முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி

 ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி


நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ புகைப்பட கண்காட்சி கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி (KAHE) வளாகத்தில், 2021 மார்ச் 29 ஆம் தேதி முதல், மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின், கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

கற்பகம் உயர்கல்வி அகாடமியின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அமைதியின் அடையாளமான புறாவை நேற்று பறக்கவிட்டார். மேலும், புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்த கையெழுத்து பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பதிவாளர் டாக்டர் எம்.பழனிச்சாமி சுதந்திரத்தின் நன்மைகள் குறித்து பேசினார். கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் டீன் டாக்டர் என்.வி.பாலாஜி, இந்த கண்காட்சியை பாராட்டி பேசினார்.

கூட்டத்தில் பேசிய தலைமை விருந்தினர், டாக்டர் எஸ்.சுடலைமுத்து, சமூகத்தில் சுதந்திரம் முக்கிய பங்காற்றுகிறது எனவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறினார். இதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புதான் காரணம் என அவர் தெரிவித்தார். தேசிய தலைவர்களின் சிறந்த நடைமுறைகள் கற்பிக்கப்பட்டு, முன்மாதிரியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு, நமது பங்களிப்பை ஏதாவது சில வழிகளில் நாம் அளிக்க வேண்டும் எனவும், அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கு குடிமக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என அவர் கூறினார்.

கண்காட்சியின் மையக் கருத்து மற்றும் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது, தேசிய தலைவர்களையும், சுதந்திர போராட்ட வீரர்களை மதிப்பது குறித்து கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் உதவி இயக்குநர் திருமதி கரீனா பி. தெங்கமம் பேசினார்.

கற்பகம் உயர்கல்வி அகாடமியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, தேசிய தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்ஃபி  எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களை பார்வையிடும்போது, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பின்பற்றப்பட்டது.

மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.ஆர்.சந்திரசேகரன், விரிவாக்க நிகழ்ச்சிகளின் இயக்குநர் டாக்டர்.ஏ.தர்மராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் உயர்கல்வி அகாடமியின் என்எஸ்எஸ் மாணவர்கள் உதவினர்.

‘இந்தியாவின் அம்ருத் மகோத்சவம்’

இந்தியாவின் 75வது சுதந்திரதின ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதம், தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் தலைமையில் இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. 

கொவிட் தொற்று நேரத்தில், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை தென்மண்டல நிர்வாக இயக்குனர் ஆர்.டி. நசீம் விளக்கினார். ஓய்வு பெற்ற அதிகாரிகள் திரு ஆர் பாலகிருஷ்ணன், திரு பி பாலசுப்ரமணியன், திரு மஞ்சப்பன், திரு மலையப்பன், திரு சுந்தரராஜன், திரு. அகோரம், திரு ஜெகதீசன், திரு.பழனிவேல், திரு. பிள்ளை ஆகியோர் இதில் கலந்துக் கொண்டு நாட்டின் உணவு பாதுகாப்புக்கு இந்திய உணவு கழகத்தின் பங்களிப்பு தொடர்பான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நாடு சந்திக்கும் உடனடி சவால்கள் குறித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது குறித்தும் தென்மண்டல நிர்வாக இயக்குனர் திரு ஆர்.டி.நசீம் பேசினார். 

அரிசி, கோதுமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தண்ணீரை அதிகம் சார்ந்திருப்பதையும், தற்போது தேவைக்கு அதிகமாக அரிசி, கோதுமை இரு மடங்கு இருப்பு வைத்திருப்பதையும் குறைக்கும் என்றார் அவர்.

எதிர்காலத்தில் உணவு மட்டும் அளிக்காமல், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்  விதத்தில், ரேசன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது என அவர் கூறினார்.

இது நமது மக்கள் தொகையின் ஊட்டசத்து நிலவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தலைமை பொது மேலாளர் திரு எம்.துளசிதாஸ்,  பொது மேலாளர்கள் திரு வி.ஹரிவிக்ரமன், திருமதி சைனி வில்சன், திருமதி பாரதி, திரு ஜக்கிருதீன், டாக்டர் வி.ஏழுமலை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...