முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு வீரர்களுக்கு நினைவுச் சின்னம்்அமமுக அறிவிப்பு






இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போர் வரி கொடா இயக்கம்

1764 ஆம் ஆண்டு  வெள்ளையர்களுக்கு (கேப்டன் ரூம்லே) எதிராகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு  வீரர்களுக்கு நினைவுச் சின்னம்



எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென டிடிவி தினகரன் அறிவிப்பு....அதன் வரலாற்று நிகழ்வைக் காண்போம்.அலெக்ஸாண்டர்ஸ் கிழக்கு இந்தியா மற்றும் காலனித்துவ இதழ் எனும்  ஆங்கிலப் புத்தகம் கிபி 1835 ஆம் ஆண்டில் இலண்டனில் வெளியிடப்பட்டது. இப் புத்தகத்தில் பக்கம் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் கிழக்கிந்திய கும்பெனி ஆங்கிலேயத் தளபதியால் கொல்லப்பட்ட தன்னாடசி வெள்ளளூர் நாட்டுக் கள்ளர்களைப் பற்றிய  தகவல் ஒரளவுக்கு இங்கு விரிவாக உள்ளது.

நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான்.  பின் மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான்.

இந்த 5 வருடங்களில்(1764 முதல் 1769 வரை) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரைக் குறி வைத்தான். தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 பட்டாலியன் குழு

சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் நவாப் அனுப்பி. மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பி பதினான்கு நாள் முகாமிட்டான். மேலூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து  வரி செலுத்த முடியாது என கூறி. வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கவே

பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்து சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிய மிரட்டினான்.

கிராமத்தைச் சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ளர் நாட்டார்கள் திரண்டனர். ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, அவர்களது இயல்பான முரட்டுத் தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பி  ஆயுதங்களைக் கொண்டு தாக்கதீ தயாராக

முட்புதர்களையும், வீடுகளிலும் நெருப்பு வைத்தனர் ஆங்கிலேயர். வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர்.  தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். 

வெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்தனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.

மல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பல நூற்றாண்டுகளாக தன்னரசாக் திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் கொடூரத் தாக்குதலுக்குப் பின்

 நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் பகுதிக்கு அமில்தார் பதவியிலிருந்தான். வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளைச் செய்ய 10 பியூன் அதாவது   ஏவலர்களை  அனுப்பினான் வெள்ளையனுக்கு கட்டுப்பட விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில்  பழிவாங்க காத்திருந்ததையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்றனர். இந்தச் சண்டையில் கிராமம் தீக்கிரையானது. அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, புதுக்கோட்டை தொண்டைமான் ஆதரவில் குடியேற முயற்சித்தனர். அதற்குள்  படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளளூர் அனுப்பினான்.

நடந்த மோதலில் 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பின் தான் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழக்கை வாழத் தொடங்கினர். மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை விளக்கிக் கொள்ளப்பட்டது.

சில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்களை மீண்டும் ஹைதர் அலியின் தூண்டுதலில்  தாக்குதல்கள் தொடங்கினர்.

மதுரை, தஞ்சை கள்ளர்கள் எதிரிகளைத் தாக்குதல் நடத்தும்  போது தீ பற்றும்  துப்பாக்கியை பயன் படுத்தி எவ்வளவு மறைவான பகுதிகளில் இருந்தாலும குறிதவறாமல் சுடுவதில் வள்ளவர்கள், குதிரைகளை கடிவாளம் இல்லாமலே வேகமாகச் செலுத்தும் திறனுடையவர்கள். மேலூர் கள்ளர்கள் தங்களது கோட்டைகளில் மலபார் துப்பாக்கிகளை வைத்திருந்தனர், அவற்றை உபயோகிப்பதிலும் சிறந்து விளங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.