முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைக்காட்சி நடிகை சித்ரா தற்கொலை பின்னணியில் தீவிர விசாரணை






சென்னை திருவான்மியூர் காமராஜ் மகள் நடிகை சித்ரா (வயது 29).  விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாகும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்திலுள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  பெங்களூரு பைபாஸ் சாலையிலுள்ள ஹோட்டலில் அறை எண் 113-ல் தங்கியிருந்தவர். அதிகாலையில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு ஹோட்டலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர்  விஜயராகவன் உள்ளிட்ட காவல்துறையினர்   சென்று நடிகை சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். நசரத்பேட்டை போலீஸார் கூறுகையில், ``நடிகை சித்ரா, 9 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் படப்பிடிப்பு  முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்தபோது நிச்சயம் செய்த கணவரும், தொழிலதிபருமான ஹேமந்த் ரவியுடன் அந்த அறையில் தங்கியிருந்திருக்கிறார். குளிக்கச் செல்கிறேன், அதனால் ஹேமந்த் ரவிவை வெளியில் செல்லும்படி நடிகை சித்ரா கூறிவிட்டு அறைக் கதவைப் பூட்டியிருக்கிறார். அதனால் ஹேமந்த் ரவி, வெளியில் காத்திருந்தாராம் .இந்தச் சமயத்தில் நீண்டநேரமாகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. என்பதனால் சந்தேகமடைந்த ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர் கணேஷ் என்பவரிடம் தகவல் தெரிவித்து. மாற்றுச் சாவி மூலம் அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து ஹேமந்த் ரவி அதிர்ச்சியானதாகவும் தகவல்  பிறகுதான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.அது பதிவும் செய்யப்பட்டதாம் .திருமணம் மட்டுமே  இருவருக்கும் விரைவில் அறிவிக்கும் நிலை . இந்தச் சமயத்தில்தான் நடிகை சித்ரா தற்கொலை செய்திருக்கிறார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நடிகை சித்ரா எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்துவருகிறோம். ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது. புடவையால் நடிகை சித்ரா தூக்குப் போட்டதால் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவரின் முகத்திலும் காயங்கள் இருக்கின்றன. அது, நகக்கீறல் போல இருப்பதாகப் காவல்துறை தகவல் 

காரணம் என்ன என்று விசாரணை நடந்து வருகிறது. நடிகை சித்ரா தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியிருக்கிறோம். அவரின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் அவரின் இறப்பு குறித்த தகவல் தெரியவரும்" என்றனர்.

நடிகை சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சில தகவல்களைக் கூறியிருக்கிறார். அதில் சில தினங்களாக நடிகை சித்ரா மன அழுத்ததில் இருந்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகை சித்ரா குறித்து அவருக்கு நெருங்கிய சின்னத்திரை நடிகைகள் சிலர் .``நடிகை சித்ரா, 2013 ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமனார். பிறகு சில தனியார் டிவி-க்களில் வீடியோ ஜாக்கியாகப் பணியாற்றினார். வி.ஜே சித்து என்ற பெயரில் அறிமுகமானார். அதன் பிறகுதான் `சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடித்தார். பிறகு `பாண்டியன் ஸ்டோர்ஸி’ல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கலகலப்பாகப் பேசக்கூடியவர். கொரோனா காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திருமணக் கோலத்தில் அவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில் எங்களுக்கு அவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

சென்னையைச் சேர்ந்த   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் தொடங்கி 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் 'சட்டம் சொல்வது என்ன'  நிகழ்ச்சியே இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி இதையடுத்துத் தொகுத்து வழங்கிய 'நொடிக்கு நொடி அதிரடி', 'ஊர் சுத்தலாம் வாங்க' நிகழ்ச்சிகளுக்கு நல்ல  வரவேற்பு கிடைத்தைத்தொடர்ந்து, சன் டிவியில் வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர் எனப் பன்முகத்தோடு வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் ஆகிய சேனல்களில் முன்னணியில்  இயங்கி வந்தார். 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலிருந்து வந்த அழைப்பு அவரது சின்னத்திரை வாழ்க்கையில் திருப்புமுனை. சித்ரா என்ற பெயர் மக்களின் மனதில்  முல்லையாக நின்றதும் 

தொழிலதிபருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரது முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் உடலைக் கைப்பற்றிய காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, தற்கொலைக்கான காரணம் தெரியும்.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருந்தார். அவரின் சமூக வலைதள பக்கத்தில் தன்னைத் தொகுப்பாளர், டான்ஸர், நடிகை என நடிகை சித்ரா குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப் பிறகே நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்துவரும் நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...