முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து பல தவறான ஆதாரமில்லாத வதந்திகள் பரப்பும் நபர்கள் உண்மை என்ன



























தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து பல தவறான ஆதாரமில்லாத


குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அதன் உண்மையான நிலை நமது வாசகர்கள் அறிய                                                கார்பொரேட் சாமியார் வெள்ளியங்கிரி மலையோரப் பகுதியில் ஈசா யோகா மையம் நடத்தி வரும் கர்நாடக மாநிலத்தில் ஜகதீஷ் (ஜாவா) வாசுதேவ் எனும் ஜக்கி வாசுதேவ் குறித்தும், இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்புக் கோவில்களை மீட்டு தனியார் வசமாக்க வேண்டும் என்கிற அவரின் செயல்பாடு குறித்தும் விமர்சித்திருந்தார்.

இதன்பின் ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்கள் பாரம்பரியப் புகழ் கொண்ட தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து பல தவறான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் மூலம் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இவற்றில் ஒன்றாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டதாகவும், தற்போது அவரிடம் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை (OCI) மட்டுமே உள்ளதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத் பொய் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து நம் வாசகர்கள் அறிய இத்தகவல் சார்பில் ஆய்வுக் கட்டுரை 

தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்தியக் குடிமகன் அல்ல என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து சட்டம் சார்ந்த தீவிரமாக ஆய்வு செய்த நிலையில்.

முடிவில் வெளிநாட்டு இந்தியக் குடிமகனுக்கு இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தலில்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை இல்லை எனும் தகவல் நமக்குத் தெரிய வந்தது. இத்தகவலானாது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான எம்பஸிஸ் ஆஃப் இந்தியாவில் (Embassies of India) இடம்பெற்றுள்ளது.

இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் அவரது ஓட்டுரிமை அப்போதே இரத்து செய்யப்பட்டிருக்கும். அவரால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கவே இயலாது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் பொய்யானது தான் என்பதை நாம் உணர முடியும். ஆதாரம் https://eoi.gov.in/eoisearch/MyPrint.php?3929?001/0019#:~:text=The%20OCI%20is%20not%20entitled,hold%20employment%20in%20the%20Government

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களும் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து பதிவு ஒன்றை தனது அதிகார்ப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என மான்புமிகு Dr. P. Thiaga Rajan: என் தகவல் பதிவும் உண்டு ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் எனவும்,

தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் அறிவிப்பு என்றும்.

ஈஷா மையம் மீது விசாரணை என்ற தகவல்கள் பரவி வந்த போது அப்படி எந்த ஒரு இடத்திலும் கூட அமைச்சர் சேகர்பாபு கூறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கேட்ட பத்திரிகையாளர்களிடம் பொதுவாக யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எங்குமே ஈஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஈஷாவிற்கு எதிராக குழு அமைக்கப்படும் என்றோ அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் கூறவில்லை என்ற இப்படி ஒரு தகவல் உலா வரும் நிலை. 

இன்று நேற்றல்ல இருபது வருடங்களுக்கு முன்பே கலைஞர் பிறந்தநாளுக்கு பிறந்தநாள் மர கன்று நட வேண்டுமென்ற திட்டத்தை வகுத்து கொடுத்ததே ஜக்கி வாசுதேவ் தான் என பலரும் பல தகவல்கள் வெளியிடவே.

தமிழகத்தின் சில ஜக்கி வாசுதேவை ஆதரிப்பதாக நினைத்து அவரை பலர் சிக்க வைத்திடுவார்கன் என்றே நினைக்கும் படியான அனுகூல சத்ருக்கள். 

சில கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு இறைவன் எப்போதும் மிகவும் தாமதமாகத்தான் தீர்ப்பளிப்பான். அது எதற்கென்றால். இடைப்பட்ட காலத்தில் திருந்தி நல்லவனா வாழனும்னு நீண்டதோர் சந்தர்ப்பம் வழங்குறதுக்காத்தான். அந்த வாய்ப்புகளில் திருந்தவில்லை என்றால். ஆண்டவன் கட்டளை எப்படி இருக்கும்னு சாதாரண மனிதனுக்கு தெரிய வாய்ப்பில்லை. தன்னை ஒரு சக்தியுள்ள நபராக நினைக்கும் ஜக்கி வாசுதேவ் கோயமுத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 122 அடி உயர சிவன் சிலையை நிறுவி அதை திறப்பதற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை வரவழைத்ததும், எதிர்ப்புகளை மீறி அதில் பிரதமர் கலந்து கொண்டதும் பல்வேறு மட்டங்களில் கடும் விமர்சனங்களையும் அப்போது ஏற்படுத்தியது

