முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் தேர்வில் நடக்கும் அரசியல் மக்களே ஏமாளிகள்

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வான நீட் ரத்து செய்யக் கோரி போராடுவதற்கோ, அதை எதிர்த்துப் பேசுவதற்கோ திமுக நிலை சரி இல்லை... இது முழுக்க மக்களை பழைய விபரம் மறக்க திமுக முடிவெடுத்துவிட்டதைத் தான் காட்டுகிறது. இதை நாம் நம்பினால் நம்மை போன்ற. அறிவிலிகள் உலகில் எவரும் இல்லை காரணம் முதலாவது நீட் தேர்வை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான திமுக வல்லாதிக்கம் செலுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 21.10.2010 தேதியிட்ட அரசிதழ் அறிவிக்கை பார்த்தால் தெரியும். இரண்டாவதாக 15.02.2012 தேதியிட்ட திருத்தம் செய்யப்பட்ட அரசிதழும் அறிவிக்கை உள்ளது எங்கே இவர்கள் மாநில உரிமையை வென்றெடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் ஆனால் அன்றே இதை எதிர்த்தவர் முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா தான். உச்சநீதிமன்றத்தில் இது சம்மந்தமாக பல வழக்குகள் நடந்து (குறிப்பாக அதிமுக அரசு போட்ட வழக்கும்)இந்த ஆணையை ரத்து செய்தது. விடாமல் மீண்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு. அது சரி பரவாயில்லை ஆட்சி அதிகாரத்தில் மக்களையும் மாநில உரிமையையும் காக்கும் நிலையய உருவாக்கி வைத்திருக்கலாம். விட்டு விட்டது. மூன்றாவதாக 19.07.2016 அன்று நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் அவசர மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) மசோதா-2016 மக்களவையில் விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்படுகிறது. மசோதாவை எதிர்த்து அதிமுக வினர் வெளிநடப்பு செய்தார்கள். தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர்கள் யாரும் மக்களவை உறுப்பினர்களாக இல்லாததால் தங்களது கருத்தைச் சொல்ல வாய்ப்பில்லை தான் 01.08.2016 அன்று மாநிலங்களவையில் விவாதித்திற்கு வந்த போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது எழு வினா? மூன்று உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டாரா? இல்லையா? அப்போது அங்கே சசிகலா புஷ்பா விவகாரம் நடந்த காலம் தி.மு.க.வின் மற்றொரு உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் நீட் மசோதாவை எதிர்த்து குரல் தந்தாரா சசிகலா புஷ்பா விவகாரத்தில் திருச்சி சிவாவிற்கு முட்டுக்குடுக்க முயன்றதால், மசோதாவிற்கு சம்பந்தமில்லாமல் பேச முயன்றதற்காக அனுமதி மறுக்கப்பட்டதென தகவல் உண்டு இவர்கள் தரப்பு வாதத்தை முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை? Point of order ஏன் கொண்டு வரவில்லை? அடுத்து மசோதா மீது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. கனிமொழி கூறியதாவது "There are a lot of problems with these medical colleges. We don't have enough medical colleges and there is a problem of capitation and management fee and it is very high." இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவரே கொடுத்துள்ளார். இதை அவர் இப்போது மறுப்பாரா? என்பது வினா. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதாவது தனது எதிர்ப்பை பதிவு செய்ய தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் வெளிநடப்புச் செய்யவில்லை? வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. சரி பரவாயில்லை. எதிர்ப்பை பதிவு செய்ய குரல் வாக்கெடுப்புக்கு எதிராக Division ஏன் கோரவில்லை என்பதும் Division கோரி சட்ட மசோதாவுக்கு எதிராகப் பதிவு செய்திருக்கலாம். இந்த விதி இவர்களுக்குத் தெரியும். நீட் தேர்வை அறிமுகமும் செய்துவிட்டு, மறு ஆய்வு மனு போட்டு நீதிமன்றத்திலும் வாதாடிவிட்டு, பாராளுமன்றத்தின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளின் போதும் மெளனமாகி விட்டு இன்று மாணவர்கள் சாகிறார்கள், நீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றஅரசியல் செய்து கொண்டிருக்க ஒருவேளை இவர்கள் உண்மையில் எதிர்க்க விரும்பினால் மீத்தேன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் மன்னித்து விடுங்கள் என அறிவிலித்தனமா சொன்ன மாதிரி, நீட் விவகாரத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸோடு இணைந்து தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் என மக்கள் முன் மன்னிப்பு கேட்டாலாவது ஒரு தார்மீக உரிமையாவது இருக்கும் இவர்களுக்கு இதை எதிர்த்து பேச முடிகிறது கேட்கும் மக்களுக்கு மறதி அதிகம் என்ற நம்பிக்கையில் இவர்கள் நாடகம் இது .நீட் தேர்வு என்பது மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனத்தின் கொள்கை முடிவு . அதை நிறுத்த நமக்கு (மாநில அரசுக்கு) அதிகாரம் கிடையாது . ஆனால் அந்தத் தேர்வு இந்தியிலோ ஆங்கிலத்திலோ மட்டுமில்லாமல் தமிழிலும் இருக்க வேண்டும் என்று நம் மாணவர்களுக்கு சாதகமான முடிவெடுத்து வென்றது அதிமுக அரசு தான் . நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகவாக இருந்தாலும், அந்த தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டுமென்ற உத்தரவில் கையெழுத்திட்டதும் திமுக தான் . அதிமுக நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்த போதும் உச்சநீதிமன்றம் போய் போராடித் தோற்றாலும் தோற்றதில் ஒரு வெற்றியாக தேர்வை தமிழில் எழுதலாம் என்று மாற்றியது. அதைத் தான் மாற்றி சட்டத்தினால் நம் மாணவர்களுக்கு என்ன , எந்தளவிற்குப் பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு தேர்வை தமிழில் எழுத சுலபமாக்கியது அதிமுக அரசு தான் . நன்றி அய்யா காகம் கூட தன் தாகத்தை போக்கிக் கொள்ள தண்ணீர்க் குழாயைத் திறக்கும் காலம் இது. நாடோடி மக்கள் கூட Smartphone பயன்படுத்துவது பரவலாகக் காண முடிகிறது. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் IAS/IPS தேர்வில் வெற்றி பெறுவது கூட சாதாரணமாகி விட்டது. தற்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏழைகள் பணக்காரர்கள், கிராமப்புறம், நகர்ப்புறம். என எல்லோருக்குமே வாய்ப்பு சமமானதாகத் தான் இருக்கிறது. எதிலும் கஷ்டமும், தோல்வியும் உண்டு நமது கல்வியில் நான்கு விதம் உண்டு முதலாவது தாய் மொழிக் கல்வி சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் அடுக்தது ஆங்கிலம், தமிழ் இரண்டும் பயிலும் மெட்ரிக் கல்வி அடுத்து மத்திய கல்வி வாரியம் மூன்று மொழி சி பி எஸ் சி கல்வி, அடுத்தது உலகக் கல்வி முறை இதில் தான் வேறுபாடு களைவது முக்கியம் ஒரே தேர்வு ஒரே கல்வி முறைக்குச் சரி அது நான்கு கலவி முறைக்குச் சரியா என்பது தான் சாமாணியர்கள் நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்