முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய முத்திரைத்தாள் திருத்தச் சட்டம் விதிகள் நாடு முழுவதும் அமலாக்கம்

நிதி அமைச்சகம். பங்குப் பத்திர முறைகளில் நாடு முழுக்க முத்திரைத் தாள் தீர்வையை வசூலிக்கும் சீரமைத்த நடைமுறைக்காக , இந்திய முத்திரைத்தாள் சட்டம் 1899-இல் திருத்தங்கள் மற்றும் விதிகளை 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்துதல். நிதிச் சட்டம் 2019-இன் மூலம் இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899-இல் கொண்டு வரப்பட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், 2020 மார்ச் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, நாளையில் இருந்து, அதாவது 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன. தொழில் செய்யும் சூழலை எளிதாக ஆக்குவதற்காகவும், அனைத்து மாநிலங்களிலும் பங்குப்பத்திரங்கள் மீதான முத்திரைத்தாள் தீர்வை ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்வதற்காகவும், அதன் மூலம் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பங்குப் பத்திர மார்க்கெட்டை உருவாக்குவதற்காக, மாநிலங்களுடன் உரிய ஆலோசனைகள் மற்றும் கலந்தாடல்களை செய்த பிறகு, மத்திய அரசு, இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899இல் உரிய திருத்தங்களைச் செய்து, அதன் கீழ் விதிமுறைகளை உருவாக்கியது. ஒரு பங்குப் பத்திர ஆவணத்தின் மீது ஒரு இடத்தில், ஒரு ஏஜென்சியால் (பங்குப் பரிவர்த்தனை மையம் அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட கிளியரிங் காப்ப்பரேசன் அல்லது கருவூலத் துறை) முத்திரைத்தாள் தீர்வையை மாநிலங்கள் வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும் நிறுவனம் சார்ந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் முத்திரைத் தாள் தீர்வையைப் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரம் வாங்குபவர் வாழும் மாநிலத்தின் அடிப்படையில் அது இருக்கும் வகையில் நடைமுறை அமைந்துள்ளது. இப்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே பத்திரத்துக்கு பங்குப் பரிவர்த்தனைகளில் பல இடங்களில் தீர்வைகள் வசூலிக்கப்படுவதால், அதிகார வரம்பு எல்லை சர்ச்சைகளும், பல முறை தீர்வை செலுத்தும் நிலையும் உருவாகி, பங்குப் பத்திர மார்க்கெட்டில் பரிவர்த்தனை செலவுகள் அதிகரிக்கின்றன. இதனால் மூலதனம் உருவாதல் பாதிக்கப்படுகிறது. நிதிச் சட்டம் 2019ல் இதற்கான அம்சங்கள் இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899-இல் இதற்கான அம்சங்கள் நிதிச் சட்டம் 2019இல் திருத்தப்பட்டன. மேலும், அதன் தொடர்ச்சியாக அதே சமயத்தில், 2019 டிசம்பர் 10 ஆம் தேதி, இந்திய முத்திரைத் தாள் (பங்குப் பரிவர்த்தனை மையங்கள், கிளியரிங் கார்ப்பரேசன்கள் மற்றும் கருவூலங்கள் மூலம் முத்திரைத் தாள் தீர்வை வசூல் செய்தல்) விதிகள் 2019 திருத்தப்பட்டன. இவை 2020 ஜனவரி 9 ஆம் தேதி அமலுக்கு வருவதாக இருந்தது. 2020 ஜனவரி 8 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, இந்தத் தேதி 2020 ஏப்ரல் 1 என மாற்றப்பட்டது. மேலும், இதில் தொடர்புடையவர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவும், கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுக்க முடக்கநிலை அமலுக்கு வந்ததாலும், மற்ற துறைகளில் அளிக்கப்பட்ட சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை ஒத்திசைவுகளில் அளிக்கப்பட்ட சலுகைகள் காரணமாகவும், இந்திய முத்திரைத் தாள் சட்டம், 1899இல் நிதிச் சட்டம் 2019இன் படி கொண்டு வரப்பட்டத் திருத்தங்களை அமல் செய்வதற்கான தேதி, 2020 மார்ச் 30 தேதியிட்ட அறிவிக்கையின்படி 2020 ஜூலை 1 என மாற்றப்பட்டது. எதிர்பார்க்கப்படும் தாக்கம் சீர் செய்யப்பட்ட நடைமுறையின் மூலம் மையமாக்கப்பட்ட தீர்வை வசூல் நடைமுறையால், வசூல் செய்வதற்கான செலவு குறைந்தபட்ச அளவில் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன், வருவாய்ப் பெருக்கம் அதிகரிக்க