முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தின் நுழைவுவாயிலில், படப்பிடிப்பால் மக்கள் அவதி

திருவண்ணாமலை தாலுகா  அலுவலகத்தின் நுழைவுவாயிலில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, பொது மக்கள் யாரும் செல்ல முடியாத படி  மக்களை தனியார் நிறுவனம் அமர்த்திய பணிக் காவலர்கள்  சிறைப்பிடித்தனர்.


அதனால், தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள அரசு விடுதிகளுக்குச்  செல்ல முடியாமல் மாணவிகள் தவித்ததுடன் தாலுகா  அலுவலகத்தில், இ-சேவை மையத்திற்கு வந்த பொது மக்களும், ஊழியர்களும் அங்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, தாலுகா அலுவலகக் கதவுகளைப் மூடுவதற்கு முயன்றதால், உழவர் சந்தைக்குச் சென்ற விவசாய வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.



திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பின்  

போது பொதுமக்களின் செல்போன்களைப் பறித்து வைத்துக் கொண்ட தனியார் காவலர்களாக பணிக்கு வந்த  பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாகக் காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள்  நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அங்கு குவிந்தனர். இவர்களது சொந்தப் பாதுகாப்புகாக பவுன்சர்களும் குவிக்கப்பட்டனர்.


படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டன. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகளும் அகற்றப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் வெளியில்  பரவியதால், தாலுகா அலுவலக வளாகத்தில் வேடிக்கை பார்க்கும்  பொதுமக்களும் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்புக் காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோவாகப் படம் பிடித்தனர்

அதையறிந்த பவுன்சர்கள், மக்களிடமிருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகியிருந்த புகைப்படங்களை டெலிட் செய்து அடாவடியில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது, மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் என ‘உள்ளூர் இடைத் தரகர்களானவர்கள் லொக்கேசன் மேனேஜர்கள்  மூலம் மிரட்டல் விடுத்தனர். பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தான் செய்வோம், உள் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்திக் கொள்ளுங்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதனால் 

நுழைவு வாயிலில்  கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாத வகையில் மக்களை பவுன்சர்கள் சிறைபிடித்தனர். இதனால், 

படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி, வட்டாட்சியர் அலுவலக வளாக நுழைவு பாதையில் கயிற்றை கட்டியது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று  பள்ளிகள்  மற்றும் கல்லூரி மாணவிகளுன்  விடுதிகள், இணை சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கிளைச் சிறை, சிறார் நீதிக்குழுமம் ஆகியவை செயல்படுகிறது. அதனடிப்படையில் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள், தினசரி வந்து செல்கின்றனர். முக்கியத்துவமானயிடத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள், கோயில் திருவிழா மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தும்போது, மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றமும் கூறுகிறது. ஆனால், படப்பிடிப்பு என்ற பெயரில் தாலுகா அலுவலக வளாகம் உள்ளே பொது மக்களைச் செல்லவிடாமல் கயிறு கட்டி தடுப்பது, புகைப்படமெடுக்கும் மக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறிப்பது என்பது சட்ட விதிகளை மீறிய செயலாகும்.

வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகையை திடீரென மாற்றியதால், பணியிலிருந்த அலுவலர்களைத் தேடி வந்த மக்கள் குழப்பமடைந்தனர். மக்களின் அடிப்படை குறை தீர்வு   அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களில் சிலர் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில்

மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மந்தாகினிக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.