முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பாக நடந்த மைசூர் நவராத்திரி தசரா விழாவில்‌ அரசர் காட்சியளிக்கும் வைபவம்

வாடியார் எனும் உடையார் அரச மரபில் யதுராய உடையார் என்பவர் பொது ஆண்டு 1399 ல் நிறுவினார். உடையார் அரச குலத்தினர் 1399 முதல் 1761 முடிய, பின் 1799 முதல் 1947 முடிய மைசூர் இராச்சியத்தை ஆண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகாவில் இணைக்கப்பட்டது புராணத்தின் படி, உடையார்கள் தங்கள் வம்சாவளியை பகவான் கிருஷ்ணனின் யது குலம் அல்லது யாதவர் எனக் கூறிக்கொள்கின்றனர். வரலாற்றாசிரியர்களான ஷியாம் பிரசாத், நோபுஹிரோ ஓட்டா, டேவிட் லீமிங், ஆயா இகேகேம் ஆகியோர் உடையார்கள் உள்ளூர் நிலப் பிரபுக்கள் எனக் கூறுகின்றனர், அவர்கள் புராணத்தின்படி தங்களை புகழ்பெற்ற சந்திர வம்சத்தின் நேரடி சந்ததியினர் என்று கூறிக்கொள்ளவதுடன் துவாரகையிலிருந்து வந்து இவ்விடத்தின் இயற்கை அழகைக் கண்டு மைசூரிலேயே தங்குமிடமாக மாற்றிக் கொண்டனர்.  1399 ஆம் ஆண்டில் யதுராயர் நிறுவி 1423 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மைசூர் இராச்சியத்தை 1423 முடிய ஆண்டார். யதுராய உடையாருக்குப் பிறகு, மைசூர் இராச்சியம் உடையார் ஆட்சியாளர்களால் பல வெற்றிகளைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் மிகவும் சிறியதாக இருந்து விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன யதுராயருக்குப் பின்வந்த உடையார் வம்ச மன்னர்கள் 1565 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே மைசூர் பகுதியை 600 ஆண்டுகள் ஆண்டனர்.1565 க்குப் பின் மைசூர் தன்னாட்சி உரிமையுடன் 1799 வரை ஆண்டனர். மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1799-1868) ஆட்சியின் போது, இப்பகுதி பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவரது வாரிசுகள் தங்கள் அரச பெயரின் ஆங்கில எழுத்துப்பிழையை வாடியார் என்பதை, பகதூர் என்று மாற்றிக் கொண்டனர். வம்சத்தின் கடைசி இரண்டு மன்னர்கள், நான்காம் கிருட்டிணராச உடையார் மற்றும் ஜெயச்சாமராஜா உடையார், பிரிட்டிஸ் மேலாதிக்க அரசாட்சியை ஏற்றுக்கொண்டனர். கன்னட மொழியில் உடையார் என்பது தலைவர் அல்லது "இறைவன்" எனப் பொருள். அரச வம்சத்தின் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது வோடியார் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன; இது நவீன கன்னட ஒலிபெயர்ப்பில், ″ஒடியார் என்றும் பயன்படுத்தப்படுகிறது1565 ல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் முதலாம் இராச உடையார் (1578-1617) மைசூர் இராச்சியத்தின் எல்லைகளை விரிவுப் படுத்தினார். 1610 ல் தலைநகரை மைசூரிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் காவேரி ஆற்றுத் தீவுப் பகுதியான ஸ்ரீஇரங்கப்பட்டணத்திற்கு மாற்றினார். முதலாம் நரசராச உடையார் (1638-1659) ஆட்சிக் காலத்தில் மைசூர்  திருச்சிராப்பள்ளி வரை விரிவு படுத்தப்பட்டது. சிக்க தேவராச உடையார் (1673-1704) ஆட்சிக் காலத்தில் மைசூர் உச்ச கட்டத்தை அடைந்து. நாட்டின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். நிர்வாகம் 18 துறைகளின் கீழ் கொண்டு வந்து பொருத்தமான வரி விதிப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டது. 1760 முதல் 1799 முடிய மைசூர் இராஜிய அரசாட்சி, தலைமைப் படைத்தளபதி ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் கைக்குச் சென்றது. இவர்கள் பிரிட்டிஸ் கிழக்கிந்தியப் பேரரசை எதிர்த்தனர். 1799 ல் ஸ்ரீஇரங்கப்பட்டினத்துப் போரில், பிரித்தானியர்கள் திப்பு சுல்தானைக் கொன்று, உடையார் வம்ச மன்னர்களிடம் மைசூர் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1796-1868) காலத்தில், உடையார்களின் மைசூர் இராச்சியம், துணைப்படைத் திட்டத்தின் படி, பிரிட்டிஸ் கிழக்கிந்தியப் பேரரசுக்கு  ஆண்டு தோறும் கப்பம் அல்லது திறை செலுத்தும் நாடாகியது. மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜா உடையார் (1940-1950) ஆட்சிக் காலமான 1947 ல் இந்திய விடுதலைக்குப் பின் உடையார்களின் மைசூர் இராஜியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது 1956 முடிய மைசூர் உடையார் வம்ச மன்னர்களை மைசூர் மகாராஜா என்றே இந்திய அரசால் அழைக்கப்பட்டனர். 1 நவம்பர் 1956 ல் இந்தியாவை மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மைசூர் இராஜியம் கர்நாடகா மாநிலத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது. 1956 முதல் 1964 முடிய உடையார் வம்ச மன்னர்கள் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர்களாகவும் செயல்பட்டனர். பிற சுதேச சமஸ்தான மன்னர்களைப் போன்று உடையார் வம்ச மன்னர்களும் இந்திய நடுவண் அரசிடமிருந்து மன்னர் மானியம் பெற்றனர். 1971 ல் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்புச் சட்டப்படி, 560 சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பல்லாண்டு பதவி வகித்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப் (1974-2013) பின் 2015 ஆம் ஆண்டு முதல் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் மைசூர் மன்னராக பட்டம் வகித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் தசரா விழாவில் மைசூரு தசரா பண்டிகையின் போது, மைசூர் அரண்மனையை அலங்கரித்து, மன்னர் தர்பாரில் அமர்ந்து மக்களுக்கு காட்சியளிப்பார்கள். அது இந்தாண்டும் நடந்தது.தசராவிழா கலாச்சார விழாவாக. யதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா வோடியார் மைசூர்ஹ மகாராஜா தசராவிழாவில் மைசூர் மன்னர் மைசூரின் வோடியார் வம்சத்தின் புகழ்பெற்ற தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பாரம்பரிய தர்பாரை நிகழ்த்துகிறார். மைசூரின் வோடியர்கள் மிகவும் பிரபலமான மன்னர்களின் வம்சம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்