வாஷிங்டனும் புது தில்லியும் உயர்மட்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால், இந்தப் பயணம் தனிப்பட்டதாகவே கருதப்படுகிறது. வான்ஸ் மற்றும் அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி, தங்களின் மூன்று குழந்தைகளுக்கும் தங்கள் இந்திய உறவு வழி வேர்களை அந்த விருதுகளுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள்.
நேற்று காலை 10.00 மணிக்கு புதுதில்லி வருகை தநங ஜே.டி வான்ஸ் குடும்பத்தாருடன் டில்லி அக்ஷர்தம் ஆலயத்தில் தரிசனம் செய்கிறார்கள். டில்லியிலிருந்து ஜெய்பூருக்கு இன்றிரவு செல்லும் ஜே.டி.வான்ஸ் அவரது குடும்பத்தினா், அங்கு அம்பா் கோட்டை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாா்வையிடுகின்றனர்.
ஆனால் வான்ஸ் தனியாகப் பயணம் செய்யவில்லை. அவருடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இருப்பார். துணைத் தலைவர் மற்றும் NSA இருவரும் இந்தியாவில் ஒன்றாக விமானத்தில் தரையிறங்கும்போது, நிகழ்ச்சி நிரல் வெறும் சுற்றுலாப் பயணங்களைப் பற்றியதல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல அறியலாம்.
இந்தப் பயணத்தின் நேரம் மற்ற எந்த நேரத்தை விடவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது. டிரம்ப் டேரிப்பினால் அமெரிக்காவும் சீனாவும் ஒரு முழுமையான வர்த்தகப் போரில் சிக்கியுள்ளன. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்ததும், சீனர்கள் பன்றி இறைச்சி உள்ளிட்டவைகளில் அமெரிக்காவை விடுத்து ஆஸ்திரேலியாவிடமிருந்து இறக்குமதி செய்து சொல்லும் செய்தி, இந்த வர்த்தக போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்பது தான். இரண்டு வல்லரசுகளுக்கிடையேயான ஒரு நீண்ட, காயங்கள் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பொருளாதாரப் போருக்கு தயாராகும் தருணத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இனி இதில் கேள்வி என்னவென்றால், யார் அதிக வலியைத் தாங்க முடியும் என்பதுதான்.
ஆனால் எங்கு இடையூறு இருக்கிறதோ, அங்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஆழமான பொருளாதார மறுசீரமைப்பின் தருணமாக இருக்கும் என்பது நமது நம்பிக்கை. ஏற்கனவே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளினால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை பல பொருளாதார ஆய்வு அறிஞர்களின் முந்தைய பதிவுகள் மூலம் பார்க்கலாம்.
இன்னொரு பதிவில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் டேரிப்பினால் இந்திய பொருளாதாரம் மேலும் ஓங்கும் என்கிற கூற்றிற்கு தடையாக உள்ளவற்றை நாம் பார்ப்போம்.
அற்புதமான புத்திசாலியான தேச பக்தர்களை நம்மை ஆள்பவர்களாக தேர்ந்தெடுத்தால் எனனதொரு நன்மை என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நல்லது நடக்கும்.
கருத்துகள்