முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெல் உமிகளை மறுசுழற்சி செய்து, சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் சென்னை ஐஐடி

நெல் உமிகளை மறுசுழற்சி செய்து, சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக  (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள், நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும், வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

 நெல் கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறையினர் எரிசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால். விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க இத்தொழில்நுட்பம் உதவும். வட இந்தியாவில் வைக்கோல் எரிப்பு மற்றும் இதர பண்ணைக் கழிவுகள் எரிப்பதைக் குறைக்க இந்த அணுகுமுறை முக்கிய பங்களிப்பை வழங்கும்.



கரிமக் கழிவுகள், குறிப்பிட்ட சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு மின்தேக்கிகளில் முக்கிய உதிரிபாகமாகப் பயன்படுத்தப்படும் 'செயல்படுத்தப்பட்ட கார்பனை' உருவாக்குவதன் வாயிலாக புதிய 'பண்ணை ஆற்றல் ஒருங்கியக்கத்தை' (Farm-Energy Synergy) தங்கள் பணியின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

நெல் கழிவுகளில் கிடைக்கும் 'செயல்படுத்தப்பட்ட கார்பனால்' தயாரிக்கப்படும் சிறப்பு மின்தேக்கிகள், மின்னணுவியல், எரிசக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதுடன், சிறப்பு மின்தேக்கிகள் துறையில் தற்சார்பை வளர்க்கவும் உதவுகின்றன.




சிறப்பு மின்தேக்கிகள் மற்றும் அதன் அடிப்படையிலான எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் தற்சார்பை எட்டுவதன் வாயிலாக அறிவுசார் சொத்துரிமை பதிவு, வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 7 கோடியே 60 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கழிவுகள் சேருகின்றன. வைக்கோலை மண்ணுக்குள் செலுத்த அதனை எரிப்பதுதான் சிக்கனமான, பொருத்தமான தீர்வாக விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் கணிசமான அளவுக்கு மாசுபாடு ஏற்படுவதுடன் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் விளைவிக்கிறது. மேலும் உயிரி எரிப்பின் சாத்தியமான பயன்பாடும் குறைகிறது. பண்ணைக் கழிவு மேலாண்மையை இவ்வாறு கையாள்வதால் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 92,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிக் கழிவுகளை உயிரிப்பொருளாக (காய்கறிக் கழிவு போன்றவை) மாற்றுவதன் மூலம் 'செயல்படுத்தப்பட்ட கார்பனாகப் பயன்படுத்தி சிறப்பு மின்தேக்கிகளுக்கான மின்முனைப் பொருட்களாக (supercapacitor electrode materials) தயாரிக்கலாம் என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நெல் கழிவுகளின் மூலம் 'செயல்படுத்தப்பட்ட கார்பனை' உற்பத்தி செய்யலாம். செயல்படுத்தப்பட்ட கார்பனை உருவாக்குவதற்கும், உற்பத்தி அளவை ஆராய்வதற்கும் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்வது என்பதுதான் எதிர்காலத் திட்டமாகும்.

சமூகநலன் சார்ந்த இத்தகைய திட்டங்களில் தொழில்துறையினர் எப்படி உதவ முடியும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விவசாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நெல் கழிவுகள் போன்ற உயிரிகளை செயல்படுத்தப்பட்ட கார்பனாக மாற்றும் இந்தத் திருப்புமுனைத் தொழில்நுட்பம் நமது ஆரோக்கியம், சுற்றுச்சூழல், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் (Mettallurgical and Materials) துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் டிஜு தாமஸ் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவும், நாட்டிற்கு பெருமளவில் பயனளிக்கவும் சமூகப் பொறுப்புணர்வு நிதிக்கான கூட்டாளர்களை இக்கல்வி நிறுவனம் வரவேற்கிறது.

இத்தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகளை விளக்கி அவர் கூறுகையில், "நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறை மூலம் நாங்கள் தீர்வைக் கண்டறிந்துள்ளோம். நாட்டில் உள்ள நெல் கழிவுகளை வணிகத் தரமான கார்பன் பொருளாக மாற்றவும், சந்தைத் தரத்திற்கு ஏற்ப சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பயன்படுத்தவும் இத்தொழில்நுட்பம் உதவும்” என்றார்.

டாக்டர் டிஜு தாமஸ் மேலும் கூறும்போது, "சிறப்பு மின்தேக்கிகளை மாடுலர் இணைப்பில் வழங்குவது உலகம் முழுவதும் உள்ள எரிசக்தி தீர்வுகளுக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, இது ஒரு தனித்துவமான, புதுமையான, அளவிடக்கூடிய பண்ணையில் இருந்து எரிசக்தியாக மாற்றும் திறனுடையதாக இருக்கும். இதனால் விவசாயிகளும், தொழில்துறையினரும் ஒரே நேரத்தில் பயனடைவார்கள். நாடு முழுவதும் நன்மை தரக்கூடிய அளவில் இதனை செயல்படுத்தவும் முடியும். காலநிலை மாற்றம், சிஓபி 26 மாநாடு, மிஷன் 2070, மாண்ட்ரீல் ப்ரோட்டகால், கியோட்டோ ப்ரோட்டகால் போன்றவற்றில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அரசாங்கத்தின் இலக்கை அடைய இந்த நடைமுறை உதவும் " என்றார்.

ஐ.நா.வின் நிலையான பல்வேறு நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) களுக்கு இத்திட்டத்தின் மூலம் பின்வரும் முக்கிய பங்களிப்பை இந்தியா வழங்க முடியும்

SDG 7: குறைந்த செலவில் தூய்மையான ஆற்றல்

SDG 8: ஏற்புடைய வேலையுடன் பொருளாதார வளர்ச்சி

SDG 1: வறுமையின்மை, திறன் உருவாக்கம்

SDG 2: ஆரோக்கியமும் நல்வாழ்வும்

SDG 12: பொறுப்பான நுகர்வும் தயாரிப்பும்

SDG 13: காலநிலை நடவடிக்கை

செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பொறுத்தவரை எரிசக்தித் துறை மட்டுமின்றி நீர் சுத்திகரிப்பு, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, உயிரி கார்பன் உற்பத்தி போன்றவற்றுக்கும் பயன்படுத்தக் கூடியதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த