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷா மையம் குறித்தோ, ஜக்கி வாசுதேவ் குறித்தோ எவ்விதமான விமர்சனங்களையும் எழுப்ப முடியாது.   அந்த அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரவலாக பெருகி இருந்தனர்.   ஆனால், இன்று ஈஷா மையத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.     ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம் தான். கடந்த ஆட்சியில் அவரது ஆளுமையை அணைவரும் பார்த்து இருக்கலாம் ஆனால் இப்போது அவர் நிலை பணம் கொண்ட கார்ப்பரேட் சாமியார் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை அவரது நிறுவனங்கள் தவறு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட யாவரும் சிக்கியே தீரவேண்டும் தவறுகளுக்கு எந்த ஆளுமையும் துணைவராது.  இது அவருக்கு வசந்த காலமல்ல இலையுதிர் காலம். அவரது மூலம் அறியலாம்

கர்நாடகா மாநிலம் மைசூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில், 1953 ல் சுசீலா- டாக்டர் வாசுதேவுக்கு . நான்காவதாக பிறந்த ஜகதீஷுக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. இவர்  தந்தை இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராகப் பணிபுரிந்ததால், அவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஜக்கி என்று அழைக்கப்பட்ட ஜகதீஷ், சிறு வயதிலேயே அடிக்கடி அருகிலுள்ள வனங்களுக்குப் பயணம் செய்வார். சில சமயம் இப்பயணங்கள் 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். இவர் 11 வயதில், மல்லடிஹள்ளி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை சந்தித்து, அவரிடம்  யோகாசனங்களைக் கற்றவர்,

பள்ளிப் படிப்பை முடித்தபின், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரியானார். அப்போது அவர் வகுப்பில் இரண்டாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். கல்லூரி நாட்களில் பயணம் செய்வதிலும் ஜாவா மோட்டார் பைக்குகளிலும்  ஆர்வம் கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டி மலை அவருக்கு பிடித்த இடமாக இருந்தது. அவர்கள் அங்கு அடிக்கடி சந்திப்பதும், இரவுகளில் பைக் ஓட்டிச்செல்வதுமாக இருந்த. ஜக்கி தனது மோட்டார் பைக்கில் நாடு முழுவதிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்றவர்.

நேபாளின் எல்லையைத் தொட்டபோது அவருக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், அனுமதிக்கவில்லை. தான் எங்கு செல்வதையும் எவரும் தடுக்க முடியாதவாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை இச்சம்பவம் அவருக்குள் உருவாக்கியது. அது தான் அனைத்துக்கும் ஆசைப்படு என்று அவரது கோஷம் பட்டப்படிப்பை முடித்தபின் இந்த எண்ணமே அவரைப் பல தொழில்களைத் துவங்கத் ஆசை தூண்டி, அவற்றை நடத்தச் செய்தது. அவர் செய்த தொழில்களில் கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில் உள்ளடங்கும்.                    2004 ஆம் ஆண்டு  ‘ப்ரொஜக்ட் கீரீன் ஹேண்ட்ஸ்’ (பி.ஜி.எச்) ஐ நிறுவினார் மாநிலத்தில்  இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் 114 மில்லியன் மரங்களை நடுவதை நோக்கமாக கொண்டது.

ஜக்கி வாசுதேவ் ஐக்கிய நாடுகள் கலந்துக்கொண்ட மில்லினியம் உலக அமைதி உச்சி மாநாட்டில் பேசியுள்ளார். உலகெங்கும் சென்று பல நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியுள்ளார்

எட்டு வெவ்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவது பொழுதுபோக்காகும்.

2017 ஆம் ஆண்டு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த 112 அடி ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ‘ஈஷா யோகா’ மையத்தில் திறந்து வைத்தார்.

அதே ஆண்டிலேயே ஜக்கி வாசுதேவ் ‘நதிகளுக்கான பேரணி’ என்ற திட்டத்தை துவங்கினார்.

ஜக்கிவாசுதேவ் ஈஷா அறக்கட்டளையை நிறுவினார்.

ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வலர்களைக் கொண்ட இந்த அமைப்பு ‘ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்’ என்ற சர்வதேச அமைப்போடு இணைந்து செயல்படுகிறது.

இவரது ‘ப்ரொஜக்ட் க்ரீன் ஹேண்ட்ஸ்’ (பி.ஜி.எச்) என்ற அமைப்புக்கு ஜூன் 2010 ஆம் ஆண்டு ‘இந்திரா காந்தி பரியவன் புராஸ்கர்’ என்ற விருதை இந்திய அரசு வழங்கியது.

