முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா

பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவும் மற்றும் 62-வது குருபூஜை விழாவும் அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி  நினைவிடத்தில் துடங்கியது.


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது செந்தப் பணத்தைக் கொடுத்து செய்து வழங்கிய தங்கத்தால் ஆன அங்கி அணிவிக்கப்பட்டது. நேற்று  லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இன்று தேவர் குருபூஜை அரசியல் விழா நாளை ஆன்மீக விழாவும் நடைபெறுகிறது.




பசும்பொன் தேவர் திருமகன் நினைவிடத்தில் இன்று காலை 9 மணிக்கு மாநில  அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன்,




மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்,




அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுகவின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன், காங்கிரஸ் மாநிலத் தலைவர், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன், நடிகர் சங்க விஷால், பாஜகவின் எச் ராஜா, சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதை யொட்டி, கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் பத்தாயிரம் காவலர்கள் வழிநெடுகிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், பசும்பொன் முதல் கமுதி வரை 90 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

அதே போல, காவலர்கள் உடையில் அணியக்கூடிய 600 கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
அது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். அதற்கு முன்னர் மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்தின் முடிசூடா மன்னர்கள் மற்றும் தளவாய் பிரதாணிகளான தியாக வேங்கை மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்” என தெரிவிக்கப்பட்ட நிலையில்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரை விருந்தினர் இல்லத்தில் தங்கிய அவர், இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.





அதனைத் தொடர்ந்து, பசும்பொன் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெண்ணென்றால் அன்னையையும் நாடென்றால் நன்றி உணர்வையும் வீடென்றால் நேர்மையையும் பேர்சொல்ல வாழ்ந்தவர், காமராஜரை அரசியலில் அறிமுகம் செய்தவர் நீங்கள் புகழ்ந்தாலும் வாய்த்திருக்கும் புகழுக்கும் பெருமையுடன் ஊழலுக்கு ஊமையாய் இல்லாமல் வாழ்ந்து வென்ற ஊர்போற்றும் உத்தமரை, கிழக்கே கீழக்கரையிலிருந்து மேற்கே விருதுநகர் சூலக் கரை வரையில் எனது எல்லை என்று கூறுவார்!. அவருடைய நாடாளுமன்ற சட்டமன்ற உரைகளைப் படித்தாலே அவரது விசாலமான பார்வை நன்றாகப் புலப்படும்! முழுவதும் இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவை.






நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தன்னகத்தே கொண்டவர்! வீரமும், விவேகமும், தெய்வீகமும், தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியவர். தென்னகத்தில் பிறந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் வங்காளத்தில் நட்பு வளர்த்து இந்திய தேசிய ராணுவத்தில் ஐக்கியமாகி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையனின் கனவிலும் கர்ஜித்த தேசியத் தலைவராய் மக்கள் நினைவுகளில் அழியாதிருக்கும்


பசும்பொன் தேவர் பெருமகனே உந்தன் ஒற்றைச் சொல்லுக்கு தென்னாடு கட்டுப் பட்டதே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் அமைப்பான அனைத்திந்திய பார்வார்டு பிளாக் ஆண்டு தோறும் விழா எடுத்து இப்போது அரசு விழாவாக நடக்கிறது, இந்நாளை தமிழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது அந்த அமைப்பு.


பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு,  மாவீரர்,ஜாதியச் சிந்தனை கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகி விடும்" "ஜாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வழிபடவே அருகதை அற்றவன்". -தெய்வத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நாளும் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்று அக்டோபர்-மாதம் 30 ஆம் தேதி ஜெயந்தி விழா.தேவரே தெய்வம். அவரை வணங்க செல்வதற்கு. ஒழுக்கமுடன் செல்லுங்கள் அதுதான் அவர் விரும்புவது. ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர்.





மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று,





ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தியில் அவரது தியாகத்தினையும் சேவையும் போற்றுவோம். என பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் எச் ராஜா குறிப்பிட்டுள்ளார். தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையம் மற்றும் பசும்பொன்னில் உள்ள,உ.முத்துராமலிங்க தேவரின் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்!  மற்ற செய்தி ஆசிரியர்கள் தற்போது உள்ள அரசியல் நிலை குறித்து என்ன சிந்தனை செய்கிறார்கள் ? இது எந்தத் திசையில் என்று கூற வர வேண்டும் ஆனால் அந்த ஆற்றல் இல்லாமல் இருக்கும் நிலை.

சரி நாம் அரசியலுக்கு வருவோம். திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் திராவிட இயக்கத் தலைவர்களை அறிஞர் சி என் அண்ணாதுரையை வைத்துத்  துண்டாடியது. 
தமிழ் தேசியக் கொள்கையில் ஈழ ஆதரவில் மாநில சுயாட்சியில் பெரும் எழுச்சி கொண்ட செல்வி  ஜெ.ஜெயலலிதா களத்திலிருந்தே நீக்கப்பட்டார்.



வி கே சசிகலா மற்றும் முனைவர் ம.நடராசன் தமிழீழ மற்றும் தமிழ் தேசிய எழுச்சியின் வடிவம் அவர் என்பதால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் தேசியம் எனது கண்கள் என்றதாலும் வீரத்தின் அடிப்படையில் அரசியலில் ஈடுபடுத்தப்பட்டதால் கர்மவீரர் கு.காமராஜர் மற்றும் திராவிட இயக்கங்களால் முக்குலத்தோர் குடிகள் அதிகாரத்தில் இல்லாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டார்கள். மிகப்பெரிய தென்மாவட்ட இரண்டு சமுதாயத்தின் ஒற்றுமை பறிபோனது இருவருக்கும் இழப்பு என்பதை உணராத பலர் இப்போது எதிர்காலச் சிந்தனை இல்லாமல் உள்ள சுயநலம் கொண்ட தலைவர்கள் தான் 
காரணம்.

தற்போது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் திமுகவும் தமிழ் தேசிய எழுச்சியில் இருந்து தமிழர்களை தமிழ் இளைஞர்களை பிளவுப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் இறக்கப்பட்டவரே நடிகர் விஜய் என்ற கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை களம் உணர்த்தும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...