முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டிடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்தும் கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை    கொரானோ பாதிப்பால் கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டுமானத்துறை அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்.
1. கட்டுமானம் நடைபெற்ற இடங்களில் இருப்பு வைத்திருக்கும் சிமெண்ட் கிட்டத்தட்ட வீணாகிவிடும். எனவே அதனை சிமெண்ட் தயாரிப்பு கம்பெனிகள் திரும்ப பெறவேண்டும். அல்லது மாற்று மூட்டைகள் மானிய விலையில் தர வேண்டும். 
2. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பராமரிப்பு வேலைகள் செய்துதான் வேலைகள் மீண்டும் துவங்கப்பட வேண்டும்.
வேலை ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் இதனால் வேலையாட்கள் ஊதியம் உயர வாய்ப்புகள் இருப்பதால், அது கட்டுமான ஒப்பந்த தொகையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கப்படும். எனவே கட்டுமான பொருட்களின் விலையை எக்காரணம் கொண்டும் நிறுவனங்கள் உயர்த்தக் கூடாது எனவும் கட்டுமான வேலை கூலியை  உயர்த்து கூடாது எனவும் அறிக்கை வெளியிட வேண்டும்.
3) கட்டிட கட்டுமான துறையை  மாநில அரசின்  அத்தியாவசிய பட்டியலில் இணைத்து வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் பொறியாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நல்வழி செய்திட வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத சமூகப் பிரச்சனைகளை தவிர்க்கவும் வேண்டுகிறேன்.
4) இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிட அனுமதி பெற்ற கட்டிட கட்டுமான  பணிகளின் கட்டிட கட்டுமான உரிமை கால அவகாசத்தை 6 அல்லது 12 மாதங்களுக்கு நீடித்து செய்யவேண்டியுள்ளது.
5)இந்த கொரானா சூழ்நிலையால் கட்டிட அனுமதிக்காக  தேங்கிநிற்கும் மற்றும் விதிமுறைகளின்படி சரியாக இருக்கும் கட்டிட கட்டுமான வரை படங்களுக்கு  விரைவாக அனுமதி தந்து வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டுகிறோம்.
6) குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்ப காலத்தில் அங்கே பொறியாளர்கள் சபை Engineering council அமைக்கப்பட்டு பல்வேறு புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் கட்டுமானத் துறையை காப்பாற்ற தமிழ்நாடு பொறியாளர்கள் சபை TamilNadu Civil Engineers Council உருவாக்க வேண்டியும் அதன் மூலம் எண்ணற்ற பொறியாளர்கள் மற்றும் அத்துறையை சார்ந்த அத்தனை தொழிலாளர்களுக்கும் ஒரு நிரந்திர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறோம்.
7. கட்டுமான துறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பெரும் பங்கு வகிப்பதால் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிட அனுமதி முறைகளை மாற்றியமைத்து, அனுமதி பெறுவது வேகமாகவும் அதே சமயம் எளிய முறையிலும் ஒற்றை சாளர முறையிலும் இருக்க ஆவணம் செய்ய வேண்டும்.
8. கட்டுமான பொருட்களுக்கு GST வரியை குறைக்க அல்லது ஒரே வரியை (5%) ஒப்புதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் (GST) சரக்கு மற்றும் சேவை வரி 18% சதவீதத்தில் இருந்து 9%  சதவீதமாக குறைக்க வேண்டும். அதாவது 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் வரி கட்ட மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
காலதாமதமாக கட்டும்பொழுது அபராதம் வசூலிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது. 
9. பொறியாளர்களுக்கு கட்டுமான முதலீடு செய்ய தேவையான வங்கி கடன் வசதி எளிய முறையில் செய்து தர வேண்டும். OD & CC எனப்படும்
மிகைப்பற்று மற்றும் பணக்கடன் மீதான  வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் அல்லது
வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். கட்டுமான பொறியியல் தொழில் செய்பவர்களுக்கு பொதுத்துறை, தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள் வங்கி மூலம் வட்டி இல்லாத கடன் 5 முதல் 15 லட்சம் வரை நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கவேண்டும்.
10. SSI & MSME எனப்படும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களில் தற்போது கட்டுமான ஒப்பந்ததாரர் பதிவு முறை இல்லாமல் உள்ளது எனவே உடனடியாக பதிவு செய்யும் முறையை கொண்டு உணர்ந்து கொண்டு வந்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள் இருக்கும் மத்திய அரசின் தொழில் வளர்ச்சிக்கான கடனுதவி ஆவணம் செய்ய வேண்டும்.
11. அனைத்து கட்டுமான தொழிலாளர்க்கு இலவச இன்சுரன்ஸ் வசதி செய்து தரப்பட வேண்டும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஒற்றை சாளர முறையில் நிகழ் நிலை பதிவு முறை செய்ய தளம் அமைக்கப்பட வேண்டும். (single window online registration).
12. அரசிடமிருந்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்யவேண்டும். பொதுத்துறை பணிகளை தரத்துடன் செய்ய எங்கள் அமைப்பின் பொறியாளர்கள் தயாராக உள்ளனர். எனவே அரசு சார்ந்த கட்டுமான வேலைகளில் 40% Tender  எங்களது மாநில கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்க பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். 
13. ஊரடங்கு துவங்கிய சமயத்தில் திடீரென்று நிறுத்தப்பட்ட‌ கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கபடும்போது
வெளியூர் சென்றிருக்கும் ஆட்களை
வரவழைப்பது மற்றும் கட்டுமானத்திற்கு
தேவையான அனைத்து பொருட்களையும்
வாங்குதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய 
வேண்டியுள்ளது. எனவே மே 3 க்கு பிறகு
தரப்படும் அனுமதி இவற்றை எல்லாம் செய்ய ஏதுவாக முழுமையானதாக
இருக்கவேண்டும்.
14) நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் கட்டுமானத் துறைக்கு,  கட்டுமானப் பொறியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி வழங்கி அரசு,  பொறியாளர் நலன் காக்க வேண்டும். தமிழக அரசில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் போல கட்டுமானத் துறைக்கு என்று தனியாக கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
15) நலிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டு அரசு அவர்களுக்கு பேரிடர் கால திட்டத்தின் கீழ் குடும்ப நல நிதி வழங்கி வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். 
மேற்கொண்ட காரணங்களால் கட்டுமான சமுதாயமே தனது வாழ்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டுமானர் பாதிக்கப்பட்டால் அவரை சார்ந்து வாழும் 50-100 குடும்பங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளிலும் கட்டுமான பொறியாளர்கள் நேரடியாக பாதிக்க படக்கூடிய காரணிகள், இவற்றையும் தாண்டி மறைமுக காரணிகளும் பல உள்ளன அவையும் கட்டுமானர்களை
அதிகமாகவே பாதிக்கும். எனவே தாங்கள் அமைக்கும் கொரானோ நிவாரன கமிட்டியில் எங்களது கூட்டமைப்பைச் சார்ந்த பொறியாளர்கள் பங்குபெற ஆவணம் செய்யவேண்டும். இது சம்பந்தமாக ஏதாவது அரசிற்கு உதவிகள் தேவைப்படின் எங்களது கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பினை எப்பொழுதும் அழைக்கலாம். நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட எந்நேரமும் தயாராக உள்ளோம்.என கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...