காலை டெல்லிக்குச் சென்ற பிரேன் சிங் பாரதிய ஜனதா கட்சியின்  தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். தொடர்ந்து, மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை, இம்பாலில் உள்ள ராஜ்பவனில் சில சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.


மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. 2022 ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 உறுப்பினர்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, 6 உறுப்பினர்களைக் கொண்ட ஜேடியூ, 5 உறுப்பினர்களைக் கொண்ட என்பிஎப் கட்சிகள் ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்டது. கலவர வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.  பலரும் மாயமாகினர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகளால் 2 உறுப்பினர்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 7 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் இரு கட்சிகளும் ஆதரவைத் திரும்பப் பெற்றபோதும் பாஜகவிற்கு நெருக்கடி எதுவும் இல்லை. மணிப்பூர் கலவரம் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தாலும் அவர் விலகவில்லை. இந்த நிலையில், தற்போது திடீரென தனது பதவியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கு ஒரு முக்கியமான காரணமாகவே சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையேயான கலவரத்தை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தூண்டியதாக குக்கி இனத்தவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பிரேன் சிங் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டவழக்கில் முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.

மணிப்பூரில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. பிரேன் சிங்கிற்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில சட்ட மன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வந்த  சூழலில் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுவரை மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்ததை ஒரு பெருமையாகக் கருதுகிறேன்" என முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்மையில் முதல்வர் பிரேன் சிங் அறிவித்தார். "கடந்த 2023 மே முதல் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நான் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...