முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில்,


பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை

திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது.


புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பாக நடந்தது. 




திருக்கோவில்  அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் குலதெய்வ வழிபாடு குடும்பத்தினர்,  பூஜைகளை நடத்தும் ஐந்து கரை குசலாகுடி குலாளர் வழி உறவினர்கள் குடும்பத்தினர், ஆலயத் திருப்பணிகள் செய்த. ஸ்தபதி K.மாரிமுத்து, மற்றும் பொறியாளர் பக்தகோடிகள் பொதுமக்கள் சான்றோர்களும் , ஆன்மீகப் பெருமக்கள், மற்றும் மாநிலத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி,  மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மற்றும் பத்திரிகையாளர்கள் காவல்துறையினர் அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் அருளைப் பெற்றனர். டிரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது 



அதற்கு முன்னோட்டமான யாக வேள்வி பூஜைகன் முறையே   

ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதம் 15 ஆம் நாள் (29.06.2025). காலை மணி 9.00 முதல் 10.00 க்கும் மாலை மணி 4.00 முதல் 6.10 க்கும் மாலை மணி 6.10 முதல் 8.30 க்குள்ளும்

ஆனி மாதம் 16ஆம் நாள் (30.06.2025) திங்கட்கிழமை காலை மணி 8.00 பணி முதல் 11.00 வரையும், மாலை மணி 5.00 முதல் 8.30 க்குள்ளும்

ஆனி 17 ஆம் நாள் (01.07.2025) செவ்வாய்கிழமை காலை மணி 8.00 முதல் 11.30 க்குள்ளும் மாலை மணி 5.00க்கும் யாகசாலை நிகழ்ச்சிகள் முறையே  உள்ள காலங்களின் படி  





தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புண்யாகவாசணம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரியார் ரக்ஷாபந்தனம், எஜமான ரக்ஷாபந்தனம்

கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.



சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, |திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை. மூன்றாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.முதல் 8.30 க்குள்

ஆனி 18ம் நாள் (02.07.2025) புதன்கிழமை. காலை 6.00 மணி முதல் காலை 9.15 மணி.  நான்காம் கால யாகபூஜை, சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை





ஐந்தாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி,  சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, சுவாமிக்கு ரக்ஷாபந்தனம். லெட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம்

ஆறாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று  காலை 9.30 மணிக்கு  மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது 

தொடர்ந்து மஹா அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் நடந்த நிலையில் 

கும்பாபிஷேக யாகசாலை வேள்வி நிகழ்வு சிவாச்சாரியார் ஸர்வ ஸாதகம்: சிவஸ்ரீ S.சுவாமிநாத பண்டிதர் கோவனூர். நடத்தி வைத்தார்  யாகசாலை பந்தல்  C.வெள்ளைச்சாமி, செய்த நிலையில் மின் அலங்காரம் ஒலி, ஒளி ரேவதி சவுண்ட் சர்வீஸ், புதுக்கோட்டை செய்தனர், நாதஸ்வரம் மங்கள இசை : S.மணிமாறன் குழுவினர், திருக்கோகர்ணம். நடத்தினர்,  



காலை 10.30 மணியளவில்  அன்னதானம் நடைபெற்றது. 

இரவு 7.00 மணிக்கு வாணவேடிக்கையும்

இரவு 8.00 மணியளவில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.       



கும்பாபிஷேக விழாவில் பொன்னமராவதி கீரவாணி அழகு இளையராஜா மற்றும் திருக்களம்பூர் நெ. இரா. சந்திரன் நேர்முக வர்ணனையை சிறப்பாகச் செய்தனர் , காவல்துறையினர் பாதுகாப்புப்பு ஏற்பாடுகளை நன்கு செய்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மூன்று நாட்கள் ஆலயத் திடல் வளாகத்தில் பணி செய்தனர்


ஸ்ரீ ஐயனார் துதி:                ஆனைமுகள் ஆறுமுகள் அம்பயன் ஞானகுருவானியை புன்னைடு பாரந்திரு மகனைக் காடரங்கா புதுவரன் பதியிற்றென்பர் காக்குங் களனி எல்லாங் கண்ணலொடு செந் நெல்மிகு கபிளைநாட்டில் சீராகும் வேட்கோவர் குலத்துடையார் பண்ணியத்தில் சிறத்தைமிக்கார் ஆயவர் தம்மூர்க்கு தேன்பார் அடப்பன் குளக்கரையில் அமைதியாக மேய உயர்சிங்கமுத்து ஐபனார் அர்ச்சுனன் அவதாரனப் அப்பாவைக் கண்டு தெரிசித்திடவே பலநல மடைந்தே வாழ்வார் சிங்கமுத்து அய்பனைக் காண்...       ஸ்ரீ ஐயனார் மந்திரம்:                           ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய. பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!    ஓம் கிராமபாலாய வித்மஹே கிலேஸ நாஸாய தீமஹி. தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...