சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சிஙகம்புணரி
ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பத்தாவதாண்டு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, பாரத நாகரிகத்தில் கோமாதாவின் புனிதமான ஸ்தலம் பார்வையிட்டு ஆன்மீகம், வாழ்வாதாரம், ஸ்திரத்தன்மை மற்றும் இயற்கையுடனான நமது காலத்தால் அழியாத பிணைப்பின் உருவகமாக அவர் விவரித்தார். இந்த மரியாதை சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் நாகரிக நெறிமுறைகளை பிரதிபளிப்பதாகக் குறிப்பிட்டார். இது பாரதத்தின் கலாச்சாரக் கட்டமைப்பில் ஆழமாகப் பின்னிப் பிணைந்த ஒரு கொள்கை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவின் மாற்றப் பயணத்தை ஆளுநர் எடுத்துரைத்தார்.
இயற்கை விவசாயம் போன்ற பண்டைய ஞானத்தைப் புதுப்பித்து, நவீன கண்டுபிடிப்புகளுடன் கலப்பதன் மூலம் தலைமைத்துவம், புத்துயிர் பெறுகிறது. இந்த அணுகுமுறை, உலகளாவிய இருத்தலியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்கான பாதையை உலகிற்கு வழங்குகிறது என்று அவர் கூறினார். ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பங்களிப்புகளைப் பாராட்டிய அவர், உடனடி, கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்,
இந்த இலட்சியங்களை அடிமட்டத்தில் பாதுகாப்பதிலும், கலாச்சார பெருமையை வளர்ப்பதிலும், 2047 ஆம் ஆண்டுக்குள் பாரதத்தின் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் இலக்கை முன்னேற்றுவதிலும் சமூகத்தின் இன்றியமையாத பங்கை வலியுறுத்தினார். அதன் பின்னர் மதியம் கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வர் ஆலயத்தில் வழிபட்டார் நான்கு தன்னாட்சி கள்ளர் நாட்டார்கள் எதிர் நடவடிக்கைகள் இருந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் ஆஷா அஜீத் வரவேற்றார். பின்னர் சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர்,
ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த கோ பூஜை, யாக வேள்வியில் கலந்துகொண்டவர் ராணி வேலு நாச்சியர் படத்தை திறந்து வைத்து, ஜல்லிக்கட்டுக் காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பைத் துவங்கி வைத்துப் பேசினார்.
விழாவில் ஆளுநர் பேசும்போது, "தமிழ்நாடு ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி. பஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரின் மூலம் தவிடு பொடியாக்கினோம். அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதை செலுத்துவோம். நமது நாட்டை, ஆன்மாவை கட்டிக் காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பது போல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்பாடு. மேற்கத்திய நாடுகளின் மாடல் என்பது பேராசை கொண்ட சுரண்டல் மாடலாகும். ஆனால், நாம் வளரும்போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது. இதுதான் பாரத மாடல்" என்றார் தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்து கண்டதேவியிலுள்ள ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், தேவகோட்டை ராம் நகரில் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட 'கண்டதேவி தேர்' குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் எனச் சொல்லப்பட்ட நிலையில் நான்கு நாட்டார்கள் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்தார். பாஜக ஆதரவாளர்கள் சிலர் தயாரித்த ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் தேவகோட்டைக்கு வருகிறார் என்ற செய்தி பரவியது
'இந்த நூல் வெளியீட்டு விழா நடக்க கூடாது' என்று இப்பகுதியிலுள்ள. தலைவர்கள் சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதில், " 192 கிராமங்களை உள்ளடக்கிய 4 தன்னாட்சிக் கள்ளர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட சிறு பிரச்னையால் எங்களுக்கு சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் பாத்தியப்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் சில ஆண்டுகள் தேர் ஓடவில்லை. அதன்பின்பு உயர் நீதிமன்றம் உத்தரவு தலையீட்டால் அனைவரும் ஒற்றுமையாக தேர் இழுத்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் நான்கு நாடுகளுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் கண்டதேவி தேர் குறித்து நூல் எழுதி அதை ஆளுநர் வெளியிட உள்ளதாக கேள்விப்படுகிறோம்.
இந்த நூல் எங்கள் நான்கு நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜாதிக்கலவரத்தைத் தூண்டும். அதனால் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், இன்னும் சில நாட்களில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் பிரச்சனையை உண்டாக்கும் இந்த நூல் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர் இந்த தகவல் காவல்துறை மற்றும் உளவுத்துறை, சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கும் ஆளுநரின் கவனத்துக்கு சென்றதால் வேறு வழியில்லாமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய ஆளுநர் ஒத்துக்கொண்டார் எனக் கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வரவேற்றார். பின்னர் சிங்கம்புணரி சேவுகப்பருமாள் அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.குன்றக்குடி அடிகளார், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு நடந்த கோ பூஜை, யாக பூஜையில் கலந்துகொண்டவர் ராணி வேலு நாச்சியர் படத்தை திறந்து வைத்து, நாட்டின ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ரேக்ளா மாட்டு வண்டிகளின் அணி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் பேசும்போது, "தமிழகம் ஆன்மீக பூமி, வீரம் நிறைந்த பூமி. பெஹல்காம் கொடும் சம்பவத்தை நீண்ட காலம் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரின் மூலம் தவிடு பொடியாக்கினோம். அதற்காக நாம் முப்படைக்கும் மரியாதைசெலுத்துவோம். நமது நாட்டை, ஆன்மாவை கட்டி காத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. பசுவை வாழ வைப்பதுபோல் விவசாயத்தையும் வாழ வைக்க வேண்டும், நிலையான நீடித்த வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் கோட்பாடு. மேற்கத்திய நாடுகளின் மாடல் என்பது பேராசை கொண்ட சுரண்டல் மாடலாகும். ஆனால், நாம் வளரும்போது, நம்முடன் சேர்ந்து உலகமே வளர்கிறது. இதுதான் பாரத மாடல்" என்றார்அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட கண்டதேவி தேர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆர்பாட்டம், கருப்புக்கொடி எதிர்ப்பையெல்லாம் கண்டுகொண்டதில்லை. ஆனால், முதல் முறையாக மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றுள்ளார் என்கிறார்கள்.
கருத்துகள்