முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக,பாஜக கூட்டணிக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்!

அதிமுக,பாஜக கூட்டணிக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்! 

அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை முன்னிறுத்த பாஜக முடிவு செய்து ள்ளதாகவே தகவல் வருகிறது. 

தமிழ்நாட்டு மூத்த அரசியல் தலைவரான கே.ஏ.செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும். 


அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓ.பன்னீர் செல்வம் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம் வகுத்தள்ள நிலையில். 

இந்த பிரம்மாண்டமான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு  அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ஆம் ஆண்டில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக பாஜகவின் அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார்.

இறுதிக் காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன!         அ.தி.மு.க. ஒன்றிணையும் பட்சத்தில் அ.ம.மு.க.வை கலைத்து விடுவீர்களா..? என செய்தியாளர்கள் வினவிய போது தி.மு.க.வை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்கத் தயாரென டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி  அளித்தார்   அதிமுக முட்டல் மோதல் நிலையில் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கம் செய்ய எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதுகெலும்பெல்லாம் நிமிர்ந்ததில்லை! என பலரும் பேசும் நிலையில் அதிமுகவில் 



அக்கட்சியின் சார்பில் பலரும் பேசும் நிலை வந்தது. மாஃபா.பாண்டியராஜனிடம் அட்டகாசம் செய்த. கே.டி.ராஜேந்திர பாலாஜியையே கட்சியில் கைவைக்க முடியவில்லை! நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டியவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்றவர் அடுத்தடுத்த சர்ச்சை நிகழ்வுகளுக்குப் பின்னர், ரெங்கநாத் பாண்டே நடத்திய நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அதில் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

,"இக்கட்டான சூழலில் உங்களுடன் உரையாற்றுகிறேன். காலத்தின் சூழலால் தொலைக்காட்சியில் நாள்தோறும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.


நான் இப்போது எவ்வளவு இக்கட்டான சூழலில் பேசுகிறேன் என்பதை உங்களால் உணர முடியும். நாம் தமிழர் கட்சி சீமான் பேசுவது போல என்னால் பேச முடியாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால், அவர் நினைப்பதைப் பேசலாம். ஆனால், நான் அளந்து பேச வேண்டியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டாலும், அது எப்படி வரும் என்பதை நான் அறிவேன்.ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு. நீங்கள் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் அப்புறம். எப்படி அவரைச் சந்தித்தீர்கள்' என்று என்னிடம் கேட்டார்கள்.  நான் மட்டுமல்ல. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் சென்றோம். என்னுடைய தேவை தொகுதி மக்களின்

நலன். பவானி ஆற்றின் அருகில் சாயப்பட்டறை கொண்டு வர இருக்கிறார்கள்


என்று என்னைச் சிலர் சந்தித்தார்கள். அந்த மனுவைத் தான் நான் சட்டப்பேரவைத் தலைவரிடம் கொண்டு சென்றேன். ஆனால், அது 'சபாநாயகரை செங்கோட்டையன் எப்படிச் சந்தித்தார்?' என்று இப்போது பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரைச் சந்திப்பது இயல்பான ஒன்று. கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றவற்றைக் கொண்டுவர அவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அதெல்லாம் பெரிய விஷயம் ஆக்கப்பட்டிருக்கிறது. புரட்சித் தலைவரால் என்னுடைய பயணத்தில் காலடி எடுத்து வைத்தேன். அவருடைய திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்ற புரட்சியைத் திரைப்படங்கள் மூலம் அவர் ஏற்படுத்தினார். அவர் சாதரணமாக அரசியல் வரலாற்றில் இடம் பெறவில்லை. அவரது அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது, எல்லோரையும் ஈர்ப்பது போலிருக்கும். 2026-ஆம் ஆண்டு நெருங்கும் நேரமிது. இந்த நேரத்தில் தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எப்படிப் பதில் சொன்னாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். நான் தடுமாறாமல் பதில் சொல்ல வேண்டும். சீமானைப் போல அள்ளிவிட முடியாது. அவர் உணர்ச்சிகரமாகப் பேசினாலும் இளைஞர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்.


ஆனால், நான் நிதானத்துடன் பேசும் சூழலில் உள்ளேன்.எங்கள் நீதியே. உழைக்கும் மக்கள் யாவரும் ஒரு தாய் பெற்ற பிள்ளையே' என்று அன்றே புரட்சித்தலைவர் கூறினார். இந்த மாதிரியான கருத்துகளைக் கேட்டுதான், அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தொண்டனாகச் சேர்ந்தோம். இன்றைக்கும் நான் தொண்டனாக இருக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். நான் தலைவர் இல்லை. மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்த புரட்சித்தலைவர் மறைந்த போது, 'இனி என்ன செய்யப்போகிறோம்' என்று தவித்துக்கொண்டிருந்தபோது துணிவோடு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அவரது ஆற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நான் பலமுறை வியந்திருக்கிறேன். மத்திய ஆசியாவில் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி 
பாரதப் பிரதமர் என்பதைச்  செய்தியில் பார்த்தேன். இந்திய எல்லைக்கோட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே காரணம் அவர் தான்.

அவர். எதிர்க்கட்சியாக இருந்தபோது நான் யாரையும் கடுமையாகப் பேசியதில்லை. ஏன் கடுமையாகப் பேசவில்லை என்று கேட்டால், அப்படிப் பேசத் தான் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எந்தப் பாதை சரியானதோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. என் வெற்றி முடிவானது. நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எந்தப் பாதை சரியானதோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. என் வெற்றி முடிவானது.

பாரதி சொன்னது மாதிரி பல வேடிக்கை மனிதர்கள் போல மட்டும் வீழ்ந்து விட மாட்டேன்" எனப் பேசினார். இந்த நிலையில் அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன். கட்சியின் ஒருங்கினைப்பாளர். முன்னாள் முதல்வர் O.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர், SP.வேலுமணி மணி- பொருளாளர்,  வி.கே.சசிக்கலா நடராஜன் பொதுச் செயலாளர். இனி ஆரம்பம் எடப்பாடி பழனிச்சாமி கேம் ஓவர்.                                                 "நாடகம் விடும் நேரம்தான்!  உச்ச காட்சி நடக்குதம்மா...

வேஷம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும், வேளை நெருங்குதம்மா...

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா...

சீண்டிக் கண்டு கொண்டதை, சீராட்டி வைத்ததை, சினம் கொண்டு போகுதம்மா! என பாடல் இப்போதே ஒலிக்கிறது. நம் காதில் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...