முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய கல்விக்கொள்கை துரோணோச்சாரியாருக்கும் ஏகலைவனுக்குமான இடைவெளியா உண்மை என்ன

புதிய கல்வி கொள்கை மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தனது எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்தவும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலைப்பாடு இதில் மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல என முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையில் அதில் உள்ள பாதகம் குறித்த தகவல் தான் மக்கள் பயம் கொள்ளக் காரணமாக உள்ளன 3,5,8-ம் வகுப்புகளுக்கு உரிய ஆணையம் தேர்வு நடத்தும் என்பதும், 5 ஆம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்ற நிலையில் 3 ஆம் வகுப்பில் இருந்தே தனி ஆணையம் தேர்வு நடத்தும் என்பதுமாகும். இனி, கல்லூரிகளில் பி.எஸ்.சி, போன்ற இளங்கலை விஞ்ஞானப் படிப்புக்கு கூட என்.டி.ஏ. என்ற ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி அதன்மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளதாகவும் நுழைவுத் தேர்வே கூடாது- நீட் அறவே வேண்டாம் என்ற மக்கள் கருத்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் புதிய கல்வி முறையை திணிப்பது ஏழை மாணவர்களின் 12 ஆம் வகுப்பு பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்தும் நோக்கம் கொண்டதாகவும் பார்க்கும் நிலையுள்ளது. மாநில அரசுகளின் கருத்து என்ன என்பதுதான் மிக மிக முக்கியமாகும். கல்வி என்பது வெறும் மத்திய அரசை மட்டும் சார்ந்ததா மாநில அரசும், மத்திய அரசும் இணைந்த ஒத்திசைவுப் பட்டியலா என்ற விவாதம் தற்போது துவங்கியுள்ளது. அதற்கு பின்வரும் காரணமும் முன்வைக்கப்படுகிறது.புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது 43 பக்கக் கொள்கைப் பிரகடனமாகும் அது https://www.docdroid.net/n5FOFPh/2019-pdf கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறதென பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பும் என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை உற்றுநோக்கும் பலரும் மெக்காலேவுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை ஆராய்வது தான் தற்போது விவாதம் 1813ஆம் ஆண்டில் முதலாவதாக இந்திய மக்களின் கல்விப் பொறுப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு கல்வி சாசனம் ஆவணத்தை வெளியிட்டது. அதற்காக ரூபாய் ஒரு லட்சம் அன்றய மதிப்பில் ஒதுக்கப்பட்டதும், அதுவும் கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது தான் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தங்கள் கொள்கைக் கல்வி என ஆவணம் பகிரங்கமாக்கி அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் இதர தகுதி தேவையில்லைஎன்றானது. பிரிட்டிஷ் கல்வி த் தகுதியின் அடிப்படையில் தான் வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்துல் குறிப்பிடுகிறது. 1834 ஆம் ஆண்டில் மெக்காலே இந்தியாவுக்கு வந்து கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு உடன் ஆலோசித்து இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறையாகப் பெயரிட்டு, அவரைத் தலைவராக்க எண்ணம், அறிவு, கலாச்சாரம் மூன்றும் ஆங்கிலேயராகவும் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்தார் மெக்காலே, 267 பக்கங்கள் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்களித்தார். ஆங்கில மொழிக் கல்வியை முழுதும் வேலைக்கான தகுதி பெறும் கல்வியாக்கினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவது கூடத் தடை செய்து “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவை லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் அந்த வேலைக்கான கல்வி இது மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்றார் 1835 ஆம் ஆண்டில் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அதை அமல்படுத்திவிட்டார். ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டானது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி விமர்சித்ததும் உண்டு 1853 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக சார்லஸ் வுட் தலைமையில் கல்விக் குழு இந்தியா வந்து. 1854 ஆம் ஆண்டில் கர்சன் பிரபு முன் வைக்கப்பட்ட அறிக்கை தான் நம் கல்வி முறையிலிருக்கும் காலாண்டு, அரையாண்டு,முழு ஆண்டுத் தேர்வு முறை என்பதெல்லாம். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882 ஆம் ஆண்டில் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவான இந்தியக் கல்வி கமிஷன் கொண்டு வந்ததாகும். மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்தான் , சுதந்திரமடைந்த பின் இராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்தான், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தேவை அதில் மாறுபட்டது. அவ்வளவு தான் கடந்த 73 ஆண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்குப் பின் உருவான துரோணாச்சாரியார் ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண்டாடிய நிகழ்வாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்பதே இப்போது மொழிவாரி மாநில மக்கள் கவலை இக்கல்விக் கொள்கை இப்போது வரையப்பட்டுள்ளது. இனி சட்டமாகி வரும் போது தான் அது செயலாக்கம் புரியும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த