முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் தேர்வில் நடக்கும் அரசியல் மக்களே ஏமாளிகள்

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வான நீட் ரத்து செய்யக் கோரி போராடுவதற்கோ, அதை எதிர்த்துப் பேசுவதற்கோ திமுக நிலை சரி இல்லை... இது முழுக்க மக்களை பழைய விபரம் மறக்க திமுக முடிவெடுத்துவிட்டதைத் தான் காட்டுகிறது. இதை நாம் நம்பினால் நம்மை போன்ற. அறிவிலிகள் உலகில் எவரும் இல்லை காரணம் முதலாவது நீட் தேர்வை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான திமுக வல்லாதிக்கம் செலுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 21.10.2010 தேதியிட்ட அரசிதழ் அறிவிக்கை பார்த்தால் தெரியும். இரண்டாவதாக 15.02.2012 தேதியிட்ட திருத்தம் செய்யப்பட்ட அரசிதழும் அறிவிக்கை உள்ளது எங்கே இவர்கள் மாநில உரிமையை வென்றெடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் ஆனால் அன்றே இதை எதிர்த்தவர் முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா தான். உச்சநீதிமன்றத்தில் இது சம்மந்தமாக பல வழக்குகள் நடந்து (குறிப்பாக அதிமுக அரசு போட்ட வழக்கும்)இந்த ஆணையை ரத்து செய்தது. விடாமல் மீண்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு. அது சரி பரவாயில்லை ஆட்சி அதிகாரத்தில் மக்களையும் மாநில உரிமையையும் காக்கும் நிலையய உருவாக்கி வைத்திருக்கலாம். விட்டு விட்டது. மூன்றாவதாக 19.07.2016 அன்று நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் அவசர மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) மசோதா-2016 மக்களவையில் விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்படுகிறது. மசோதாவை எதிர்த்து அதிமுக வினர் வெளிநடப்பு செய்தார்கள். தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர்கள் யாரும் மக்களவை உறுப்பினர்களாக இல்லாததால் தங்களது கருத்தைச் சொல்ல வாய்ப்பில்லை தான் 01.08.2016 அன்று மாநிலங்களவையில் விவாதித்திற்கு வந்த போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது எழு வினா? மூன்று உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டாரா? இல்லையா? அப்போது அங்கே சசிகலா புஷ்பா விவகாரம் நடந்த காலம் தி.மு.க.வின் மற்றொரு உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் நீட் மசோதாவை எதிர்த்து குரல் தந்தாரா சசிகலா புஷ்பா விவகாரத்தில் திருச்சி சிவாவிற்கு முட்டுக்குடுக்க முயன்றதால், மசோதாவிற்கு சம்பந்தமில்லாமல் பேச முயன்றதற்காக அனுமதி மறுக்கப்பட்டதென தகவல் உண்டு இவர்கள் தரப்பு வாதத்தை முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை? Point of order ஏன் கொண்டு வரவில்லை? அடுத்து மசோதா மீது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. கனிமொழி கூறியதாவது "There are a lot of problems with these medical colleges. We don't have enough medical colleges and there is a problem of capitation and management fee and it is very high." இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவரே கொடுத்துள்ளார். இதை அவர் இப்போது மறுப்பாரா? என்பது வினா. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதாவது தனது எதிர்ப்பை பதிவு செய்ய தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் வெளிநடப்புச் செய்யவில்லை? வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. சரி பரவாயில்லை. எதிர்ப்பை பதிவு செய்ய குரல் வாக்கெடுப்புக்கு எதிராக Division ஏன் கோரவில்லை என்பதும் Division கோரி சட்ட மசோதாவுக்கு எதிராகப் பதிவு செய்திருக்கலாம். இந்த விதி இவர்களுக்குத் தெரியும். நீட் தேர்வை அறிமுகமும் செய்துவிட்டு, மறு ஆய்வு மனு போட்டு நீதிமன்றத்திலும் வாதாடிவிட்டு, பாராளுமன்றத்தின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளின் போதும் மெளனமாகி விட்டு இன்று மாணவர்கள் சாகிறார்கள், நீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றஅரசியல் செய்து கொண்டிருக்க ஒருவேளை இவர்கள் உண்மையில் எதிர்க்க விரும்பினால் மீத்தேன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் மன்னித்து விடுங்கள் என அறிவிலித்தனமா சொன்ன மாதிரி, நீட் விவகாரத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸோடு இணைந்து தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் என மக்கள் முன் மன்னிப்பு கேட்டாலாவது ஒரு தார்மீக உரிமையாவது இருக்கும் இவர்களுக்கு இதை எதிர்த்து பேச முடிகிறது கேட்கும் மக்களுக்கு மறதி அதிகம் என்ற நம்பிக்கையில் இவர்கள் நாடகம் இது .நீட் தேர்வு என்பது மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனத்தின் கொள்கை முடிவு . அதை நிறுத்த நமக்கு (மாநில அரசுக்கு) அதிகாரம் கிடையாது . ஆனால் அந்தத் தேர்வு இந்தியிலோ ஆங்கிலத்திலோ மட்டுமில்லாமல் தமிழிலும் இருக்க வேண்டும் என்று நம் மாணவர்களுக்கு சாதகமான முடிவெடுத்து வென்றது அதிமுக அரசு தான் . நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகவாக இருந்தாலும், அந்த தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டுமென்ற உத்தரவில் கையெழுத்திட்டதும் திமுக தான் . அதிமுக நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்த போதும் உச்சநீதிமன்றம் போய் போராடித் தோற்றாலும் தோற்றதில் ஒரு வெற்றியாக தேர்வை தமிழில் எழுதலாம் என்று மாற்றியது. அதைத் தான் மாற்றி சட்டத்தினால் நம் மாணவர்களுக்கு என்ன , எந்தளவிற்குப் பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு தேர்வை தமிழில் எழுத சுலபமாக்கியது அதிமுக அரசு தான் . நன்றி அய்யா காகம் கூட தன் தாகத்தை போக்கிக் கொள்ள தண்ணீர்க் குழாயைத் திறக்கும் காலம் இது. நாடோடி மக்கள் கூட Smartphone பயன்படுத்துவது பரவலாகக் காண முடிகிறது. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் IAS/IPS தேர்வில் வெற்றி பெறுவது கூட சாதாரணமாகி விட்டது. தற்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏழைகள் பணக்காரர்கள், கிராமப்புறம், நகர்ப்புறம். என எல்லோருக்குமே வாய்ப்பு சமமானதாகத் தான் இருக்கிறது. எதிலும் கஷ்டமும், தோல்வியும் உண்டு நமது கல்வியில் நான்கு விதம் உண்டு முதலாவது தாய் மொழிக் கல்வி சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் அடுக்தது ஆங்கிலம், தமிழ் இரண்டும் பயிலும் மெட்ரிக் கல்வி அடுத்து மத்திய கல்வி வாரியம் மூன்று மொழி சி பி எஸ் சி கல்வி, அடுத்தது உலகக் கல்வி முறை இதில் தான் வேறுபாடு களைவது முக்கியம் ஒரே தேர்வு ஒரே கல்வி முறைக்குச் சரி அது நான்கு கலவி முறைக்குச் சரியா என்பது தான் சாமாணியர்கள் நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...