சுற்றுசூழல் பாதுகாப்பு துறையில்‘தி இண்டியன் எக்ஸ்ப்ரஸ்’ 2017 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஜக்கிவாசுதேவை ஒருவராகப் பட்டியலிட்டது.

2017 ஆம் ஆண்டு இந்திய அரசால் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.ஜக்கி வாசுதேவ் 1984 இல் விஜயக்குமாரி என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு ராதே என்ற மகள் உள்ளார். 1997 ஆம் ஆண்டு அவரது மனைவி இறந்தார். ராதே ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர்

2014 ஆம் ஆண்டில் இவர் ஜக்கிவாசுதேவின் ஆசிரமத்தில் உள்ள சந்தீப் நாரயணம் என்ற பாடகரை திருமணம் செய்துக்கொண்டார்.

அப்போது ஈஷா மையத்தின் ஒரு வார கால யோகா பயிற்சி வகுப்புக்  கட்டணமாக 750 ரூபாய் பெற்றனர்   அந்தக் கட்டணம் விருப்பக் கட்டணம் அல்ல.  கட்டணம் செலுத்தினால்தான் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும்.   கட்டணம் செலுத்தியவுடன் அவர்கள் அளித்த ரசீதில், நன்கொடை  என்று இருந்தது.   வருமான வரிச் சட்டம் பிரிவு 80 G யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டது என்றும் இருந்து.  இதுவே பெரும் நெருடலாகவும் இருந்துள்ளது.    நன்கொடை என்பது நாமாக விரும்பி அளிப்பது.  கட்டாயமாக வசூலித்து விட்டு அதற்கு நன்கொடை என்று ரசீது அளித்தால் அது  இப்படிப்பட்ட மோசடியை தெரிந்தே அரங்கேற்றி வரும் ஜக்கி வாசுதேவைத்தான் இவ்வுலகை வாழவைக்க வந்த வள்ளல் என்று புகழ்கின்றனர். ஈஷா யோக மையம் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 80ஜி வரி விலக்கை துஷ்பிரயோகம் செய்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வருவதால், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சலுகையை ரத்து செய்ய வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முறையிடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயிற்சியின் கடைசி நாளில் அவர்கள் உருத்திராட்ச மாலை அணிந்தால் அது மனதை ஒருமுகப்படுத்தும் என்றனர்.   ஒரு உருத்திராட்ச மாலையின் விலை 1500 ரூபாய் என்றனர்.  அதன் பிறகு ஜக்கியின் உரைகள் அடங்கிய டிவிடிக்கள், அவர் படங்கள், கடவுள் படங்கள் போன்றவை பல நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டதாக .  அத்தனை விற்பனைக்கும் நன்கொடை என்றே ரசீது அளிக்கப்பட்டதென்றும் பயிற்சிக்கு சென்று வந்த பலரும் கூறக் கேட்கலாம்

அங்கு சென்று வந்த ஒரு பத்திரிகையாளர் தரும் தகவல் இது

ஜக்கி வாசுதேவ் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றி.  உடனடியாக கோவை சென்று, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜக்கி ஆசிரமத்துக்கு சென்றவர்.  அவரது கருத்து இது. ஆசிரமத்தினுள்ளே தியான லிங்கம் என்ற குடில் இருந்தது.   அதனுள் பலரும் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.    அங்கே கண்ட பலரும், மொட்டை அடித்துக் கொண்டு சன்னியாசம் ஏற்றவர்களாக இருந்தனர்.     பல லட்ச ரூபாய் சம்பளம் தரும் பதவிகளை துறந்து குடும்பத்தை துறந்து சன்னியாசம் ஏற்பது அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது.  ஆனால், வயதான பெற்றோரை, கணவரை, மனைவியை, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, இருக்கும் பணத்தையெல்லாம் ஜக்கியிடம் அளித்து விட்டு சன்னியாசம் என்று ஒரு ஆசிரமத்தில் குடியிருப்பது சரியான காரியமாகப் படவில்லை.    தன் மகளும், மகனும் துறவறம் பூண்டு சென்று விட்டனர்.   அவர்களை பார்த்தே வருடக்கணக்காக ஆகிறது என்று பெற்றோர்கள் கண்ணீரோடு பேசுவதை பார்க்கையில், அவர்களின் துறவறம் எப்படி அறம் சார்ந்த காரியமாகும் ?  இப்படிப்பட்ட  துறவறங்களை ஊக்குவித்து விட்டு, தன் மகளுக்கு மட்டும் சிறப்பாக திருமணம் செய்து வைக்கும் ஜக்கிவாசுதேவின் செயல் அப்போது விமர்சனத்துக்கு உட்பட்டது.

