திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தின் ஆலயத்தில் இணைந்து அமைந்துள்ள மாரியம்மன் கோவிலாகும் முன் மண்டபம், அதைத் தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் அடுத்து இவ் வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோவிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சியம்மன்,காஞ்சி காமாட்சியம்மன் சிலைகள் உள்ளன.
கோயிலின் குடமுழுக்கு 29.1.2010 இல் நடைபெற்ற கல்வெட்டுக் குறிப்பு வளாகத்தில் உள்ளது.
மாசி மாதம் பூச்சொரிதல் திருவிழா மற்றும் ஒஅஈஉதேர்த்திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்தப்படுகிறதுஇல் ஆலயம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இயங்கி வந்து தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வருகிறது
குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலைவாய்ப்புக் கேட்டு வருவோர், குடும்பப் பிரச்சனைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் நடந்தேற வேண்டுவோரென அனைவரது குறைகளையும் நீக்கி அருள்மாரி பொழிகின்ற அன்னை முத்துமாரி. அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட, அம்பிகை அருளால் விரைவில் குணமடையுமென்பது நம்பிக்கை.
300 ஆண்டுகளுக்கு முன், புதைந்து கிடந்த முத்து மாரியன்னை சிலை, பூசாரியின் அருள்வாக்கில் வெளிப்படவே அம்மனின் திருவருவைத் தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சமயத்தில், புதுக்கோட்டை மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்து சமஸ்தானப் புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து இங்கு தனியாக நிர்வாகம் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டை மன்னர் மகனுக்கு கடும் அம்மை நோய் கண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில். மன்னர், முத்துமாரி அம்மன் ஆலயம் வந்து, மகனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடவே ஆனால், விதிப் பயன் காரணமாக மரணமடைந்த ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அம்பாளை அந்த இடத்திலிருந்த வேறு இடம் மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி, சுவாமி சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில், திருவப்பூர் மக்கள் சிலர் கெஞ்சியதால், அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.அந்த இடம் தான் தற்போது காட்டு மாரியம்மன் கோவிலாகும் அன்று இரவு, அரசரின் கனவில் முத்துமாரி தோன்றி, உனது மகன் விதி வசத்தால் உன்னை விட்டுப் பிரிந்தாலும், அவனை எனது மகனாக ஏற்றுக் கொண்டேன் எனக் கூறியதாகவும். தவறை உணர்ந்த மன்னர், அம்மனை முன்பிருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறும் உத்தரவிட்டது வரலாறு.வீடுகளில் காப்புக்கட்டப்படுகிறது. பெண்கள் வீதிகளை அடைத்துக் கோலமிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் திருவிழாவினைக் காண ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள். பூச்சொரிதல் விழா
க்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். நிறைய மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவர் மேல் சொரிந்து வணங்குவர்.
விரதமிருந்து வழிபடுதல், சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டம், பூப்பல்லாக்கு, தேர் திருவிழா போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் பல ஆண்டுகள் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி அன்னதானம் எல்லாம் உண்டு. வாருங்கள் வழிபடுங்கள்.
கருத்துகள்