முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பாக நடந்த மைசூர் நவராத்திரி தசரா விழாவில்‌ அரசர் காட்சியளிக்கும் வைபவம்

வாடியார் எனும் உடையார் அரச மரபில் யதுராய உடையார் என்பவர் பொது ஆண்டு 1399 ல் நிறுவினார். உடையார் அரச குலத்தினர் 1399 முதல் 1761 முடிய, பின் 1799 முதல் 1947 முடிய மைசூர் இராச்சியத்தை ஆண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகாவில் இணைக்கப்பட்டது புராணத்தின் படி, உடையார்கள் தங்கள் வம்சாவளியை பகவான் கிருஷ்ணனின் யது குலம் அல்லது யாதவர் எனக் கூறிக்கொள்கின்றனர். வரலாற்றாசிரியர்களான ஷியாம் பிரசாத், நோபுஹிரோ ஓட்டா, டேவிட் லீமிங், ஆயா இகேகேம் ஆகியோர் உடையார்கள் உள்ளூர் நிலப் பிரபுக்கள் எனக் கூறுகின்றனர், அவர்கள் புராணத்தின்படி தங்களை புகழ்பெற்ற சந்திர வம்சத்தின் நேரடி சந்ததியினர் என்று கூறிக்கொள்ளவதுடன் துவாரகையிலிருந்து வந்து இவ்விடத்தின் இயற்கை அழகைக் கண்டு மைசூரிலேயே தங்குமிடமாக மாற்றிக் கொண்டனர்.  1399 ஆம் ஆண்டில் யதுராயர் நிறுவி 1423 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மைசூர் இராச்சியத்தை 1423 முடிய ஆண்டார். யதுராய உடையாருக்குப் பிறகு, மைசூர் இராச்சியம் உடையார் ஆட்சியாளர்களால் பல வெற்றிகளைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் மிகவும் சிறியதாக இருந்து விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன யதுராயருக்குப் பின்வந்த உடையார் வம்ச மன்னர்கள் 1565 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே மைசூர் பகுதியை 600 ஆண்டுகள் ஆண்டனர்.1565 க்குப் பின் மைசூர் தன்னாட்சி உரிமையுடன் 1799 வரை ஆண்டனர். மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1799-1868) ஆட்சியின் போது, இப்பகுதி பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவரது வாரிசுகள் தங்கள் அரச பெயரின் ஆங்கில எழுத்துப்பிழையை வாடியார் என்பதை, பகதூர் என்று மாற்றிக் கொண்டனர். வம்சத்தின் கடைசி இரண்டு மன்னர்கள், நான்காம் கிருட்டிணராச உடையார் மற்றும் ஜெயச்சாமராஜா உடையார், பிரிட்டிஸ் மேலாதிக்க அரசாட்சியை ஏற்றுக்கொண்டனர். கன்னட மொழியில் உடையார் என்பது தலைவர் அல்லது "இறைவன்" எனப் பொருள். அரச வம்சத்தின் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது வோடியார் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன; இது நவீன கன்னட ஒலிபெயர்ப்பில், ″ஒடியார் என்றும் பயன்படுத்தப்படுகிறது1565 ல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் முதலாம் இராச உடையார் (1578-1617) மைசூர் இராச்சியத்தின் எல்லைகளை விரிவுப் படுத்தினார். 1610 ல் தலைநகரை மைசூரிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் காவேரி ஆற்றுத் தீவுப் பகுதியான ஸ்ரீஇரங்கப்பட்டணத்திற்கு மாற்றினார். முதலாம் நரசராச உடையார் (1638-1659) ஆட்சிக் காலத்தில் மைசூர்  திருச்சிராப்பள்ளி வரை விரிவு படுத்தப்பட்டது. சிக்க தேவராச உடையார் (1673-1704) ஆட்சிக் காலத்தில் மைசூர் உச்ச கட்டத்தை அடைந்து. நாட்டின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். நிர்வாகம் 18 துறைகளின் கீழ் கொண்டு வந்து பொருத்தமான வரி விதிப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டது. 1760 முதல் 1799 முடிய மைசூர் இராஜிய அரசாட்சி, தலைமைப் படைத்தளபதி ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் கைக்குச் சென்றது. இவர்கள் பிரிட்டிஸ் கிழக்கிந்தியப் பேரரசை எதிர்த்தனர். 1799 ல் ஸ்ரீஇரங்கப்பட்டினத்துப் போரில், பிரித்தானியர்கள் திப்பு சுல்தானைக் கொன்று, உடையார் வம்ச மன்னர்களிடம் மைசூர் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1796-1868) காலத்தில், உடையார்களின் மைசூர் இராச்சியம், துணைப்படைத் திட்டத்தின் படி, பிரிட்டிஸ் கிழக்கிந்தியப் பேரரசுக்கு  ஆண்டு தோறும் கப்பம் அல்லது திறை செலுத்தும் நாடாகியது. மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜா உடையார் (1940-1950) ஆட்சிக் காலமான 1947 ல் இந்திய விடுதலைக்குப் பின் உடையார்களின் மைசூர் இராஜியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது 1956 முடிய மைசூர் உடையார் வம்ச மன்னர்களை மைசூர் மகாராஜா என்றே இந்திய அரசால் அழைக்கப்பட்டனர். 1 நவம்பர் 1956 ல் இந்தியாவை மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மைசூர் இராஜியம் கர்நாடகா மாநிலத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது. 1956 முதல் 1964 முடிய உடையார் வம்ச மன்னர்கள் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர்களாகவும் செயல்பட்டனர். பிற சுதேச சமஸ்தான மன்னர்களைப் போன்று உடையார் வம்ச மன்னர்களும் இந்திய நடுவண் அரசிடமிருந்து மன்னர் மானியம் பெற்றனர். 1971 ல் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்புச் சட்டப்படி, 560 சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பல்லாண்டு பதவி வகித்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப் (1974-2013) பின் 2015 ஆம் ஆண்டு முதல் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் மைசூர் மன்னராக பட்டம் வகித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் தசரா விழாவில் மைசூரு தசரா பண்டிகையின் போது, மைசூர் அரண்மனையை அலங்கரித்து, மன்னர் தர்பாரில் அமர்ந்து மக்களுக்கு காட்சியளிப்பார்கள். அது இந்தாண்டும் நடந்தது.தசராவிழா கலாச்சார விழாவாக. யதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா வோடியார் மைசூர்ஹ மகாராஜா தசராவிழாவில் மைசூர் மன்னர் மைசூரின் வோடியார் வம்சத்தின் புகழ்பெற்ற தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பாரம்பரிய தர்பாரை நிகழ்த்துகிறார். மைசூரின் வோடியர்கள் மிகவும் பிரபலமான மன்னர்களின் வம்சம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...