உதவுவதாகவும் இருக்கும். மேலும், நாடு முழுக்க பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு வர்த்தகப் பழங்கங்கள் மேம்பட்டு, மாநிலங்களில் அளவில் சமச்சீரான வளர்ச்சி கிடைக்கவும் உதவியாக இருக்கும். சிறப்பு அம்சங்கள் முத்திரைத் தீர்வை விகிதங்களைச் சீராக்குவதற்காக, செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் பின்வரும் அமைப்பு முறை சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது: - விற்பனை, பரிமாற்றம் மற்றும் பங்குப்பத்திரம் வெளியிடுதலுக்கான முத்திரைத் தாள் தீர்வை மாநில அரசு சார்பில், வசூல் ஏஜென்ட்களால் வசூலிக்கப்படும். அந்த ஏஜென்சிகள் அந்த முத்திரைத் தீர்வையை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கணக்கில் செலுத்திவிடும். பல முறை வரிக்கு உட்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு, அடுத்த நிலையில் பரிவர்த்தனை செய்யும் போது, முத்திரைத் தீர்வை வசூலிக்கும் அத்தாட்சி பெற்ற கருவூலம் / பங்குப் பரிவர்த்தனை மையம் மூலம் மாநிலங்கள் முத்திரை தீர்வை எதையும் வசூலிக்கக் கூடாது. இப்போதைய நடைமுறையின்படி, வாங்குபவர் மற்றும் விற்பவர் என இரு தரப்பினருமே முத்திரைத்  தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. புதிய நடைமுறையின்படி ஒரு தரப்பில் மட்டுமே (வாங்குபவர் அல்லது விற்பவர், ஆனால் இருவரும் அல்ல, வாங்குபவர் மற்றும் விற்பவர் என இரு தரப்பினரும் சம பங்கு செலுத்தும் சில குறிப்பிட்ட ஆவணப் பரிமாற்றம் தவிர்த்த விஷயங்களில்). பங்குப் பரிவர்த்தனை மையங்கள் அல்லது அத்தாட்சி பெற்ற கிளியரிங் கார்ப்பரேசன்கள் மற்றும் கருவூலங்கள் இதற்கான வசூல் ஏஜென்ட்களாக இருக்கும். பரிவர்த்தனை சார்ந்த அனைத்து இரண்டாம் நிலை பத்திரப் பரிவர்த்தனைகளுக்கும், பங்குப் பரிவர்த்தனை மையங்கள் முத்திரைத் தீர்வையை வசூலிக்கலாம்; மார்க்கெட் அல்லாத முறையிலான பரிவர்த்தனைகளுக்கு (வர்த்தக தரப்பாரால் தெரிவிக்கப்படும் அனுசரணைகளின்படி செய்யப்படுபவை) மற்றும் டிமேட் படிவத்தில் நடைபெறும் ஆரம்ப நிலை பங்குப் பத்திரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றுக்கு கருவூலங்கள் முத்திரை தீர்வையை வசூலிக்கும். ஆர்.பி.ஐ.யின் அதிகார வரம்புக்கு உள்பட்டு கிளியரிங் கார்ப்பரேசன் ஆஃப் இ்தியா லிமிடெட் (CCIL) மற்றும் வெளியீடுகளுக்கான பதிவாளர்கள் மற்றும் / அல்லது பங்கு பரிமாற்ற ஏஜென்ட்களை (RTI/STA-கள்)  வசூல் ஏஜென்ட்களாக செயல்பட மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது. OTC வகையிலான பரிவர்த்தனைகள் சி.சி.ஐ.எல்.-க்கு தெரிவிக்கப்படுதல் மற்றும் பரஸ்பர நிதிகளில் டிமேட் அல்லாத, RTI/STA-களால் கையாளப்படும் பரிவர்த்தனைகளை முத்திரைத் தீர்வை செலுத்தும் வரம்பிற்குள் கொண்டு வந்து, தரகுக் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்பது இதனுடைய நோக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதம் முடிந்த அடுத்த 3 வாரங்களில் வசூல் ஏஜென்ட்கள், வசூலித்த முத்திரைத் தீர்வையை, அதை வாங்கியவர் வாழும் மாநிலத்தின் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாங்கியவர் இந்தியாவுக்கு வெளியில் வாழ்பவராக இருந்தால், அவருடைய வர்த்தக உறுப்பினர் அல்லது புரோக்கரின் பதிவு செய்த அலுவலகம் உள்ள மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். வாங்கியவருக்கு வர்த்தக உறுப்பினர் யாரும் இல்லாவிட்டால், பங்கேற்பாளரின் பதிவு அலுவலகம் உள்ள மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசு இந்திய ரிசர்வ் வங்கியில் அல்லது ஏதேனும் ஒரு வணிக வங்கியில் வைத்துள்ள கணக்கில், இந்த முத்திரைத் தீர்வையை வசூல் ஏஜென்ட் செலுத்த வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி அல்லது சம்பந்தப்பட்ட வங்கி இந்தத் தகவல்களை வசூல் ஏஜென்ட்களுக்கு தெரிவித்திருக்கும். மாநில அரசு சார்பாக முத்திரைத் தீர்வை வசூலித்தத் தொகையை அந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கு