முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதியாண்டு முடிகிறது நாளையிலிருந்து பல விஷயங்களில் மாற்றம்

 வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரப்போகும் 10 புதிய மாற்றம்



நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் 31, 2023 முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அதாவது இன்னும் 2 நாள்களில் புதிய நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய வருமான வரி விதிப்பில் வரவுள்ள புதிய மாற்றங்கள்:


மாத சம்பளம் வாங்குவோர்களுக்காக. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சத்திற்குள் வருமானம் பெற்றவர்கள், புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது மட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள தனி நபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ், கூடுதல் கட்டணமாக 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.புதிய வரி விகித அடுக்குகள்.பழைய வருமான வரி விதிப்படி, ரூபாய் 3 லட்சம் வரை வருமானம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் புதிய வருமான வரி விதி மாற்றங்களின் படி, இனிவரும் காலங்களில் தனி நபர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் என்றால் 5 சதவீத வரியும், ரூ.6 முதல் ரூ. 9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.ஏப்ரல் 01,முதல்,



G,pay E,pay, Gogul,Pay, என அனைத்து! pay விற்கும்! ஒரு சதவீதம் வரிவிதிப்பு,                                நாளை  முதல்  மாற போகிறவை

இந்த நிதியாண்டு முடிகிறது நாளையிலிருந்து பல விஷயங்களில் மாற்றம் வருகிறது.

பல பொருட்களின் விலைவாசிகள்  உயர்கிறது.

இந்த ஏப்ரல் முதல் வர்த்தக ரீதியாக பல மாற்றங்களும், புதிய விலை நிர்ணயங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் உத்தேச பட்டியல்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயிக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றதன்படி ஏப்ரல் முதல் தேதி எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம்


வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்தது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் கடந்த 312 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது. இந்நிலையில் நிதியாண்டு தொடக்கம் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31 ஆம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது

குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான வரி செலுத்த வேண்டிய நபர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட வரித்தொகையை செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி 31 ஆம் தேதியான இந்று வரை முன்கூட்டிய வரியை செலுத்தலாம். அதன் பிறகு வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டு தொடங்கிய பின்பு வேறு நிறுவனத்தில் பணியில் இணைந்திருந்தால் புதிய நிறுவனத்தில் 12பி படிவத்தை தாக்கல் செய்வது கட்டாயம். அந்தப் படிவம் பழைய நிறுவனத்தில் பெற்ற ஊதியம் தொடர்பான விவரத்தை கொண்டிருக்கும். அதனுடன் சேர்த்து புதிய ஊதியத்துக்கு ஏற்ப வரிப்பிடித்தம் செய்யப்படும். 12பி படிவத்தை புதிய நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் மூல வரிப்பிடித்தம் குறைவாக இருக்கும். ஆனால் வருமான வரிப்படிவம் தாக்கல் செய்கையில் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்துள்ள நபர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாமினி (வாரிசு) நபர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். யாரையும் நாமினியாக பரிந்துரைக்க விரும்பவில்லை எனால் அதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...