முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமேசான் பிரைம் உரிமையும் லாபமும் தட்டிப்பறித்த தமிழ்ராக்கர்ஸால் பொன்மகள் வந்தாள் பாதிப்பு

நடிகர் சூர்யா தயாரிப்பில், நடிகை ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் மே மாதம் 29 ஆம் அமேசான் பிரைம் தளத்தில் மே 29 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஒருநாள் முன்னதாக 28 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கே வெளியிட்டார்கள். அமேசான் பிரைம் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது, வேறு வழியில்லாமல் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக வெளியிடும் நிலைக்கு அமேசான் தள்ளப்பட்டது. தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் தளம் உடனடியாக வெளியிடும். வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களிலும் படத்தை வெளியிடுவதால் தான் தமிழ் ராக்கர்ஸ் படத்தை அங்கிருந்து படம் பிடித்து வெளியிடுகிறது என்று புகார் தெரிவித்தார்கள். சில சமயங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் இருந்தும் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியான ஒரு படத்தை பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் எப்படி வெளியிட்டது என்ற சந்தேகம் எழுந்து படத்தைத் தயாரித்துள்ள சூர்யாவின் 2 டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்திடம்தான் படத்தின் இறுதிப் பிரதி இருக்கும். அங்கிருந்து நேராக அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு படத்தின் பிரதி சென்றிருக்கும். இடையில் எங்கிருந்து படம் உருவப்பட்டிருக்கும். ஹார்ட் டிஸ்க் மூலமாக படத்தின் பிரதி சென்றிருக்கும் அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் தனிப்பட்ட கம்ப்யுட்டரிலிருந்து அமேசான் நிறுவனத்திற்கு படத்தின் 'பைல்' அனுப்பப்பட்டிருக்கும். ஓடிடி தளத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் இதற்கு பல பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கையாண்டிருக்கும். அவ்வளவு சுலபத்தில் அவர்களிடமிருந்து படத்தின் பிரதியைத் திருடியிருக்க வாய்ப்பில்லை. அடுத்து படம் வெளியாவதற்கு முன்பாக சில பல சினிமா பிரபலங்களுக்கு தனிப்பட்ட (பிரைவேட்) லின்க் மூலமாக படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அப்படி படம் பார்த்தவர்கள் மூலமாகக் கூட படத்தை கேமரா வைத்து படமாக்கியிருக்கலாம். அல்லது 'ஸ்கிரீன் கேப்சரிங்' முறையில் படத்தை அப்போதே டவுன்லோடு செய்திருக்கலாம். இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக படத்தை வேறு நாடுகளில் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக டவுன்லோடு செய்து இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கலாம். இந்தியத் திரையுலகில் முதல் முறையாக தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே முன்னணி நடிகர்களின் படங்களைத் தங்களது தளத்தில் வெளியிட அமேசான் முடிவு செய்த போதே அதை வேறு எந்த வகையிலும் 'காப்பி' ஆகி பரவாமல் இருக்க தடுத்திருக்கலாம். ஏற்கெனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ் தொடர்கள் உள்ளிட்டவை இப்படி பைரசி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் உள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களோ, அரசுகளோ தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இந்தியாவில் தடுக்க முயற்சித்தும் அது நடைபெறவில்லை. ஓடிடி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இந்தியாவில் முற்றிலும் தடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும் அப்படி ஒருவேளை அது நடந்தால், இந்தியத் திரையுலகத்திற்கு பேருதவியாக இருக்கும். தமிழ்ராக்கர்ஸ் கில்லாடிகள் தான் போல மக்கள் பேசுவது போல சுமார் 4 கோடி ரூபாய்க்கு தயாரான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை 9 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைமிற்கு விற்பனை செய்துள்ளார்களாம்! எனத் தகவல் உண்மை என்றால் ராக்கர்ஸ் செய்த இந்த ராகிங் வேலை பல தியேட்டர் உரிமை டாலர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க அவர்கள் லாபம் பறிபோகாததால்தானோ.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...