டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு, 14 பேர் மீட்பு.
, விபத்து ஏற்பட்டது நான்கு மாடிக் கட்டிடம். மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 8 முதல் 10 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று வடகிழக்கு மாவட்ட கூடுதல் துணை ஆணையர் சந்தீப் லம்பா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 19, 2025) காலை டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 14 பேர் மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர், மேலும் சுமார் பத்து பேர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக வடகிழக்கு மாவட்ட கூடுதல் துணை காவல் ஆணையர் (டிசிபி) சந்தீப் லம்பா தெரிவித்தார்.
அலுவலர்களின் கூற்றுப்படி, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் டெல்லி காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன, தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாலை 2.50 மணியளவில் வீடு இடிந்து விழுந்ததாக தங்களுக்கு தகவல் வந்ததாக பிரதேச தீயணைப்புத் துறை அலுவலர் ராஜேந்திர அத்வால் தெரிவித்தார்.
"நாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது, முழுக் கட்டிடமும் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருப்பதையும் கண்டறிந்தோம். தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புப் படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்." எனக் கூறினார்.
ஏப்ரல் 11 ஆம் தேதி, தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயலின் போது டெல்லியில் உள்ள மது விஹார் காவல் நிலையம் அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்