முன்பு, சேவைக் கட்டணங்களுக்காக 0.2 சதவீதத்தை வசூல் ஏஜென்ட்கள் கழித்துக் கொள்ளலாம். பல பிரிவுகளுக்கு, தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மூலதன உருவாக்கல் மற்றும் கார்ப்பரேட் பத்திர மார்க்கெட் ஊக்குவிப்புக்காக பங்கு/ கடனீட்டுப் பத்திரங்கள் வெளியிடுதல் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் பரிமாற்றம் (மறு வெளியிடுதல் உள்பட) செய்வதற்கான தீர்வை குறைவாக உள்ளது. ரொக்கப் பிரிவு வர்த்தகத்தில் (டெலிவரி மற்றும் டெலிவரி அல்லாத பரிவர்த்தனைகள்) மற்றும் ஆப்சன்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் ஒரு தரப்பாருக்கு மட்டுமே கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த அளவில் வரி குறைந்துள்ளது என்று கூறலாம். சில அடிப்படை புள்ளிகள் வித்தியாசத்துடன் நடைபெறும் பத்திரங்கள் இரண்டாம் நிலை மார்க்கெட் பரிமாற்றத்தில், வட்டி விகிதம்/ கரன்சி கடனீட்டுப் பத்திரங்கள் அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்றவற்றுக்கு இப்போது உள்ளதை விட மிக குறைவான தீர்வையே விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்துள்ள `கார்ப்பரேட் பத்திரங்கள் மீதான ரெப்போ' பொருத்த வரையில், மிகவும் குறைவான தீர்வை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில் உள்ள அரசு பங்குப் பத்திரங்களுக்கான ரெப்போவுக்கு தீர்வை இல்லை என்பதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் பிரிவு 18இன் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவைகள் மையம் எதன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட கருவூலங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை மையங்களில் நடைபெறும் பத்திரங்களின் பரிவர்த்தனைகளுக்கு முத்திரைத் தீர்வை எதுவும் விதிக்கப்படாது. பங்குப் பத்திரம் வெளியிடுதல் அல்லது மறு வெளியிடுதல் அல்லது விற்பனை அல்லது பரிமாற்றம் ஆகியவை பங்குப் பரிவர்த்தனை மையங்கள் மற்றும் கருவூலங்களுக்கு வெளியே நடைபெறும் போது, தரகுக் கட்டணம் தவிர்க்கப் படுகிறது. பங்குப் பத்திரங்களில் டெலிவரி அடிப்படையிலான பரிவர்த்தனைகளாக பரஸ்பர நிதிகள் இருப்பதால், பல்வேறு மாநில சட்டங்களின் கீழ் தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. எனவே அனைத்து பரஸ்பர நிதிகளின் பரிவர்த்தனைகளும் முத்திரை தீர்வைக்கு உள்பட்டவையாக உள்ளன. புதிய நடைமுறையின்படி, அனைத்து மாநிலங்களிலும் கட்டணங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்யப்பட்டு, தீர்வை வசூலிக்கும் நடைமுறையை சீராக்குவது என்ற மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துக்கான தயார்நிலை பொருளாதாரத்தில்  பங்குச் சந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதால், நோய்த் தொற்று சூழ்நிலையில் கடுமையான முடக்கநிலைக் காலக்கட்டத்திலும், பங்குச் சந்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. முத்திரைத் தாள் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் கட்டண விகிதங்கள் 2019 பிப்ரவரியில் (நிதிச் சட்டம் 2019 அறிவிக்கை செய்யப்பட்டதில்) இருந்து பொது மக்கள் பார்வையில் உள்ளன. இதற்காக தயார் செய்ய மார்க்கெட்டுக்கு போதிய கால அவகாசம் இருந்தது. பங்குப் பரிவர்த்தனை மையங்கள், கிளியரிங் கார்ப்பரேசன்கள், கருவூலங்கள், சி.சி.ஐ.எல். மற்றும் RTI/STA-களில் செயல்பாட்டு முறைமைகள் அனைத்தும், இந்த மாற்றங்களை 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதற்கு முழு தயார் நிலையில் உள்ளன. இந்தத் திட்டம் 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து எளிதாக அமல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு, குறிப்பிட்ட விஷயங்களில் விளக்க சுற்றறிக்கைகள் / செயல்பாட்டு வழிகாட்டுதல்களை அளிக்க இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899இன் கீழ் ஒழுங்காற்றும் நிறுவனங்களுக்கு  (RBI & SEBI)  மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்