முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலிச்செய்திகளைக் கண்டறிய பெற்றோர் குழந்தைகளுக்கு உதவ துணைக் குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் – குடியரசுத் துணைத்தலைவர். இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கய்ய நாயுடு ஊடகங்களில் அதிலும் இன்றைய நாட்களில் புதிய ஊடகச் சூழலில் பரவி வரும் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். ”டைம்ஸ் ஸ்காலர்ஸ் ஈவண்ட்” என்ற நிகழ்ச்சியில் இன்று காணொளிக் காட்சி மூலம் 200 இளம் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய போது குடியரசுத் துணைத்தலைவர் உண்மையைப் பகுப்பாய்வு செய்து அதனை தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளவும் பொய்களைப் புறந்தள்ளவும் தேவையான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார். குழந்தைகளிடையே படிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் இன்று கட்டுப்பாடற்ற அளவில் தகவல்கள் கிடைக்கின்ற சூழலிலும் குழந்தைகள் புத்திசாலியான மற்றும் அறிவுக்கூர்மையுள்ள வாசகர்களாக மாறுவதற்கு கற்றுத்தர வேண்டிய தேவை உள்ளது என்று எடுத்துரைத்தார்.  ”நன்கு வாசிக்கும் ஒரு மாணவர் நிச்சயமாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பார்” என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போதைய கோவிட் பெருந்தொற்று கல்வியாண்டு அட்டவணையில் ஏற்படுத்தியுள்ள தடையானது பல மாணவர்களிடம் பதட்டத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டை மீறிய செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் உங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனையும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சமாளிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் உடல் உரத்தை மேம்படுத்துதல், மனநலத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளுதல், மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்காக மாணவர்கள் தொடர்ச்சியாக யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். தற்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நிலவுகின்ற கடுமையான போட்டி குறித்து சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், திறனை அடைவதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். வெற்றியை அடைய குறுக்குவழி ஏதும் இல்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். ”கல்வி என்பது மாணவர்களுக்கு தேவையான அறிவை மட்டும் வழங்குவதாக இல்லாமல் அவர்களை சிறந்த மனிதர்களாகவும் வளர்த்தெடுக்கும் வகையில் இருக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.  நமது பழங்காலக் கல்வி முறையானது ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் கருணை, நேர்மை, நாணயம், பணிவு, நன்றி பாராட்டல், மன்னித்தல், பெரியவர்களை மதித்தல் போன்ற மனித விழுமியங்களை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வறுமை, சமநிலையின்மை, வன்முறை மற்றும் பருவநிலை மாறுதல் என உலகம் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகளை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகத் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் இந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் புதிய தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தேசத்தந்தை வழங்கியுள்ள ஆற்றல் மிக்க கவசம் குறித்து மாணவர்களுக்கு நினைவூட்டிய திரு நாயுடு வாய்ப்பு குறைந்தவர்களுடைய நிலைமையை மாணவர்கள் எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பார்கள் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த