முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி

 ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி


நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ புகைப்பட கண்காட்சி கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி (KAHE) வளாகத்தில், 2021 மார்ச் 29 ஆம் தேதி முதல், மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின், கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

கற்பகம் உயர்கல்வி அகாடமியின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அமைதியின் அடையாளமான புறாவை நேற்று பறக்கவிட்டார். மேலும், புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்த கையெழுத்து பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பதிவாளர் டாக்டர் எம்.பழனிச்சாமி சுதந்திரத்தின் நன்மைகள் குறித்து பேசினார். கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் டீன் டாக்டர் என்.வி.பாலாஜி, இந்த கண்காட்சியை பாராட்டி பேசினார்.

கூட்டத்தில் பேசிய தலைமை விருந்தினர், டாக்டர் எஸ்.சுடலைமுத்து, சமூகத்தில் சுதந்திரம் முக்கிய பங்காற்றுகிறது எனவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறினார். இதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புதான் காரணம் என அவர் தெரிவித்தார். தேசிய தலைவர்களின் சிறந்த நடைமுறைகள் கற்பிக்கப்பட்டு, முன்மாதிரியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு, நமது பங்களிப்பை ஏதாவது சில வழிகளில் நாம் அளிக்க வேண்டும் எனவும், அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கு குடிமக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என அவர் கூறினார்.

கண்காட்சியின் மையக் கருத்து மற்றும் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது, தேசிய தலைவர்களையும், சுதந்திர போராட்ட வீரர்களை மதிப்பது குறித்து கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் உதவி இயக்குநர் திருமதி கரீனா பி. தெங்கமம் பேசினார்.

கற்பகம் உயர்கல்வி அகாடமியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, தேசிய தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்ஃபி  எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களை பார்வையிடும்போது, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பின்பற்றப்பட்டது.

மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.ஆர்.சந்திரசேகரன், விரிவாக்க நிகழ்ச்சிகளின் இயக்குநர் டாக்டர்.ஏ.தர்மராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் உயர்கல்வி அகாடமியின் என்எஸ்எஸ் மாணவர்கள் உதவினர்.

‘இந்தியாவின் அம்ருத் மகோத்சவம்’

இந்தியாவின் 75வது சுதந்திரதின ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதம், தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் தலைமையில் இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. 

கொவிட் தொற்று நேரத்தில், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை தென்மண்டல நிர்வாக இயக்குனர் ஆர்.டி. நசீம் விளக்கினார். ஓய்வு பெற்ற அதிகாரிகள் திரு ஆர் பாலகிருஷ்ணன், திரு பி பாலசுப்ரமணியன், திரு மஞ்சப்பன், திரு மலையப்பன், திரு சுந்தரராஜன், திரு. அகோரம், திரு ஜெகதீசன், திரு.பழனிவேல், திரு. பிள்ளை ஆகியோர் இதில் கலந்துக் கொண்டு நாட்டின் உணவு பாதுகாப்புக்கு இந்திய உணவு கழகத்தின் பங்களிப்பு தொடர்பான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நாடு சந்திக்கும் உடனடி சவால்கள் குறித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது குறித்தும் தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் பேசினார். 

அரிசி, கோதுமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தண்ணீரை அதிகம் சார்ந்திருப்பதையும், தற்போது தேவைக்கு அதிகமாக அரிசி, கோதுமை இரு மடங்கு இருப்பு வைத்திருப்பதையும் குறைக்கும் என்றார் அவர்.

எதிர்காலத்தில் உணவு மட்டும் அளிக்காமல், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்  விதத்தில், ரேசன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது என அவர் கூறினார்.

இது நமது மக்கள் தொகையின் ஊட்டசத்து நிலவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தலைமை பொது மேலாளர் திரு எம்.துளசிதாஸ்,  பொது மேலாளர்கள் திரு வி.ஹரிவிக்ரமன், திருமதி சைனி வில்சன், திருமதி பாரதி, திரு ஜக்கிருதீன், டாக்டர் வி.ஏழுமலை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.