புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில்,
பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை
திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்) புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது.
புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில் ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பாக நடந்தது.
திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் குலதெய்வ வழிபாடு குடும்பத்தினர், பூஜைகளை நடத்தும் ஐந்து கரை குசலாகுடி குலாளர் வழி உறவினர்கள் குடும்பத்தினர், ஆலயத் திருப்பணிகள் செய்த. ஸ்தபதி K.மாரிமுத்து, மற்றும் பொறியாளர் பக்தகோடிகள் பொதுமக்கள் சான்றோர்களும் , ஆன்மீகப் பெருமக்கள், மற்றும் மாநிலத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மற்றும் பத்திரிகையாளர்கள் காவல்துறையினர் அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் அருளைப் பெற்றனர். டிரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது
அதற்கு முன்னோட்டமான யாக வேள்வி பூஜைகன் முறையே
ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதம் 15 ஆம் நாள் (29.06.2025). காலை மணி 9.00 முதல் 10.00 க்கும் மாலை மணி 4.00 முதல் 6.10 க்கும் மாலை மணி 6.10 முதல் 8.30 க்குள்ளும்
ஆனி மாதம் 16ஆம் நாள் (30.06.2025) திங்கட்கிழமை காலை மணி 8.00 பணி முதல் 11.00 வரையும், மாலை மணி 5.00 முதல் 8.30 க்குள்ளும்
ஆனி 17 ஆம் நாள் (01.07.2025) செவ்வாய்கிழமை காலை மணி 8.00 முதல் 11.30 க்குள்ளும் மாலை மணி 5.00க்கும் யாகசாலை நிகழ்ச்சிகள் முறையே உள்ள காலங்களின் படி
தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புண்யாகவாசணம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரியார் ரக்ஷாபந்தனம், எஜமான ரக்ஷாபந்தனம்
கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.
சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, |திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை. மூன்றாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.முதல் 8.30 க்குள்
ஆனி 18ம் நாள் (02.07.2025) புதன்கிழமை. காலை 6.00 மணி முதல் காலை 9.15 மணி. நான்காம் கால யாகபூஜை, சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை
ஐந்தாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, சுவாமிக்கு ரக்ஷாபந்தனம். லெட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம்
ஆறாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து மஹா அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் நடந்த நிலையில்
கும்பாபிஷேக யாகசாலை வேள்வி நிகழ்வு சிவாச்சாரியார் ஸர்வ ஸாதகம்: சிவஸ்ரீ S.சுவாமிநாத பண்டிதர் கோவனூர். நடத்தி வைத்தார் யாகசாலை பந்தல் C.வெள்ளைச்சாமி, செய்த நிலையில் மின் அலங்காரம் ஒலி, ஒளி ரேவதி சவுண்ட் சர்வீஸ், புதுக்கோட்டை செய்தனர், நாதஸ்வரம் மங்கள இசை : S.மணிமாறன் குழுவினர், திருக்கோகர்ணம். நடத்தினர்,
காலை 10.30 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது.
இரவு 7.00 மணிக்கு வாணவேடிக்கையும்
இரவு 8.00 மணியளவில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் பொன்னமராவதி கீரவாணி அழகு இளையராஜா மற்றும் திருக்களம்பூர் நெ. இரா. சந்திரன் நேர்முக வர்ணனையை சிறப்பாகச் செய்தனர் , காவல்துறையினர் பாதுகாப்புப்பு ஏற்பாடுகளை நன்கு செய்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மூன்று நாட்கள் ஆலயத் திடல் வளாகத்தில் பணி செய்தனர்
ஸ்ரீ ஐயனார் துதி: ஆனைமுகள் ஆறுமுகள் அம்பயன் ஞானகுருவானியை புன்னைடு பாரந்திரு மகனைக் காடரங்கா புதுவரன் பதியிற்றென்பர் காக்குங் களனி எல்லாங் கண்ணலொடு செந் நெல்மிகு கபிளைநாட்டில் சீராகும் வேட்கோவர் குலத்துடையார் பண்ணியத்தில் சிறத்தைமிக்கார் ஆயவர் தம்மூர்க்கு தேன்பார் அடப்பன் குளக்கரையில் அமைதியாக மேய உயர்சிங்கமுத்து ஐபனார் அர்ச்சுனன் அவதாரனப் அப்பாவைக் கண்டு தெரிசித்திடவே பலநல மடைந்தே வாழ்வார் சிங்கமுத்து அய்பனைக் காண்... ஸ்ரீ ஐயனார் மந்திரம்: ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய. பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக! ஓம் கிராமபாலாய வித்மஹே கிலேஸ நாஸாய தீமஹி. தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்
கருத்துகள்