முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தின் நுழைவுவாயிலில், படப்பிடிப்பால் மக்கள் அவதி

திருவண்ணாமலை தாலுகா  அலுவலகத்தின் நுழைவுவாயிலில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, பொது மக்கள் யாரும் செல்ல முடியாத படி  மக்களை தனியார் நிறுவனம் அமர்த்திய பணிக் காவலர்கள்  சிறைப்பிடித்தனர்.


அதனால், தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள அரசு விடுதிகளுக்குச்  செல்ல முடியாமல் மாணவிகள் தவித்ததுடன் தாலுகா  அலுவலகத்தில், இ-சேவை மையத்திற்கு வந்த பொது மக்களும், ஊழியர்களும் அங்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, தாலுகா அலுவலகக் கதவுகளைப் மூடுவதற்கு முயன்றதால், உழவர் சந்தைக்குச் சென்ற விவசாய வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.



திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பின்  

போது பொதுமக்களின் செல்போன்களைப் பறித்து வைத்துக் கொண்ட தனியார் காவலர்களாக பணிக்கு வந்த  பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாகக் காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள்  நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அங்கு குவிந்தனர். இவர்களது சொந்தப் பாதுகாப்புகாக பவுன்சர்களும் குவிக்கப்பட்டனர்.


படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டன. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகளும் அகற்றப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் வெளியில்  பரவியதால், தாலுகா அலுவலக வளாகத்தில் வேடிக்கை பார்க்கும்  பொதுமக்களும் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்புக் காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோவாகப் படம் பிடித்தனர்

அதையறிந்த பவுன்சர்கள், மக்களிடமிருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகியிருந்த புகைப்படங்களை டெலிட் செய்து அடாவடியில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது, மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் என ‘உள்ளூர் இடைத் தரகர்களானவர்கள் லொக்கேசன் மேனேஜர்கள்  மூலம் மிரட்டல் விடுத்தனர். பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தான் செய்வோம், உள் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்திக் கொள்ளுங்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதனால் 

நுழைவு வாயிலில்  கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாத வகையில் மக்களை பவுன்சர்கள் சிறைபிடித்தனர். இதனால், 

படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி, வட்டாட்சியர் அலுவலக வளாக நுழைவு பாதையில் கயிற்றை கட்டியது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று  பள்ளிகள்  மற்றும் கல்லூரி மாணவிகளுன்  விடுதிகள், இணை சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கிளைச் சிறை, சிறார் நீதிக்குழுமம் ஆகியவை செயல்படுகிறது. அதனடிப்படையில் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள், தினசரி வந்து செல்கின்றனர். முக்கியத்துவமானயிடத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள், கோயில் திருவிழா மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தும்போது, மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றமும் கூறுகிறது. ஆனால், படப்பிடிப்பு என்ற பெயரில் தாலுகா அலுவலக வளாகம் உள்ளே பொது மக்களைச் செல்லவிடாமல் கயிறு கட்டி தடுப்பது, புகைப்படமெடுக்கும் மக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறிப்பது என்பது சட்ட விதிகளை மீறிய செயலாகும்.

வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகையை திடீரென மாற்றியதால், பணியிலிருந்த அலுவலர்களைத் தேடி வந்த மக்கள் குழப்பமடைந்தனர். மக்களின் அடிப்படை குறை தீர்வு   அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களில் சிலர் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில்

மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மந்தாகினிக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...