முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி-20 கல்வி பணிக்குழு மற்றும் சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்

 ஜி-20 சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் திரு தோமர், திரு பரஸ் ஆகியோர் தொடங்கி வைத்தார்

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 முதலாவது சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழுவின்  இரண்டு நாள் கூட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் ஆகியோர் சண்டிகரில் இன்று தொடங்கிவைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர், அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் இந்தியா, படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இவை இரண்டுமே எதிர்கால இந்தியாவுடன் நெருங்கிய  தொடர்புடையதாகும் என்றும் கூறினார்.  டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

 ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா வகிப்பது நம் அனைத்து குடிமக்களுக்கும் பெருமையான தருணம் என்று அவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நமக்கான கடமைகள் குறித்து அனைவரும் நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளோம்.   கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் திரு பராஸ், ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது சர்வதேச நிதிக் கட்டமைப்பு இன்று  நல்லநிலையில் இருப்பதை உறுதி செய்வது, மேலும் வளர்ச்சியடையச் செய்வது ஆகியவை நமது கடமை என்று கூறினார்.

அத்துடன்  வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு அதிகபட்ச ஆதரவு அளிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ நடத்துவதற்கு சென்னை தயாராகிறது

முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ நடத்துவதற்கு சென்னை தயாராகிறது.

ஃபிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 30 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து 80 பிரதிநிதிகள்  பங்கேற்க உள்ளனர். 

‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நாளை (ஜன.31) நடத்த உள்ளது.

‘டிஜிட்டல் கல்வி முன்முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்பாடு’ குறித்து ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தனித்துவ முன்முயற்சி காட்சிப்படுத்தப்படுகிறது.

‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நடத்துவதுடன் சென்னையில் முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ தமிழ்நாடு நடத்தவிருக்கிறது.

இந்தக் கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் கே சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குவார். அனைவருக்கும் எளிதில் அணுகவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான கல்வியை அளிப்பதற்கு ஜி-20 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர்  வி காமகோடி உரையாற்றுவார்.

மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் சமமான கல்வி வழங்குதல், உயர்தரமான உயர்கல்வி கற்றல் வாய்ப்புகளை விரிவாக்குதல், திறன் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஒருநாள் கருத்தரங்கில் 3 அமர்வுகளில் இடம் பெறும். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், தேசிய கல்வித் தொழில்நுட்ப அமைப்பின் (என்இடிஎஃப்) தலைவர் அனில் சஹஸ்ரபுதே, மத்திய அரசின் திறன் கல்வித்துறைச் செயலாளர் அதுல்குமார் திவாரி ஆகியோர் இந்த அமர்வுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இந்த ஒரு நாள் நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மேலும், ஐஐடி சென்னையின், வரலாறு, தொலைநோக்கு, திட்டம், இயக்கம் ஆகியவற்றை ஆடியோ வழியாக எடுத்துரைத்தல், பாரம்பரிய மையம், புதிய கண்டுபிடிப்புக்கான மையம்,  அறிவுசார் மையம் ஆகிய சிறப்புமிக்க 3 மையங்களை பார்வையிடுதல் ஆகியவையும் இந்நாளில் இடம் பெறும்.

இந்த கருத்தரங்கு ஜி-20 உறுப்புநாடுகளிடையே பேரார்வத்தை உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் காமகோடி தெரிவித்தார். பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் தங்களின் மிகச் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைக்கும் உள்ளீடுகளை 15 நாடுகள் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜி-20 கல்வி பணிக்குழு:-

உயர்கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி தலைமையில் ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் ஃபிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய தலைமைத்துவத்துவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு செயல் வடிவம் அளிக்கிறது. ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழு கூட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைக்கிறார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு  நீண்ட கால,  நிலையான வகையில் எவ்விதம் தீர்வு  காண வேண்டும் என்பது குறித்து விரிவாக  விவாதிக்கப்படும். 30 நாடுகளைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள், சர்வேதேச அமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்துமான,  தரமானக் கல்வியை வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

ஃபிப்ரவரி 1-ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் பிரதிநிதிகளை சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரத்தின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய புராதன இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம்  கி.மு. 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளமான, கட்டடக்கலைப் பாரம்பரியம் மற்றும் உயர்தர கைவினையைப் பிரதிபலிக்கும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மகாபலிபுரம் புராதன சின்னங்களை இந்த நிகழ்வில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள்.

பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் உணவு வகைகளின் ருசிகரமான அனுபவத்தையும், வலிமையான கலாச்சார வடிவங்களை  கண்டுகளிக்கவும் ஏதுவாக பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் பிரதிநிதிகளுக்கு சிறப்பான மற்றும் எளிதில் மறக்க முடியாத அளவிலான அனுபவங்களோடு அவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்வர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த