ஜக்கியின் தந்திரங்கள் எளிமையானவை, கிருஸ்தவ மிஷனரிகளின் செயல் போலவே இதுவும் ஆனால் வலிமையானவை.   சமுதாயத்தில் பிரபலமாக உள்ள அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு நேர்முகம் கொடுத்து, அதை ஊடகங்களில் பிரபலமாக்கி, அதன் மூலம் சாமான்ய மக்களை தன் பக்கம் இழுத்த இவரது தந்திரம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், திமுக ஆட்சியில் இருந்தபோது, அப்போது முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.    கருணாநிதியிடம் ஜக்கி வாசுதேவை அறிமுகப்படுத்தியவர் நக்கீரன் பத்திரிகையில் அப்போது இருந்த இணை ஆசிரியர் காமராஜ்.   அந்த நெருக்கத்தின் அடிப்படையில்,  பல சலுகைகளை பெற்றுள்ளார் அப்போது ஜக்கி வாசுதேவ்.    அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர் ஈர்க்கப்பட்டு, ஜக்கியின் மவுண்ட் கைலாஷ் யாத்திரைக்கு பணம் கட்டினார்.  அதற்கான கட்டணம் 1.5 லட்சம் ரூபாய்.    அந்த யாத்திரையில் அவரோடு பயணித்தவர்கள் மொத்தம் 600 பேர்.   யாத்திரை சென்று வந்த பிறகு ஒரு ட்ராவல் ஏஜென்சியில் கைலாஷ் யாத்திரைக்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது, வெறும் 42 ஆயிரம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.   600 பேருக்கு எவ்வளவு ஆகும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

.   ஈஷா யோக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்த தாக்கத்தில் அந்த நண்பர், ஈஷாவில் சொல்லிக் கொடுக்கும் யோகா பயிற்சிகளை வீடியோ வடிவில் உருவாக்கி ஒரு இணையதளத்தில் ஏற்றியிருக்கிறார்.    அந்த வீடியோவை உடனடியாக நீக்குங்கள் என்று ஈஷா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வரவே.  அவர் மறுத்ததும், அவர்களே புகார் அனுப்பி அந்த இணையதளத்தையே முடக்கியுள்ளனர்.

யோகா பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறோம் என்றால், அதை இப்படி ரகசியமாக மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன ?  ஈஷா மையத்துக்கு பணம் கட்டித்தான் யோகா கலையை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது வியாபாரம் தான்.

ஈஷா நிறுவனத்தால் 12 நிறுவனங்கள், கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதில் பல கட்டுமான நிறுவனங்கள். 12 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் ஈஷாவின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் செயல்பட்டு வருகின்றன.

ஈஷாவில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் செல்வந்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்களை தங்க வைக்க தற்போது உள்ள ஈஷா மையத்திற்கு உள்ளாகவே குளிர்சாதன வசதியோடு கூடிய குடில்கள் அமைந்துள்ளன.  ஆனால் ஈஷா மையத்துக்கு வரும் பிரமுகர்களை வசதியோடு தங்கவைத்து, அவர்களிடமிருந்து டாலர்களைப் பெற தற்போது உள்ள இடங்கள் போதுமானதாக இல்லையென்பதால் வில்லா போன்ற வீடுகளை ஈஷா மையத்துக்கு அருகாமையிலேயே கட்டவதற்கு திட்டமிட்டு.  ஈஷா மையக் கட்டிடங்கள் அனைத்துக்கும் அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள்  .   இந்த மனு தவிர,  மற்றொரு பொதுநல வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஈஷா மையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இன்று வரை எவ்வித அனுமதியும் இல்லாமல்தான் கட்டப்பட்டுள்ளன என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது.  இந்த நிலையில் புதிதாக வில்லாக்கள் கட்டுவதற்கு விவசாய விளை நிலைங்களை அழித்து, யானைகள் வழித்தடத்தில் புதிய கட்டுமானங்களை செய்தால், அதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது ஜக்கிவாசுதேவுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான், க்ருஷி லேன்ட் ஃபார்ம் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதனை வழக்கம் போல கோயம்பத்தூரில் பதிவு செய்யாமல், டெல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் ஜக்கி வாசுதேவ்.   இதன் இயக்குநர்களாக உலகளவில் பிரபலமான சத்தியபால் டிசைனர்ஸ் என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் உரிமையாளரான புனீத் நந்தா என்பவரும், ஏபிஎன்  மற்றும் இராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் வங்கிகளின் முன்னால் துணைத்தலைவரான மெளமித சென் சர்மா என்ற பெண்மனியும் உள்ளனர்.

