முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநரிடம் ஆய்வியல் நிறைஞர் புகார் மனு

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நேற்று அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற போது ஆய்வியல் நிறைஞர்


மாணவர், பல்கலைக்கழகத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் மேடையில் புகாரளித்தார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 430 பேர் ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டமும், 90 பேர் தங்கப் பதக்கமும் என மொத்தம் 520 பேர் பட்டம் பெற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கோவி.செழியன் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றத் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளருமான ந.கலைச்செல்வி முதன்மை விருந்தினராகக் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார். பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன், ஆட்சிமன்றக் குழுவினர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



ஆய்வியல் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டம் வழங்கிக் கொண்டிருந்த போது, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த எஃப்.இஸ்ரேல் இன்பராஜ் எனும் மாணவர் பட்டம் பெற்றுக்கொண்டு, தனது சட்டை பையிலிருந்து ஒரு புகார் மனுவை எடுத்து ஆளுநர் ரவியிடம் வழங்கினார். இதை சற்றும் எதிர்பாராத ஆளுநரும் அந்த மனுவைப் பெற்று தனது உதவியாளரிடம் வழங்கினார். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து இஸ்ரேல் இன்பராஜ் தெரிவித்ததாவது: “நான் மனிதவள மேலாண்மைத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை படித்துள்ளேன். எனது பி.எச்டி ஆராய்ச்சி அனுமதிக் கடிதம் பெறவே சென்னையிலிருந்து 5 முறை வந்து சென்றேன். வழிகாட்டிப்படி தான் நான் எனது ஆராய்ச்சியை தொடங்கினேன். ஆனால் அதன் பின், பல்கலைக்கழகத்திலிருந்து சரியான வழிகாட்டுதல் இல்லை. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினர் மாணவர்களை மிகவும் துன்புறத்துகின்றனர். அவர்களுடைய தொல்லை தாங்க முடியாமல் மாணவர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். படித்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்களை அமர வைப்பது கூட இல்லை. காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க காக்க வைக்கின்றனர். மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. நிறைய மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவிதமான தொடர்பும் முறையாக இல்லை. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குக்கூட நாங்களே விண்ணப்பித்து, கேட்டறிந்து வரவேண்டியது உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை வெளியீடுகளை (பப்ளிகேஷன்) அச்சு இதழ்களில் (பிரின்டட் ஜர்னல்) வெளியிட வேண்டும். அதை வெளியிட்டால், “ஆன்லைனில் தான் வெளியிட வேண்டும், பிரின்டட் ஜர்னலில் வெளியிடக் கூடாது” என்கின்றனர். எனது வெளியீடுகளையும் நிராகரித்துள்ளனர். கேட்டால் “ஆன்லைனில் தான் வெளியிட வேண்டும்” என்றனர்.

    எனக் கேட்டால் சரியான பதில் இல்லை.

முனைவர் பட்டம் படிக்க நான்கு ஆண்டுகள் போதுமான நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு 6 முதல் 9 ஆண்டுகள் வரை ஆக்கப்படுகிறது. நான் எம்.ஃபில்., முடித்துள்ளதால் 3 ஆண்டுகள் போதுமான நிலையில், முனைவர் பட்டம் முடிக்க 6 ஆண்டுகள் ஆகிறது. எதற்காக இத்தனை ஆண்டுகள் ஆகிறது?

இதே முனைவர் பட்டத்தை வெளியில் விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் வாங்கினால் உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள். எங்கு தவறு நடக்கிறது? பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையினர் ஆராய்ச்சி மாணவர்களை வேண்டுமென்றே அலைக்கழிப்பதும், மனிதர்கள் போல் நடத்தாமல் அவமதிப்பதும் அதிகரித்துள்ளது.இது தொடர்பாக பலமுறை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், புகார் தெரிவித்தால் அந்த மாணவர் முனைவர் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் இதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. இந்த விவகாரம் ஆளுநரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மனு வழங்கினேன், என்று அவர் கூறினார்.

 


புரொட்டாகால்படி மாணவர்கள் பேனா உட்பட வேறு எந்தவித பொருட்களும் பட்டமளிப்பு விழா அரங்குக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. குறிப்பாக, பட்டம் பெறும் மாணவர்களை முன்கூட்டியே வரவழைத்து அவர்களை முழுமையாக பரிசோதித்த பிறகே விழா அரங்குக்குள் அனுமதிப்பர். அப்படி இருக்கையில் இஸ்ரேல் இன்பராஜ் மட்டும் மனுவை எப்படி எடுத்துச் சென்றார் என தெரியாமல் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.ஏற்கெனவே கோயம்புத்தூர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மணவர் பிரகாஷ் என்பவர், ஆய்வியல் படிப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...