க்ருஷி கட்டுமான நிறுவனத்துக்கும் ஈஷா நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்பது போல நிரூபிக்கவே தனியாக வேறு பெயரில் கட்டுமான நிறுவனம் தொடங்கப்பட்டாலும், க்ருஷி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள்  இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஈஷாவின் தீவிர ஆதரவாளர்கள். இதில் மெளமித சென் சர்மா தனது வேலையினை உதறிவிட்டு தற்போது ஈஷா யோகா மையத்திலேயே வசித்து வருகின்றார். இவருக்கு தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது.  புனீத் நந்தா தனது முகநூல் மற்றும் வலைப்பக்கத்தில் தன்னை ஈஷா மையத்தில் 2006 முதல் தன்னார்வலராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிருஷி லேண்ட் பார்ம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டாலும் இதனை பதிவு செய்தவர்கள் திருப்பூர் வேலம்பளையம் சுவர்ணபுரி அவன்யூவில் உள்ள ஜக்கி வாசுதேவ் இல்லத்தில் இயங்கிவரும் ஒரு கணக்குத் தணிக்கையாளரால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வில்லா வகையிலான வீடுகளை கட்டுவதற்கு அனுமதி கேட்டபோது, வனப்பகுதி மற்றும் மலைத்தள பாதுகாப்புக் குழு அனுமதி வேண்டும் என்று அனுமதி தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   ஆனால் இந்த நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, வீடு கட்டுவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.  அந்த வழக்கில்  பதில் மனு தாக்கல் செய்த வனத்துறை, இவர்கள் கட்டுமானத்துக்கு அனுமதி கோரும் இடம், யானைகளின் வழித்தடம் என்று பதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   அவர்கள் கட்டுமானம் செய்ய அனுமதி கோரும் இடத்துக்கு வெகு அருகில்தான் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ருஷி நிறுவனம் அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில், வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு 

க்ருஷி நிறுவனம் அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில், வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு

ஈஷா நிறுவனம் 3 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட கட்டிடங்களை நகர் ஊரமைப்புத் துறையிடமோ, மலைத்தள பாதுகாப்புக் குழுமத்திடமோ அனுமதி பெறாமல் கட்டி வந்தது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்தை ஏமாற்றவே க்ருஷி என்ற பெயரில் இந்த கட்டுமானங்களை செய்து வருகிறது.

ஈஷா நிறுவனம் மீதான முக்கிய குற்றச்சாட்டே யானைகள் வழித்தடத்தை அடைத்து, கட்டுமானம் செய்து வருகிறார்கள் என்பதுதான்.   இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் விவசாய நிலங்களை அழித்து, அடுக்குமாடி வீடுகள் மற்றும் வில்லாக்களை கட்ட இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஈஷா நிறுவனம், சட்டத்தை மதிக்காமல், இயற்கையை அழித்து கட்டுமானம் செய்து வருவதும், அரசு அதிகாரிகள் துணையோடு, இக்கட்டுமானங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருவதும் ஆவணங்களோடு நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேறு பெயரில் இதே போன்ற சட்டவிரோத கட்டுமானத்தை நடத்துவதற்கு ஈஷா நிறுவனம் முயற்சி செய்ததா.என்ற வினாவிற்கு விடை தான் அமைச்சர் கருத்து.

இது தவிர, டீசர்ட் முதல் ஊறுகாய் வரை, நேரடியாகவும் இணையம் மூலமாகவும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து வருகிறது ஈஷா.  இந்த வியாபாரத்தின் மூலம் வரும் அனைத்து வருமானமும் நன்கொடை என்று வரவு வைக்கப்பட்டு, வாட் வரி, வருமான வரி என்று கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      ஒட்டுமொத்தமாக மோசடியின் மொத்த உருவமாக ஈஷா நிறுவனம் திகழ்ந்து வருகிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.

சத்குரு சன்னதி என்ற பெயரில் விற்கப்படும் ஒரு படத்தின் விலை 1,31,700 ரூபாய். 

சத்குரு சன்னதி என்ற பெயரில் விற்கப்படும் ஒரு படத்தின் விலை 1,31,700 ரூபாய்.

2013ல் இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டது.     .

இந்து மதம் மூன்றுவழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.

பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்குரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்குரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச்செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்றிருக்கவேண்டும்.

மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன்பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை.மிகக்கடினமான சுயஉளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும். பட்டினத்தார்.வள்ளளார் போன்ற மகான்கள் பூமி இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...